என் மலர்tooltip icon

    நீலகிரி

    • மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக வசீகரிக்கிறது
    • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    அரவேணு, 

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்நாட்டு, வெளிநாட்டு தாவரங்கள் வளர தேவையான காலநிலை நிலவுகிறது. மேலும் இங்கு ஆங்கிலேயர் காலத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் காட்டு சூரிய காந்தி விதைகள் தூவப்பட்டன.

    இவை தற்போது மண்ணின் உறுதி தன்மையை அதிகரித்து உள்ளன. மேலும் நிலச்சரிவையும் கட்டுப்படுத்தி வருகிறது. கோத்தகிரியில் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் காட்டு சூரிய காந்தி மலர்கள் பூக்க தொடங்கும். அதன்படி இவை தற்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலும், அரவேனு முதல் குஞ்சப்பனை வரையிலும் சாலையோரங்களில் மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன.

    வாசம் இல்லாத மலராக இருந்தபோதிலுலும் அவை தற்போது காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் மலர்ந்து நிற்கின்றன. எனவே அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் காட்டு சூரியகாந்தி மலர்கள் பூத்துக்குலுங்குவதை ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர்.

    • நீலகிரி மாவட்ட தி.மு.க ஆலோசனை கூட்டம், அவைதலைவர் போஜன் தலைமையில் நடைபெற்றது
    • டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-ஆ.ராசா பேச்சு

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்ட தி.மு.க ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைதலைவர் போஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கழக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.இராசா கலந்துகொண்டு பேசினார். பின்னர் நடந்த கூட்டத்தில் டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ், திருத்தப்பட்ட தினசம்பளம் 438 ரூபாய் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா எம்.பி.க்கு பாராட்டு தெரிவிப்பது,

    கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிறப்புடன் நடத்துவது, எம்.பி தேர்தலில் கழக வெற்றிக்கு பாடுபடுவது, சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி நடக்க உள்ள தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில உரிமை மாநாட்டில் திரளாக கலந்துகொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, இளஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், காமராஜ், லாரன்ஸ், நெல்லை கண்ணன், பிரேம்குமார், பீமன், சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, பில்லன், தொரை, ஷீலாகேத்ரின்,

    பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், சதீஷ்குமார், நடராஜன், கண்டோன்மென்ட் நகரிய செயலாளர் மார்டின், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், கோமதி, விவேகானந்தன், வெங்கடேஷ், காந்தல் ரவி, எல்கில் ரவி,

    மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நவுபுல், பாபு, நாகராஜ், பத்மநாபன், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ராம்குமார், சுனிதா, கீர்த்தனா, மாயன், நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, ஷீலாகேத்ரின், பரிமளா, சிவகாமி,

    பேரூராட்சி தலைவர்கள் கௌரி, கலியமூர்த்தி, சத்தியவாணி, ஹேமாமாலினி, பேபி, ராதா, ஜெயகுமாரி, சித்ராதேவி, வள்ளி, பங்கஜம் உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி நன்றி கூறினார்.

    • மேட்டுப்பாளையம்- கோத்தகிரி, மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
    • தொடர் மழையால் நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    நீலகிரி:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இரவு விடிய, விடிய மழை பெய்தது. குன்னூர், கோத்தகிரி பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. ரோட்டில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நடுரோட்டில் மரங்களும் முறிந்து விழுந்தன.

    இதன் காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. சாலையின் இருபுறமும் பல மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

    அந்த சாலையில் அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் மாற்று வாகனங்கள் மூலம் ஊருக்குசென்றனர். அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 24.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. தொடர் மழையால் நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீலகிரிக்கு வருவதை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேட்டுப்பாளையம்- கோத்தகிரி, மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பாதையை பொதுமக்கள் இன்று பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கோவையில் இருந்து 2 தமிழக பேரிடர் மீட்பு படை வர உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார்.
    • தமிழக அரசு மருத்துவத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

     அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சிகிச்சைக்காகவும் மற்றும் அவசர மருத்துவ உதவிக்காகவும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இதனால் அவ்வப்போது உரிய நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் ராதிகா சாஸ்திரி, சார்லஸ் நாதன், ஜான், விபின், மற்றும் பொறியாளர் ஜான்சன் ஆகியோர் குழுவாக சேர்ந்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு பராமரிப்பு இன்றி இருந்த சுகாதார நிலையத்தை ரூ.85 லட்சம் மதிப்பில் புதுப்பித்து சுகாதார நிலையத்துக்கு தேவையான நவீன கருவிகள் மற்றும், மருத்துவமனைக்கு தேவையான உபகரண பொருட்கள் மட்டுமின்றி அவசர சிகிச்சைக்கான வார்டுகளும் மற்றும் பிரசவ வார்டுகளும் அமைக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் இப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் உட்பட 57 கிராமங்கள் உள்ளன. சுமார் 75 ஆயிரம் பேர் இந்த மருத்துவமனையால் பயனடைவார்கள். இதனை கட்டிக் கொடுத்த தன்னார்வ லர்களுக்கு வாழ்த்துக்க ளையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். தமிழக அரசு மருத்துவத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஊட்டியில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு 150 பேர் வீதம் மூன்று ஆண்டுகளில் 450 மருத்துவர்கள் பயிற்சி பெற்று செல்கின்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் குன்னூர் கோட்டாட்சியர் பூசன குமார், தாசில்தார் கனிசுந்தரம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    • நகரமன்ற துணை தலைவர் பா.மு.வாசிம் ராஜா தொடங்கி வைத்தார்
    • நகரமன்ற உறுப்பினர்கள் சையதுமன்சூர், பாக்கியவதி உள்ளிட்டோர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட வசம்பள்ளம் குப்பை சேமிப்பு கிடங்கில், திடக்கழிவு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகள் சேமிப்பு மற்றும் தரம் பிரிக்கும் கிடங்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை குன்னூர் நகரமன்ற துணை தலைவரும், தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளருமான பா.மு.வாசிம் ராஜா, நகர கழக செயலாளரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான எம்.ராமசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், நகர துணை செயலாளர்கள் முருகேசன், சாந்தாசந்திரன், நகரமன்ற உறுப்பினர்கள் சையதுமன்சூர், பாக்கியவதி, ராபர்ட், வசந்தி, செல்வி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் சிக்கந்தர் மற்றும் நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயராம் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • போக்குவரத்து பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • இதன்காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அருவங்காடு,

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழையும், பனிப்பொழிவும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அவ்வப்போது கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், பர்லியாறு பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது குன்னூரில் இருந்து கோவைக்கு ஒரு சுற்றுலா காரில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் உதவியுடன் சாலையில் கிடந்த மண் குவியல், கற்களை அகற்றி சீர்படுத்தினர். இதன்காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிா்வாகம் செய்து தருவதில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    • இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், பொது மக்களின் கோரிக்கைகள் மீது நடவ டிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததை அடுத்து போ ரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி 1-வது வாா்டுக்கு உள்பட்ட குளிச்சோலை பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதிக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

    மேலும், இப்பகுதியில் குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிா்வாகம் செய்து தருவதில்லை என்றும், அதிகாரிகள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களிடம் கூறினால் அலட்சியமான பதில்களையே அவா்கள் கூறுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

    இப்பகுதிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பணிக்குச் செல்வோா், முதியவா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

    இந்நிலையில் குளிச்சோலை பகுதியில் சாலையை சீரமைத்துத் தர வேண்டும், பஸ் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    தகவல் அறிந்து வந்த புதுமந்து காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கவுன்சிலர் உடனடியாக இங்கு வர வேண்டும் எனவும், இல்லாவிட்டால் பஸ்சை விடுவிக்கமாட்டோம் என கிராம மக்கள் கூறினா்.

    இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், பொது மக்களின் கோரிக்கைகள் மீது நடவ டிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததை அடுத்து போ ரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

    • தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி திறந்துவைத்தாா்
    • ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக சீரமைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் அடுத்த தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள செம்பக்கொல்லி சாலை, பல ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது.

    எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனா். இந்தநிலையில் செம்பக்கொல்லி சாலை தற்போது ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக சீரமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான திறப்பு விழா நடந்தது. இதில் தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி கலந்துகொண்டு கான்கிரீட் சாலையை திறந்துவைத்தாா்.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவா் யூனஸ்பாபு, பேரூராட்சி உறுப்பினா்கள் மாதேவ், நாசா், ஹனீபா, முகாஷ், ஜோஸ், ரசீனா, ஷாஹினா, ஷாதியா, ரம்ஷீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • தனிப்படை போலீசார் தேடுகிறார்கள்
    • 4 பேரும் நேற்று இரவு சேலாஸ் பகுதியில் சுற்றி திரிந்ததாக தகவல்

    அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள கிளிஞ்செடா எம்.ஜி.ஆர் காலனி சதீஷ் மகன் டேவிட் ஜான் (வயது 15), பாரதி நகர் பாலகிருஷ்ணன் மகன் தர்ஷன் (வயது 15), கிருஷ்ணன் மகன் குணா (வயது 15), முரளி மகன் கதிரேசன் (வயது 15 ) ஆகிய 4 பேரும் சேலாஸ் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் சம்பவத்தன்று பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் வீடு திரும்ப வில்லை. எனவே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்களின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

    இதற்கிடையே மாயமான ஒரு மாணவனின் வீட்டில் இருந்து கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், எங்கள் பெற்றோர்கள் ஒழுங்காக படிக்க வேண்டுமென கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் எங்களை திட்டுவதுடன் அடிக்கவும் செய்கின்றனர்.

