என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • ஸ்கூட்டருக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் சங்குபேட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 54). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் பரமேஸ்வரி (23) பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு இரவு 9 மணியளவில் வீடு திரும்பினார். பின்னர் பரமேஸ்வரி தனது ஸ்கூட்டரை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை 2 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் குமாரின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டருக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றனர்.

    ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்டு குமார் மற்றும் அவரது குடும்பத்தினா் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் ஸ்கூட்டரில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றியும், மண்ணை போட்டும் அணைத்து பார்த்தனர். ஆனாலும் ஸ்கூட்டர் எரிந்து தீக்கிரையானது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் குமார் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும், தொடர்ந்து விசாரணை நடத்தியும் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • இரு சக்கர வாகனம் மீது கார் மோதி துணி வியாபாரி பலியானார்
    • வியாபாரத்திற்கு சென்ற போது சம்பவம்

    பெரம்பலூர்,

    விருதுநகர் மாவட்டம் சுத்தமடம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் மகன் சிவக்குமார் (வயது 45). இவர் பெரம்பலூர் வெங்க டேசபுரம் கோல்டன் கேட்ஸ் பள்ளி அருகில் தங்கி மோட்டார் சைக்கிளில் சென்று துணி வியாபாரம் செய்து வந்தார்.

    வழக்கம் போல் சிவக்குமார் இன்று காலை தொழுதூருக்கு துணி வியாபாரம் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 4 ரோடு பாலம் அருகே தனியார் பெட்ரோல் பங்க் முன்பு சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது சிவகங்கையில் இருந்து சென்னை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் தவசி மகன் கவியரசன் (வயது 19) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார் எதிர்பார விதமாக சிவக்குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் சிவக்குமார் தூக்கி வீசப்பட்டு ரத்த ெவள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கார் டிரைவர் கவியரசன், காரில் இருந்த காளையார் கோவிலை சேர்ந்த நடராஜ் (43), அசோக்குமார் ஆகிேயார் காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமார் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பெரம்பலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
    • மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவரும், முன்னாள் ராணுவ அலுவலருமான பெரியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் பால் உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளதால், பெரம்பலூரில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் புதிதாக தொடங்க வேண்டும். நகர் ஊரமைப்பு அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால், நிரந்தர கட்டிடத்தில் செயல்படும் வகையில் புதிதாக அலுவலகம் கட்டித்தர வேண்டும். மாவட்ட மைய நூலகத்தில் முழுமையாக சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்க வேண்டும். பெரம்பலூர் வருவாய் கோட்டத்தை 2 ஆக பிரித்து குன்னத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும். தாலுகா தலைநகரான குன்னம் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவக்குமார், பொருளாளர் வெங்கடாசலம், மாவட்ட ஆலோசகரும், பன்னாட்டு ஜேசீஸ் சங்கத்தின் பயிற்சியாளருமான வைரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்க அலுவலகம் தீப்பற்றி எரிந்து நாசமானது
    • அரை மணி நேரம் போராடி அணைத்தனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் உள்ளே வரும் நுழைவு பகுதி அருகே மாவட்ட தலைமை சுற்றுலா வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்துக்கு கீற்றுக்கொட்டகையிலான அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மேற்கூரை நேற்று காலை திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அலுவலகத்தில் உள்ளே இருந்த வேன் டிரைவர்கள், உரிமையாளர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்ததால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் உடனடியாக இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தொிவித்தனர். அதன்பேரில் நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கீற்று கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் அரை மணி நேரம் போராடி அணைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

    பெரம்பலூர்

    பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 62). இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள அவரது வயலில் கருவேல மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • புகையிலை பொருட்கள் விற்ற

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த வாலிகண்டபுரம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் மங்களமேடு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சக்கரபாணி (53), சங்கர் (51) ஆகியோர் தங்கள் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மூட்டையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சக்கரபாணியிடம் இருந்து சுமார் ரூ.12,990 மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், சங்கரிடம் இருந்து சுமார் ரூ.6,600 மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் ஊதியத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) கணக்கில் செலுத்திட வேண்டும். கடந்த மே மாதம் 15 நாட்கள் வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அறிவித்த தின ஊதியம் ரூ.580-ஐ வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் நேற்று முன்தினம் அதிகாலை முதலே பணிகளை புறக்கணித்து காலையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். மதியம், இரவு நேர உணவுகளை அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் போராட்டக்காரர்களிடம் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில் போலீசாரும், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராதா தலைமையில் அலுவலர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆணையாளர் ராதா பெரம்பலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகள் 10 நாட்களுக்குள் முடித்து வைக்கப்படும் என்று எழுதி கையெழுத்திட்டு போராட்டக்காரர்களிடம் கொடுத்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நேற்று வழக்கம் போல் அவர்கள் வந்து தங்களது பணிகளை செய்தனர்.

    • போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள கைதிகளை உடனடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள கைதிகளை உடனடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த இப்ராஹிம் (வயது 23) என்பவரை அரும்பாவூர் போலீசார் கைது செய்து வேப்பந்தட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    • மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்கள் மற்றும் மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ் செல்வி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலத்தூர் தாலுகா, கொளத்தூர்-திம்மூர் பிரிவு ரோடு அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த நொச்சிக்குளம் மேலத்தெருவை சேர்ந்த வேல்முருகன் (வயது 35), அன்பழகன் (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்கள் மற்றும் மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    • பெரம்பலூரில் நகராட்சி துய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்
    • இதனால் பெரம்பலூரில் தூய்மை பணி பாதிக்கப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியா ளர்கள் சிஐடியு தொழி ற்சங்கம் சார்பில் பல்வேறு கோரி க்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்ட ங்கள் நடத்தியும், கலெக்டரிடம் மனு கொடுத்தும் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்நிலையில் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியா ளர்கள் பணியினை புறக்க ணித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு கிளை செயலாளர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் போராட்டத்தை தொடங்கிவைத்தார். மாவட்ட தலைவர் ரெங்க நாதன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நகராட்சி, பேரூரா ட்சிகளில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து தனியாரிடம் தாரை வார்க்கும் அரசாணை எண் 10,139 ஐ உடனடியாக திரும்ப பெறவேண்டும், கடந்த மே மாத சம்பளத்தை முழுமையாக வழங்கிட வேண்டும்,

    ஊதியத்தில் பிடித்தம் செய்த இபிஎப் தொகையை முறைகேடு செய்யாமல் கணக்கில் செலுத்திட வேண்டும், தினக்கூலி, சுய உதவிக்குழு, ஒப்பந்த தொழிலாளி ஆகிய பெயர்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்யும் தூய்மை பணியா ளர்கள், டிரை வர்கள், குடிநீர் பணியா ளர்கள் உள்ளிட்ட ஊழி யர்களை நிரந்த ரப்படுத்த வேண்டும், கலெக்டர் அறிவித்த தினக்கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். 8 மணிநேர வேலை வாரவிடுப்பு, பண்டிகைகால விடுப்பு உள்ளிட்ட அடிப்படை சட்டங்களை அமல் படுத்த வேண்டும்

    இஎஸ்ஐ அடையாள அட்டை, சம்பளசீட்டு, பாதுகாப்பு உபகரணங்கள், மற்றும் சீருடைகளை தடையின்றி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகள் வலியுறு த்தப்பட்டது.கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணியினை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் 90 பெண்கள் உட்பட140 பேர் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூரில் தூய்மை பணி பாதிக்கப்பட்டது.

    • பெரம்பலூரில் உழவர் சந்தை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது
    • பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு உழவர் சந்தைகளை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு கடைகள் எதுவும் இருக்க கூடாது என்ற அரசின் உத்தரவை அமுல்படுத்த கோரி கலெக்டர் கற்பகம் உத்தரவி ட்டிருந்தார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் உழவர் சந்தை அருகில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகள் நேற்று அகற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடந்தது. பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு உழவர் சந்தைகளை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு கடைகள் எதுவும் இருக்க கூடாது என்ற அரசின் உத்தரவை அமுல்படுத்த கோரி கலெக்டர் கற்பகம் உத்தரவி ட்டிருந்தார். இதன்படி நகராட்சி ஆணையர் (பொ) ராதா தலைமையில் நகராட்சி பணியாளர்கள் உழவர் சந்தை அருகில் ஆக்கி ரமித்து கட்டப்ப ட்டிருந்த தரைக்கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு சார்பில் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட தரைக்கடை வியபாரிகள் கலந்து கொண்டனர்.

    • சேற்றில் சிக்கிய பசுமாடு மீட்கப்பட்டது.
    • பசுமாட்டை வெளியே கொண்டு வர முத்துசாமி பல்வேறு முயற்சிகள் செய்தும் வெளியே கொண்டு வர முடியவில்லை

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நுத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 40), விவசாயி. இவர் தனது வயலில் பசுமாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வயலின் அருகே உள்ள புதைக் குழியில் பசுமாடு இறங்கி சேற்றில் சிக்கிக் கொண்டது. பசுமாட்டை வெளியே கொண்டு வர முத்துசாமி பல்வேறு முயற்சிகள் செய்தும் வெளியே கொண்டு வர முடியவில்லை. இதனை தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சேற்றில் சிக்கிய பசுமாட்டை கயிறு கட்டி வெளியே மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.



    ×