என் மலர்tooltip icon

    நீலகிரி

    பொது மயானம் பல வருடங்களாக பராமரிப்பில்லாமல் கிடக்கிறது.
    அரவேணு: 

    கோத்தகிரி தாலுகா அரவேணு பகுதியை சுற்றி அரவேணு பஜார், காமராஜர் நகர், என்.பி.நகர், அளக்கரை சாலைப் பகுதி, தவிட்டு மேடு கீழ்கைத்தளா, புதூர், மாரியம்மன் கோவில் பகுதி உள்ளது.

    இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கான பொது மயானம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் உள்ளது. இந்த பொது மயானம் பல வருடங்களாக பராமரிப்பில்லாமல் கிடக்கிறது.

    இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும், புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுவரையிலும் நடைபாதை, சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி எதுவும் இல்லாமல் புதர் மண்டி கிடைக்கிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் உள்ள பொதுமயானம் பல ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இன்றி புதர்மண்டியே காணப்படுகிறது. பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நடந்து செல்லும் நடைபாதை கூட புதர் மண்டி கிடக்கிறது. 

    எனவே மயானத்திற்கு செல்லும் நடைபாதைகளை சரி செய்ய வேண்டும். மேலும் அனைத்து கிராம மக்களும் சுற்றுச்சுவர் கட்டி, மின்விளக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
    ஊட்டி படகு இல்லத்திற்கும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அங்கு படகு சவாரி செய்து தங்கள் பொழுதை போக்கினர்.
    ஊட்டி:

    சமவெளி பகுதிகளில் கோடை வெயில் தொடங்கியுள்ளதால், மக்கள் இதமான கால நிலை உள்ள ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக படையெடுத்து வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.

    இந்த நிலையில் தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை கொண்டாடி மகிழ சுற்றுலா தலமான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் குவிந்தனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று முன்தினம் மாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். நேற்று காலையும், இன்றும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் கார், பஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர்.

    ஊட்டிக்கு செல்லும் வழியில் சாலையோரம் காரை நிறுத்தி, காடுகளின் இயற்கை அழகை கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அங்கு மலர் கண்காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டு வரும் மலர் செடிகளை பார்வையிட்டனர்.

    மேலும் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் உள்ள அரியவகை செடிகள், மரங்களையும் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள புல் தரையில் அமர்ந்து பேசியும், குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர்.

    ஊட்டி படகு இல்லத்திற்கும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அங்கு படகு சவாரி செய்து தங்கள் பொழுதை போக்கினர்.

    அரசு ரோஜா பூங்கா, பைக்காரா மற்றும் ஊட்டி மற்றும் பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, கொடநாடு காட்சி முனை, லேம்ஸ்ராக், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக சுற்றுலா தலங்களை ஒட்டிய கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

    கொடைக்கானலில் நேற்று முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் கொடைக்கானல் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே டோல்கேட்டில் 3 கி.மீ. தூரம்வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    அதன் பிறகும் வாகனங்கள் கடந்து செல்ல 1 மணிநேரத்திற்கும் மேலானது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானலில் விட்டுவிட்டு சாரல்மழையும் பெய்த வண்ணம் இருப்பதால் நெரிசலில் சிக்கிய சுற்றுலா பயணிகள் தங்கள் ஓட்டல் அறைக்கு செல்ல சிரமப்பட்டனர்.

    சுற்றுலா பயணிகள் பேக்கேஜ் விடுமுறையில் வந்திருப்பதால் அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சுற்றுலா இடங்களை பார்வையிட பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    இது சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இன்று அதிகாலை சூரியோதம் பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் திரண்டனர்.

    அவர்களில் பலர் ஆர்வ மிகுதியில் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். மேலும் படகுகள் மூலம் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்று ரசித்தனர். பகவதி அம்மன் கோவிலிலும் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். இதன் காரணமாக கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.
    இங்கு மொத்தம் 650க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்
    ஊட்டி: 

    கோத்தகிரி தாலுகா குஞ்சப்பனை, காக்காகுண்டு, அறையூர், அறையூர்மட்டம் ,கூவக்கரை மந்தரை, துதியரை, சுண்டபட்டி, பத்திய பாடி ,அத்திப்பாடி, வெள்ளரிக்கம்பை, பாவியூர், கோழித்துறை , அட்டாடி, மேல்கூப்பு, தாளமெக்கை, செம்மநாரை, கீழ் கூப்பு, கோழிக்கரை, அணில் காடு, புதூர் என 21 பழங்குடியினர் இருளர், குறும்பர் வசிக்கும் கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 650க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்

