என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    50 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து கிடந்த காட்சி
    X
    50 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து கிடந்த காட்சி

    குன்னூர் அருகே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்- 16 பேர் காயம்

    குன்னூர் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.
    குன்னூர்:

    குமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியைச் சேர்ந்த 23 பேர் ஒரு வேனில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். ஊட்டியில் பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர்கள் நேற்று மாலை அவர்கள் வேனில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    வேன் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் வந்து கொண்டு இருந்தது. பர்லியாரை அடுத்துள்ள கோழிக்கரை பகுதியில் வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் ரோட்டோரம் உள்ள 50 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதனால் வேனில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு அலறினார்கள். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர்.

    ஹென்றி பிலிப், மரியகொரட்டி, ஹெலன்மேரி, சசிரேகா, சூசன் பீட்டர், பாபியானால், ஜெயா, அமுதா, பிரான்சிஸ்கான், லதா, பத்மா, ஆக்னஸ், அனி, ஷாலினி, அபிதா, ரீகன் ஆகியோர் காயம் அடைந்திருந்தனர்.

    அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்திருந்ததால் அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்து நடந்த இடத்தில் சாலைப்பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு கற்கள் கொட்டப்பட்டிருந்தது. வேன் பள்ளத்தில் விழுந்து உருண்டதும் அந்த கற்கள் தடுத்து நிறுத்தின. இல்லாவிட்டால் அடுத்துள்ள 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக வேனில் இருந்தவர்கள் காயத்துடன் தப்பினர்.



    Next Story
    ×