என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வணிக நிறுவனங்களில் சோதனை
    X
    வணிக நிறுவனங்களில் சோதனை

    ஊட்டியில் 12 கடைகளுக்கு ரூ.19 ஆயிரம் அபராதம்

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து வருவாய்த் துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையினர், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட சேரிங்கிராஸ் பகுதி கார்டன் சாலை மற்றும் கோத்தகிரி சாலை பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சோதனையின் போது, 12 கடைகளில் இருந்து 9.25 கிலோ தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமுறைகளை மீறி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக 12 கடைகளிடம் இருந்து ரூ.19 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் நீலமேகம் உள்பட அத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×