search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கைது
    X

    போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கைது

    • போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள கைதிகளை உடனடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள கைதிகளை உடனடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த இப்ராஹிம் (வயது 23) என்பவரை அரும்பாவூர் போலீசார் கைது செய்து வேப்பந்தட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×