search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water ice"

    • ஐ.ஐ.டி. தன்பாத் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து விண்வெளி பயன்பாட்டு மைய இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • நிலவில் நீர் பனியின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது.

    பெங்களூரு:

    நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஐ.ஐ.டி. கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் பிராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐ.ஐ.டி. தன்பாத் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து விண்வெளி பயன்பாட்டு மைய (எஸ்.ஏ.சி.) இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது நிலவில் நீர் பனியின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது. எனவே நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    ஜெட் பிராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐ.ஐ.டி. தன்பாத் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து விண்வெளி பயன்பாட்டு மைய (எஸ்.ஏ.சி.) இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    நிலவில் நீர் பனியின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது.

    சந்திரனில் உறைந்த நிலையில் ஐஸ் படிமங்கள் உள்ளதால் அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். #NASA
    வாஷிங்டன்:

    சந்திரனில் ஆய்வு நடத்த கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் ‘இஸ்ரோ’ நிறுவனம் சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது.

    அந்த விண்கலம் நடத்திய ஆய்வில் சந்திரனில் உறைந்த நிலையில் ஐஸ் படிமங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவை கருப்பு நிறத்திலும், மிகவும் குளிராகவும் இருந்தது. எனவே இங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என இஸ்ரோ தெரிவித்தது.

    அது குறித்து அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சந்திரனின் தென் துருவத்தில் பெரும்பாலான ஐஸ் படிமங்கள் மிகவும் கடினமான நிலையில் அடர்த்தியாக உள்ளன. அதே நேரத்தில் வடதுருவத்தில் உள்ள ஐஸ் படிமங்கள் பரந்து விரிந்த நிலையில் அடர்த்தியற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    எனவே சந்திரனில் சந்திராயன்-1 விண்கலம் கண்டுபிடித்தது ஐஸ் படிமங்கள்தான். ஆகவே அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். #NASA
    ×