search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டேலியா செடிகளை உறைபனியில் இருந்து பாதுகாக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு மூடப்பட்டுள்ளது
    X
    டேலியா செடிகளை உறைபனியில் இருந்து பாதுகாக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு மூடப்பட்டுள்ளது

    நீலகிரியில் நீர் பனியின் தாக்கம் அதிகரிப்பு- மலர் செடி பாதுகாக்கும் பணி தீவிரம்

    ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டாவில் பனியின் தாக்கம் மற்ற இடங்களை காட்டிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நீர் பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தேயிலை பூங்காவில் அலங்கார செடிகள் மற்றும் மலர் செடிகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கி 2 மாதங்களுக்கும், அக்டோபர் மாதம் தொடங்கி சில நாட்களும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும்.

    6 மாதங்கள் மழை கொட்டி தீர்த்தவுடன் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் இருந்து நீர் பனி விழத் தொடங்கும். தொடர்ந்து, நவம்பர் முதல் வாரத்தில் இருந்து உறைபனி கொட்ட தொடங்கி விடுகிறது. ஆனால், இம்முறை தென்மேற்கு பருவமழை குறித்த சமயத்தில் தொடங்கி கடந்த மாதம் வரை பெய்தது.

    இதனால், உறைப்பனி விழுவதிலும் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான மலர் செடிகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டாவில் பனியின் தாக்கம் மற்ற இடங்களை காட்டிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால், இங்குள்ள தேயிலை பூங்காவில் உள்ள அலங்கார செடிகள், மலர் செடிகள் ஆகியன பனியில் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, பூங்காவில் உள்ள மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகள் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அவைகளை பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இரவு நேரங்களில் நீர் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், குளிரும் அதிகமாக காணப்படுகிறது.

    Next Story
    ×