என் மலர்
நீலகிரி
ஊட்டி:
குன்னூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் அதிக அளவில் வன பகுதிகளும், தேயிலை தோட்டங்களும் உள்ளன.
இங்கு கரடி, சிறுத்தை, காட்டாடு, காட்டெருமை, காட்டு பன்றி போன்ற வனவிலங்குகள் வன பகுதிகளிலிருந்து ஊருக்குள் உணவை தேடி வருவது வழக்கம். அவ்வாறு வரும் காட்டு பன்றி, காட்டாடு போன்றவற்றை பிடிக்க சில சமூக விரோதிகள் அவுட்டுக்காய் என்ற வெடி பொருளை இந்த விலங்குகள் சாப்பிடக்கூடிய உணவுக்கு அடியில் வைத்து விடுவார்கள்.
இதனை வன விலங்குகள் சாப்பிட்ட உடன் வாய் மற்றும் தலை வெடித்து சிதறும். பின்னர் இதன் உடல்களை எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவார்கள்.
இந்நிலையில் குன்னூர் கரோலினா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் யாரோ மர்மநபர்கள் காட்டு பன்றியை பிடிக்க அவுட்டுக்காய் வெடியை வைத்துள்ளதாக குன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவுட்டுக்காய் வெடியை கைப்பற்றி செயல் இழக்க செய்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நீர் பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தேயிலை பூங்காவில் அலங்கார செடிகள் மற்றும் மலர் செடிகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கி 2 மாதங்களுக்கும், அக்டோபர் மாதம் தொடங்கி சில நாட்களும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும்.
6 மாதங்கள் மழை கொட்டி தீர்த்தவுடன் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் இருந்து நீர் பனி விழத் தொடங்கும். தொடர்ந்து, நவம்பர் முதல் வாரத்தில் இருந்து உறைபனி கொட்ட தொடங்கி விடுகிறது. ஆனால், இம்முறை தென்மேற்கு பருவமழை குறித்த சமயத்தில் தொடங்கி கடந்த மாதம் வரை பெய்தது.
இதனால், உறைப்பனி விழுவதிலும் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான மலர் செடிகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டாவில் பனியின் தாக்கம் மற்ற இடங்களை காட்டிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால், இங்குள்ள தேயிலை பூங்காவில் உள்ள அலங்கார செடிகள், மலர் செடிகள் ஆகியன பனியில் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, பூங்காவில் உள்ள மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகள் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அவைகளை பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் நீர் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், குளிரும் அதிகமாக காணப்படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா அருகே தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தேயிலை பூங்கா உள்ளது. இங்கு 6 ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதன் நடுவே சுற்றுலா பயணிகள் நடந்து சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். அவர்களின் குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் உள்ளது.
மேலும் நடைபாதையில் நடந்து சென்றபடி மலர் அலங்கார செடிகளை கண்டு ரசிக்கவும், காட்சி மாடத்தில் நின்று பூங்காவின் இயற்கை அழகை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழவும் வசதி உள்ளது.
சமீபத்தில் அங்கு சுற்றுலா பயணிகளை கவர இந்திய வரைபடம் தமிழ்நாடு குறியூடு போன்ற அலங்கார செடிகள் நடவு செய்யப்பட்டன. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாகவும், நேர கட்டுப்பாடுகள் காரணமாகவும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளது.
இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை மூலம் சுற்றுலா பயணிகளை கவரவும், பூங்காவை மேம்படுத்தவும் புதிய அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தேயிலை பூங்காவில் இயற்கையாக அமைந்த பாறையையொட்டி ஊற்று தண்ணீ எப்போதும் சென்று கொண்டே இருக்கிறது.
இந்த தண்ணீரை திசை திருப்பி பாறையில் இருந்து விழுவது போல் செயற்கை நீர்வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கு வர்ணம் தீட்டப்பட்டு வாத்து நிற்பது போல காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் அருகே மலர்கள் கொட்டுவது போல் அலங்கார செடிகளுடன் அருவி போன்று அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்காக மலைச்சரிவில் 12 பாத்திகள் அமைக்கப்பட்டு சுற்றிலும் கற்கள் வைக்கப்பட்டன. அதன் நடுவே தயார்படுத்தப்பட்ட மண்ணில் ஐரிஸ், கோல்டன் டொரண்டா கஜேனியா உள்பட 5 ரகங்களை சேர்ந்த 50 ஆயிரம் அலங்கார செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.
புதிய அலங்காரம் முன்பு நடைபாதை ஏற்படுத்தி, இருக்கை வசதி போடப்பட்டுள்ளது. அதன் முன்பு சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து செல்கின்றனர்.
இந்த செடிகள் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதால் நன்றாக வளர்ந்தால் மேலும் அழகாக இருக்கும். இதற்கு தண்ணீர் பாய்த்து, உரமிட்டு பராமரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது. இதுதவிர காலையில் குளிருடன் உறைபனியும் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் அடித்தது. மாலை நேரத்திற்கு பிறகு இதமான காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது.
இரவு 10 மணியளவில் கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கோத்தகிரி பஜார் பகுதி, கிராமப்புற பகுதிகள், கொடநாடு, சோலூர்மட்டம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. லேசான தூரலாக தொடங்கி பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.
இரவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இன்று காலையும் கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக கோத்தகிரி- குன்னூர் சாலை, கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை, பஸ் நிலைய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊரடங்கு என்பதால் இரவில் வாகன போக்குவரத்து இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
தொடர்ந்து காலையிலும் மழை பெய்து வருவதால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், அதிகாலையில் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
மழைக்கு நடுவே உறைபனி மற்றும் குளிரின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். குளிரில் இருந்து காத்துகொள்ள தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.
தொடர் உறைபனியின் தாக்கத்தால் தேயிலை செடிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
நேற்று மாவட்டத்தில் புதிதாக மேலும் 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 36,026 ஆக உயர்ந்துள்ளது.
44 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,481 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவ மனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 1,325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று அதிகரித்து வந்தாலும் சுற்றுலா தொழில் பாதிக்காமல் இருக்க, விதிமுறைகளை பின்பற்றி ஓட்டல்கள், லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குன்னூர்- கோத்தகிரி சாலையில் உள்ள ஓட்டலில் மேலாளர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள், பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அங்கு வேலை பார்க்க கூடிய 28 ஊழியர்களுக்கு தொற்று உறுதியானது. உடனடியாக ஊழியர்கள் அனைவரும் ஓட்டலிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஓட்டல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யும் பணியும் நடந்தது.