     இக்கிராம மக்களின் பொதுவான அடிப்படை தேவைகளாக சாலை வசதி, வீடு வசதி, தெரு விளக்கு, அங்கன்வாடி புனரமைத்தல், புதிய அங்கன்வாடி, நடைபாதை புனரமைத்தல், புதிய நடைபாதை தண்ணீர் வசதி, உறிஞ்சு குழாய் சமுதாயக்கூடம் சீரமைத்தல், புதிய சமுதாயக்கூடம், கழிவுநீர் வாய்க்கால், கழிவுநீர் வாய்க்கால் சீரமைத்தல் சாலை வசதி, சாலை புனரமைத்தல், தெரு விளக்கு, தண்ணீர் தொட்டி கட்டுதல், பழைய தண்ணீர் தொட்டியை புனரமைத்தல், புதிய மின் இணைப்பு மற்றும் செம்மநாரை மேல் கூப்பு, தாளமெக்கை பகுதிகளுக்கு பஸ் வசதி அரசு செய்து தருமாறு 21  கிராம மக்கள் தனித்தனியாக மனு ஒன்றினை எழுதி கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் வழங்கினர். 

    அப்பகுதி மக்கள் காட்டு விலங்குகள் அதிகப்படியாக உள்ளதால்தெரு விளக்கு மற்றும் சாலை வசதிகளை உடனடியாக செய்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
    அந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது இயக்க இயலாத நிலையிலும் மற்றும் துருப்பிடித்த நிலையிலும் உள்ளது.
    ஊட்டி: 

    வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்து துறையில் வரி செலுத்தாத மற்றும் இதர குற்றங்களுக்காக பல்வேறு போக்குவரத்து அலுவலர்களால் சிறை பிடிக்கப்பட்டுவாகன உரிமையாளர்களால் உரிமை கோரப்படாமலும் மற்றும் நிதியாளர்களல் விடுவிக்கப்படாமலும் நீண்டகாலமாக ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் 23 மற்றும் கூடலூர் பகுதி அலுவலகத்தில் 9 என மொத்தம் 32 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

    அந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது இயக்க இயலாத நிலையிலும் மற்றும் துருப்பிடித்த நிலையிலும் உள்ளது. 

    தமிழக தலைமை செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையரது சுற்றறிக்கையின்படி பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் 11- ந் தேதி முதல் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். 19-ந் தேதி மதியம் 12 மணி வரை ஒப்பந்தப் புள்ளி விண்ணப்பங்கள் வழங்கப்படும். 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20-ந் தேதி காலை 10 மணிக்குள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். முன்பணம் ரூ.10 ஆயிரம் வங்கி வரைவோலை செலுத்துபவர்கள் மற்றும் நடப்பு புளுவு கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். 

    ஏலம் விடப்படும் வாகனங்களை 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் கூடலூர் பகுதி அலுவலகத்தில் பார்வையிடலாம். வரும் 20-ந் தேதி காலை 11 மணிக்கு ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தமிழ்புத்தாண்டு, நாளை புனிதவெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதை முன்னிட்டு ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் தினமும் வந்து சென்றாலும் கோடை விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த சில வாரங்களாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று தமிழ்புத்தாண்டு, நாளை புனிதவெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதை முன்னிட்டு ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

    நேற்று மாலை முதலே தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக ஊட்டிக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    இன்று காலை ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்காவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அங்குள்ள புல்தரையில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தும் தங்களது பொழுதை கழித்தனர்.

    இதேபோல் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், முதுமலை புலிகள் காப்பகம், நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டமே காணப்பட்டது.

    ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதேபோல் பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சிகளும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    ஊட்டியில் உள்ள லாட்ஜ், காட்டேஜ்கள் மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்களிலும் அறைகள் முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான லாட்ஜ்கள், விடுதிகளில் அறைகள் அனைத்தும் புக்கிங் ஆகிவிட்டது.

    வரும் நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சுற்றுலாவை நம்பி வியாபாரம் செய்து வரும் தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களாக கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் திடல் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வருகின்றன.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமை, காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாக கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் திடல் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வருகின்றன.

