என் மலர்
நீலகிரி
குமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியைச் சேர்ந்த 23 பேர் ஒரு வேனில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். ஊட்டியில் பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர்கள் நேற்று மாலை அவர்கள் வேனில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
வேன் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் வந்து கொண்டு இருந்தது. பர்லியாரை அடுத்துள்ள கோழிக்கரை பகுதியில் வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் ரோட்டோரம் உள்ள 50 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதனால் வேனில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு அலறினார்கள். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர்.
ஹென்றி பிலிப், மரியகொரட்டி, ஹெலன்மேரி, சசிரேகா, சூசன் பீட்டர், பாபியானால், ஜெயா, அமுதா, பிரான்சிஸ்கான், லதா, பத்மா, ஆக்னஸ், அனி, ஷாலினி, அபிதா, ரீகன் ஆகியோர் காயம் அடைந்திருந்தனர்.
அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்திருந்ததால் அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து நடந்த இடத்தில் சாலைப்பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு கற்கள் கொட்டப்பட்டிருந்தது. வேன் பள்ளத்தில் விழுந்து உருண்டதும் அந்த கற்கள் தடுத்து நிறுத்தின. இல்லாவிட்டால் அடுத்துள்ள 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக வேனில் இருந்தவர்கள் காயத்துடன் தப்பினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சோலூர் பொக்காபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் ஊட்டி, கூடலூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக தேர்த்திருவிழா எளிமையான முறையில் கொண்டு நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 5-ந் தேதி அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றல் மற்றும் அம்மனுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. நேற்று பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் கங்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சிகர நிகழ்ச்சியான மாரியம்மன் திருத்தேர்விழா இன்று இரவு 10 மணிக்கு நடக்கிறது. இதில் பக்தர்கள் பங்கேற்று தேதை வடம் பிடித்து இழுக்கிறார்கள். இதனையொட்டி இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்கேயே தங்கி இரவில் நடக்கும் தேர்த்திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.
ஊட்டி மற்றும் மாவட்டத்தின் பிறகு பகுதிகள் மற்றும் கேரள, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கார், பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியாக 6 சிறப்பு பஸ்களும், கூடலூரில் இருந்து 5 சிறப்பு பஸ்களும் இயகப்பட்டன. இந்த பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.
தேரோட்ட நிகழ்ச்சி முடிந்ததும் நாளை காலை 8.45 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது. நடக்கிறது.






