என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குன்னூரில் சாலை அமைக்கும் பணி
Byமாலை மலர்12 April 2022 9:10 AM GMT (Updated: 12 April 2022 9:10 AM GMT)
கோரிக்கை விடுத்த 4 மணி நேரத்தில் சாலை அமைக்கும் பணி நடந்தது
குன்னூர்,
குன்னூர் நகராட்சியின் 20-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மாடல் ஹவுஸ் பகுதி. இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்குள்ள பிரதான சாலை கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சாலை சீரமைக்காமல் குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இந்த நிலையில் சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் கடந்த வாரம் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் சாலையை சீரமைக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்து வந்தனர். இன்று நகராட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. அப்போது சாலை சீரமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கோரிக்கை விடுத்த அடுத்த 4 மணி நேரத்திற்குள் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் நகராட்சி முன்னாள் நகர மன்ற தலைவர் ராமசாமி, தற்போது துணைதலைவர் வாசிம் ராஜா கவுன்சிலர்கள் வசந்தி, ஜாகிர் உசேன், மணிகண்டன், மன்சூர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதியில் உடனே சாலை அமைக்கும் பணிகள் முழூ வீழ்ச்சில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்குள் பணிகள் அனைத்தும் முடிவடையும் என உறுப்பினர்கள் தெரிவித்தனர். கோரிக்கை விடுத்து நான்கு மணி நேரத்திற்குள் சாலை அமைத்து வருவது பொது மக்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X