என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஊட்டியில் திடீர் சாரல் மழை

    ஊட்டியில் பெய்த சாரல் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் மழை குறைந்து, உறைபனி கொட்ட தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக நீர்ப்பனி பெய்து வந்த போதும் குளிரின் தாக்கம் கடுமையாகவே இருந்தது. 

    தற்போது சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் நிலவக் கூடிய சிதோஷ்ண நிலையை அனுபவிக்க மக்கள் குடும் பம், குடும்பமாக குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த 2 நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில்  வெயிலின் தாக்கம் குறைந்து மேக மூட்டமாகவே காணப் பட்டது. அவ்வப்போது சாரலும் பெய்தது.

    இந்த நிலையில், நேற்று இரவு ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. 

    ஊட்டியில்  அடுத்த மாதம் கோடை பருவ சீசன் தொடங்கவுள்ள நிலையில் இந்த மாதத்தில் சம்மர் ஷவாஸ் எனப்படும் பெருமழையை விவசாயி களும், மக்களும் எதிர் பார்த்து காத்திருந்தனர். தற்போது பெய்த சாரல் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×