

பெரம்பலூர்,
பெரம்பலூர் உழவர் சந்தை அருகில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகள் நேற்று அகற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடந்தது. பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு உழவர் சந்தைகளை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு கடைகள் எதுவும் இருக்க கூடாது என்ற அரசின் உத்தரவை அமுல்படுத்த கோரி கலெக்டர் கற்பகம் உத்தரவி ட்டிருந்தார். இதன்படி நகராட்சி ஆணையர் (பொ) ராதா தலைமையில் நகராட்சி பணியாளர்கள் உழவர் சந்தை அருகில் ஆக்கி ரமித்து கட்டப்ப ட்டிருந்த தரைக்கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு சார்பில் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட தரைக்கடை வியபாரிகள் கலந்து கொண்டனர்.