    இதற்கிடையே அந்த பகுதிகளை சேர்ந்த 3 தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சம்பவத்தன்று பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு நடந்து சென்றனர். அப்போது காட்டெருமைகள் கூட்டமாக சாலையில் உலா வந்தன. இதனால் அச்சம் அடைந்த மாணவ, மாணவிகள் மீண்டும் தங்களது பள்ளி வளாகத்திற்குள் சென்று பாதுகாப்பாக நின்று கொண்டனர்.

    காட்டெருமைகள் சாலையின் குறுக்கே நீண்ட நேரம் கொண்டு இருந்ததால் வாகன போக்குவரத்து ஏற்பட்டது. இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சில மணி நேரங்கள் கழித்து காட்டெருமைகள் அங்கிருந்து சென்றன. இதையடுத்து வாகன போக்குவரத்து சீரானது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சாலைகளில் அடிக்கடி காட்டெருமைகள் நடமாடி வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே காட்டெருமைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என்றனர்.
    நீலகிரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பச்சை தேயிலை பறித்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பி விநியோகம் செய்து வருகின்றனர்.
    அரவேணு: 

    கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பச்சை தேயிலை பறித்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பி விநியோகம் செய்து வருகின்றனர்.

     தற்போது  கோத்தகிரி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிவப்பு சிலந்தி நோய் தேயிலை செடிகளை பாதித்து வருகிறது.

    2 மாதங்களுக்கு முன்பு பனிக்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகரித்து தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகி தேயிலை விளைச்சல் குறைந்தது இதனால் தேயிலை செடிகள் பராமரிப்பு, தொழிலாளர்களுக்கு கூலி வழங்குவது, உரமிடுவது, தண்ணீர் பாய்ச்சுவது போன்ற செலவுகள் கவனிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதுகுறித்து கோத்தகிரி தோட்டக்கலை அலுவலர் சந்திரன் கூறியதாவது:- மண்ணின் ஈரப்பதம் காக்கப்பட வேண்டும். காக்கப்பட வில்லை என்றால் சிவப்பு சிலந்தி நோயின் தாக்கம் அதிகரிக்கும். எனவே வெயில் காலங்களில் தோட்டங்களில் ஊடுபயிராக செலுத்தப்படும் மரங்களை  வெட்டக்கூடாது.

    அவ்வாறு வெட்டப்படாமல் இருந்தால் செடிகளுக்கும் மண்ணுக்கும் நல்ல நிழலாகி மண்ணின் ஈரப்பதம் காக்கும். மண்ணின் ஈரப்பதம் தங்குமாறு வாய்க்கால்கள் வெட்டப்பட வேண்டும். பிப்ரவரி மாதத்தில் தெளிப்பான்கள்  தெளிக்கும் பொழுது நோயின் தாக்கம் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    குன்னூர் அருகே உள்ள உலிக்கல் கிராம குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. அங்கு சிறிது நேரம் சுற்றி திரிந்த யானைகள் குடியிருப்பை ஒட்டியுள்ள வாழைத்தோட்டம் மற்றும் நீரோடை உள்ள பகுதிகளில் உலவி வருகின்றன.

    ஊட்டி:

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு குட்டிகளுடன் 9 யானைகள் வந்தன.

    இந்த யானைகள் கல்லாறு, பர்லியாறு, ரன்னிமேடு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக முகாமிட்டன. வனத்துறையினர் விரைந்து வந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வனத்துறைக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பையொட்டிய பகுதிகளிலேயே சுற்றி வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றாக சுற்றிய காட்டு யானைகள் 3 குழுவாக பிரிந்து சின்னக்கரும்பாலம், கிளன்டேல், ரன்னிமேடு போன்ற பகுதிகளில் சுற்றி திரிந்தன.

    இந்த நிலையில் இந்த யானைகள் அனைத்தும் மீண்டும் ஒன்று சேர்ந்து நேற்று குன்னூர் அருகே உள்ள உலிக்கல் கிராம குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. அங்கு சிறிது நேரம் சுற்றி திரிந்த யானைகள் குடியிருப்பை ஒட்டியுள்ள வாழைத்தோட்டம் மற்றும் நீரோடை உள்ள பகுதிகளில் உலவி வருகின்றன.

    இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, யானைகள் மீண்டும் ஊருக்குள் வந்து விடாத வண்ணம் அந்த பகுதியில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குதிரை பந்தயத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 குதிரைகள் ஊட்டிக்கு வந்துள்ளன. ஒரு பெண் பயிற்சியாளர் உள்பட 30 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
    ஊட்டி:

    சர்வதேச சுற்றுலா மையமான நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.

    அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு போட்டிகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை சீசன் குதிரை பந்தயத்தோடுதான் தொடங்குவது வழக்கம். அதன்படி மெட்ராஸ் கிளப் சார்பில் இந்த ஆண்டுக்கான 135-வது குதிரை பந்தயம் தமிழ்புத்தாண்டான நாளை(வியாழக்கிழமை) தொடங்கி வருகிற ஜூன் மாதம் வரை 2 மாதங்கள் ஊட்டி ரேஸ்கோர்சில் நடக்கிறது.

    இதற்காக பெங்களூரு, சென்னை, ஐதராபாத், புனே உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக குதிரை பந்தயத்தில் சில போட் டிகளும் நடத்தப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை குதிரை பந்தய சங்கத்தின் செயலாளர் நிர்மல் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மெட்ராஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் ஊட்டியில் இருமாதம் குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான குதிரை பந்தயம் தமிழ்புத்தாண்டான நாளை தொடங்கி ஜூன் மாதம் 18-ந் தேதி வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த குதிரை பந்தயத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 குதிரைகள் ஊட்டிக்கு வந்துள்ளன. ஒரு பெண் பயிற்சியாளர் உள்பட 30 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

    அதேபோல, சென்னை மட்டுமின்றி மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 ஜாக்கிகள் கலந்து கொள்கின்றன. அனைத்துப் பந்தயங்களும் காலை நேரத்தில் மட்டுமே நடைபெறும்.

    நடப்பு ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தொடங்கி ஏப்ரல் 14, 15, 23, 24, 30 மற்றும் மே 1, 7, 8, 14, 15, 19, 20, 26, 27, ஜூன் 2, 3, 9, 10 ஆகிய நாள்கள் பந்தயங்கள் நடைபெறும். முக்கிய பந்தயங்களாக ஏப்ரல் 30-ந் தேதி பெண் குதிரைகள் மட்டுமே பங்கேற்கும் 1,000 கினியாஸ் பந்தயமும், மே 1-ந் தேதி ஆண் குதிரைகள் மட்டுமே பங்கேற்கும் 2,000 கினியாஸ் பந்தயமும் நடைபெறும்.

    மே 10-ந் தேதி டெர்பி ஸ்டேக்ஸ் பந்தயங்களும், மே 14-ந் தேதி டாக்டர்.எம்.ஏ.எம். ராமசாமி நினைவு கோப்பைக்கான சிறப்பு பந்தயமும் நடைபெற உள்ளது.

    ஊட்டியில் நடக்கும் முக்கிய போட்டியான நீலகிரி தங்க கோப்பை போட்டி ஜூன் 2-ந் தேதி நடக்கிறது. ஊட்டி ஜாவனய்ல்ஸ் ஸ்பிரின்ட் கோப்பைக்கான போட்டி ஜூன் 6-ந் தேதி நடக்கிறது. ஜூன் 18-ந் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    மொத்தம் ரூ.5 கோடியே 35 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதுதவிர மொத்தம் 18 போட்டிகள் நடக்கிறது. இம்முறை நடக்கும் இப்போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தினமும் மும்பை, புனே, ஐதராபாத், மைசூர், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் நடக்கும் அனைத்து குதிரை பந்தயங்களின் நேரடி ஒளிபரப்பு ஊட்டி ரேஸ்கோர்சில் காண்பிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூடலூர் நகராட்சி கூட்டத்தில் சொத்து வரியை உயர்த்த பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்தனர்
    ஊட்டி, 
    கூடலூர் நகராட்சியில் சொத்து வரியை உயர்த்-து-வது தொடர்பான சிறப்பு கூட்டம் அலுவலகத்தில் உள்ள மன்ற அரங்கில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணை-யாளர் ராஜேஸ்-வரன், துணைத்தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    கூட்டத்தில் தமிழக அரசின் சொத்து வரி உயர்வு அரசாணையை நடை-முறைப் படுத்துவது குறித்து கவுன்சிலர்கள் இடையே விவாதம் நடைபெற்றது. முன்னதாக 9-&வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சையது அனூப்கான், தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து கருப்பு சட்டை அணிந்தபடி கூட்-டத்தில் கலந்துகொண்டார். 
    கூட்டத்தில் ஆணை--யாளர் பேசும்போது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சொத்து வரியை மாநில அரசு உயர்த்தி உள்ளது. கூடலூரில் வரியை உயர்த்துவது தொடர்பாக கவுன்சிலர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார். 

