என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் நகராட்சி துய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்
    X

    பெரம்பலூரில் நகராட்சி துய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்

    • பெரம்பலூரில் நகராட்சி துய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்
    • இதனால் பெரம்பலூரில் தூய்மை பணி பாதிக்கப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியா ளர்கள் சிஐடியு தொழி ற்சங்கம் சார்பில் பல்வேறு கோரி க்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்ட ங்கள் நடத்தியும், கலெக்டரிடம் மனு கொடுத்தும் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்நிலையில் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியா ளர்கள் பணியினை புறக்க ணித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு கிளை செயலாளர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் போராட்டத்தை தொடங்கிவைத்தார். மாவட்ட தலைவர் ரெங்க நாதன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நகராட்சி, பேரூரா ட்சிகளில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து தனியாரிடம் தாரை வார்க்கும் அரசாணை எண் 10,139 ஐ உடனடியாக திரும்ப பெறவேண்டும், கடந்த மே மாத சம்பளத்தை முழுமையாக வழங்கிட வேண்டும்,

    ஊதியத்தில் பிடித்தம் செய்த இபிஎப் தொகையை முறைகேடு செய்யாமல் கணக்கில் செலுத்திட வேண்டும், தினக்கூலி, சுய உதவிக்குழு, ஒப்பந்த தொழிலாளி ஆகிய பெயர்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்யும் தூய்மை பணியா ளர்கள், டிரை வர்கள், குடிநீர் பணியா ளர்கள் உள்ளிட்ட ஊழி யர்களை நிரந்த ரப்படுத்த வேண்டும், கலெக்டர் அறிவித்த தினக்கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். 8 மணிநேர வேலை வாரவிடுப்பு, பண்டிகைகால விடுப்பு உள்ளிட்ட அடிப்படை சட்டங்களை அமல் படுத்த வேண்டும்

    இஎஸ்ஐ அடையாள அட்டை, சம்பளசீட்டு, பாதுகாப்பு உபகரணங்கள், மற்றும் சீருடைகளை தடையின்றி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகள் வலியுறு த்தப்பட்டது.கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணியினை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் 90 பெண்கள் உட்பட140 பேர் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூரில் தூய்மை பணி பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×