    எனவே எங்களுக்கு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. இதனால் நாங்கள் 4 பேரும் வீட்டை விட்டு வெளியேறுகிறோம். எங்களைத் தேட வேண்டாம், மேலும் போலீ சாரிடம் கூறி எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கொலகொம்பை போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மாயமான 4 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர்கள் 4 பேரும் நேற்று இரவு சேலாஸ் பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், பின்னர் அங்கு வந்த ஒரு பஸ்சில் ஏறி வெளியூர் சென்றதாகவும் தெரியவந்து உள்ளது.

    எனவே தனிப்படை போலீசார் நீலகிரி மட்டு மின்றி கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஊட்டி ஆகிய பகுதிகளில் உள்ள போலீசாருடன் ஒருங்கிணைந்து மாயமான 4 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
    • குழந்தைகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    அருவங்காடு,

    அருவங்காடு கார்டைட் பேக்டரி பகுதியில் உள்ள அங்கூர் வித்யாமந்திர் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், ப்ரீ-கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, கையெழுத்து போட்டி, உச்சரிப்பு போட்டி, மாறுவேடப் போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன.

    இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னதாக தலைவர் ஸ்ரீமதி ராஷிகோயல், துணைத் தலைவர் மெளஸ்மி மல்லிக் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இதில் குழந்தைகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்
    • 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை

    ஊட்டி,

    கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கே.பி.டி.எல் பவுண்டேஷன், ஆல் த சில்ரன் ஒயிட் அரோ டிரஸ்ட், நீலகிரி உதவும் கரங்கள் ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், கரியசோலை அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார். நீலகிரி உதவும் கரங்கள் அமைப்பு நிர்வாகி சாரதா முன்னிலை வகித்தனர்.

    கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முகாமினை துவக்கி வைத்தார்.

    ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் அந்தோனியமமாள், ராகுல் உள்ளிட்டோர் கண் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில் 50க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில் 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    • இந்த ஆண்டு மட்டும் 32 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்
    • 841 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.59.16 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    ஊட்டியில் 70-ஆவது கூட்டுறவு வார விழா கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. சுற்றுலா அமைச்சா் கா.ராமசந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடர்ந்து 64 குழுக்களைச் சோ்ந்த 964 பயனாளிகளுக்கு ரூ.6.39 கோடி மதிப்பில் கடனு தவிகள் வழங்கப்பட்டன.

    தொடா்ந்து அமைச்சா் கா.ராமசந்திரன் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறை சாா்பில் 20,838 பயனாளிகளுக்கு ரூ.70.57 கோடி மதிப்பில் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல 3,179 சுய உதவி குழுக்களைச் சோ்ந்த 31,996 பயனாளிகளுக்கு ரூ.89.53 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் 2022-2023-ம் நிதியாண்டில் 28,565 விவசாயிகளுக்கு ரூ.240.74 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. 2023-2024 நிதியாண்டில் 31.10.2023 வரை மட்டும் 12,072 விவசாயிகளுக்கு ரூ.112 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர மாற்றுத்திறனா ளிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. உரிய காலத்தில் திருப்பி செலுத்துபவா்க ளுக்கு வட்டி முழுவதும் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 32 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

    24 விதவைகளுக்கு ரூ.6 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 841 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.59.16 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கூட்டுறவுத்துறை மூலம் 258 முழுநேர நியாய விலைக் கடைகள், 77 பகுதி நேர கடைகள் என மொத்தம் 335 ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 34 நடமாடும் நியாய விலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடா்ந்து தெங்குமரஹாடா, எடப்பள்ளி கூட்டுறவுச் சங்கங்களுக்கு பொருட்களை கொண்டுச் செல்ல வசதியாக 2 புதிய லாரிகள் வழங்கப்பட்டன. பின்னர் அமைச்சரும், எம்.பி.யும் அங்கு அமைக்க ப்பட்டு இருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டனா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளா் வாஞ்சிநாதன், ஊட்டி ஊராட்சி.ஒன்றிய தலைவர் மாயன், நகராட்சி துணைதலைவர் ரவிக்குமார் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    ×