    அதற்கு அ.தி.மு.க. கவுன்-சிலர் சையத் அனூப்கான் பதிலளித்தபோது, மாநில அரசின் வரி உயர்வால் கூடலூர் பகுதியில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் பொது-மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே குறைந்த சதவீதத்தில் வரியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    துணைத்தலைவர் சிவ-ராஜ் கூறுகையில், நகராட்சி பகுதியில் சொத்து வரியை உயர்த்த கூடாது. ஏற்கனவே சட்டப்பிரிவு 17 மற்றும் புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டு உள்ள வீடுகளுக்கு கதவு எண் வழங்குவது, பெயர் மாற்றம் செய்வது ஆகிய பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார். 

    தி.மு.க. கவுன்சிலர்கள் சத்தியன் மற்றும் இளங்கோ பேசும்போது, பொது-மக்களை பாதிக்காத வகையில் குறிப்பிட்ட சதவீதம் வரியை உயர்த்த வேண்டும் என்றனர். இவ்வாறு விவாதம் நடந்தது. 
    முடிவில் 10 முதல் 35 சதவீதம் வரை வரியை உயர்த்தலாம் என்று பெரும் பான்மையான கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்தனர். ஆனால் அ.தி.மு.க. கவுன்சிலர் சையத் அனூப்கான்  கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். 
    கோரிக்கை விடுத்த 4 மணி நேரத்தில் சாலை அமைக்கும் பணி நடந்தது
    குன்னூர், 
    குன்னூர் நகராட்சியின் 20-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மாடல் ஹவுஸ் பகுதி. இந்த பகுதியில் சுமார் 500-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 
     இங்குள்ள பிரதான சாலை கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சாலை சீரமைக்காமல் குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இந்த நிலையில் சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் கடந்த வாரம் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார்.  அப்பகுதி மக்கள் சாலையை சீரமைக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்து வந்தனர். இன்று நகராட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. அப்போது சாலை சீரமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கோரிக்கை விடுத்த அடுத்த 4 மணி நேரத்திற்குள் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் நகராட்சி  முன்னாள் நகர மன்ற தலைவர் ராமசாமி, தற்போது துணைதலைவர் வாசிம் ராஜா‌  கவுன்சிலர்கள் வசந்தி, ஜாகிர் உசேன், மணிகண்டன், மன்சூர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ‌அந்த பகுதியில் உடனே சாலை அமைக்கும் பணிகள் முழூ வீழ்ச்சில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்குள் பணிகள் அனைத்தும் முடிவடையும் என உறுப்பினர்கள் தெரிவித்தனர். கோரிக்கை விடுத்து நான்கு மணி நேரத்திற்குள் சாலை அமைத்து வருவது பொது மக்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது. 

    கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது
    அரவேணு, 
    கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஜெயகுமாரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உமாநாத் போஜன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மணிகண்டன் வரவேற்றார். 
     
    கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கவுன்சிலர்களும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டவுடன், த.மா.கா. கவுன்சிலர் மனோஜ் காணி எழுந்து நின்று பேசினார். அப்போது அவர், சொத்து வரி உயர்வு ஏழை, எளிய மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே அதை ரத்து செய்ய வேண்டும் அல்லது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
     மேலும் தரையில் அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்தார். அவருடன் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நஞ்சு சுப்பிரமணி, மணி, ராஜேஸ்வரி வடிவேல், பா.ஜ.க. கவுன்சிலர் மோனிஷா ஆகியோரும் தரையில் அமர்ந்தனர். மேலும் கோரிக்கையை ஏற்காததால் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததுடன், கோஷங்களை எழுப்பினர். 
     
    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் நடந்த கூட்டத்தில் வீடு-களுக்கு 600, 800, 1,400 சதுர அடி என பிரித்து அதன் அடிப்படையிலும், நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஏ, பி என பிரித்தும் மற்றும் கிரா-மங்களை ஒட்டிய குடி-யி-ருப்புகளை சி என பிரித்-தும் அதன் அடிப்படையில் சொத்து வரி நிர்ணயிப்பது, வணிக ரீதியான கட்டிடங்களுக்கு தனியாக வரி நிர்ணயிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதரித்து தலைவர் உள்பட 16 கவுன்சிலர்கள் கையெழுத்-திட்டனர். 

    ×