என் மலர்
நீலகிரி
- 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கென 5 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
- திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவ, மாணவியர்கள் அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி லாரன்ஸ் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் புதியன விரும்பு 2023 என்ற தலைப்பில் 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கென 5 நாள் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பறை இசையுடன் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி முகாமில் 38 மாவட்டங்களை சேர்ந்த 1,140 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த பயிற்சி முகாமில் மாணவர்களுக்கென தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கலைகள், இலக்கியம், சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட 15 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும், இலக்கிய ஆளுமை வாதிகளை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
பின்னர் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவ, மாணவியர்கள் அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் புதியதாக அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.இதில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காதர்லா உஷா, கலெக்டர் எஸ்.பி அம்ரித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வனத்துறையினா் மானை மீட்டு வனத்துறை வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.
- மான் அடா்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் அக்ரஹாரம் பகுதிக்கு ஒரு காட்டு மான் வந்தது. இதனை பார்த்த நாய்கள் துரத்தி சென்று தாக்கின.
இதில் அந்த மான் படுகாயம் அடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினா், ஈட்டிமூலை பகுதியில் மானை மீட்டு வனத்துறை வளாகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு அந்த மான் அடா்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட்டதாக வனச்சரக அலுவலா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.
- தேர்த்திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பக்தர்கள் அலகுகுத்தி அக்னி சட்டி எடுத்து பூங்கரகம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து, அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி அம்மன் தேருக்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
அப்போது அம்மனுக்கு பூச்சாட்டுதல், அபிஷேகம்-அலங்காரம், மாவிளக்கு பூஜை மற்றும் கரக ஊர்வலம் ஆகியவை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து. பக்தர்கள் அலகுகுத்தி அக்னி சட்டி எடுத்து பூங்கரகம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோத்தகிரி முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் குமரவேல், இளங்கோ, ராமமூர்த்தி, முத்துசாமி, ராமசாமி, அமிர்தலிங்கம், சுப்பிரமணி, பாலு ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
- ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி நடந்து வருகிறது.
- சைபர் கிரமை் போலீசார் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பாட்டு கச்சேரி, கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரதநாட்டியம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், சிரிப்பு பட்டிமன்றம் ஆகியவை நடத்தப்பட்டது.
இதன் ஒருபகுதியாக அவ்வூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களின் இசை நாடகம் நேற்று நடந்தது. அப்போது மாணவ- மாணவிகள் பல்வேறு கருவிகளை ராகத்துடன் இசைத்தபடி, கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினார்கள். இது சுற்றுலா பயணிகளிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஊட்டி மலர் கண்காட்சியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு மத்தியில் சைபர் கிரமை் போலீசார் ஆன்லைன் மோசடி, ஆபத்தான கடன் செயலிகள், வேலை வாய்ப்பு என்ற பெயரில் வரும் ஆன்லைன் பணமோசடிகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அப்போது செல்போன்களை கவனமாக கையாள வேண்டும் என்று பொதுமக்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.
- மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை, ரோஜா பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக காலையில் வெயிலும், பிற்பகலுக்கு பிறகு மேகமூட்டத்துடன் கூடிய காலநிலையும் நிலவி வந்தது. சில நேரங்களில் மிதமான மழையும் பெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவியது.
பிற்பகலுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ஊட்டி சேரிங்கிராஸ், கமா்சியல் சாலை, மத்திய பஸ் நிலையம், முள்ளிக்கொரை, பொ்ன்ஹில், காந்தல், பிங்கா் போஸ்ட் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை, ரோஜா பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
சமவெளிப் பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஊட்டிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் மழை காரணமாக உருவான இதமான காலநிலையை வெகுவாக அனுபவித்தனா். மேலும் சில சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.
கோவை மாவட்டத்திலும் நேற்று காலையில் கடும் வெயில் சுட்டெரித்தது. மதியத்திற்கு பிறகு வானில் மேக கூட்டங்கள் திரண்டு காலநிலை முற்றிலும் மாறி காணப்பட்டது. மாலையில் காந்திபுரம், ரெயில் நிலையம், பாப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இந்த மழை காரணமாக அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.
கோடை மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான கால நிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தேயிலை கண்காட்சியை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்க வேண்டும்
- தேயிலையை சுடுதண்ணீரில் போட்டு அதன் சுவையை ருசித்து பார்த்தனர்.
குன்னூர், மே.22-
குன்னூர் தென்னிந்திய தேயிலை வாரியம், தமிழக சுற்றுலாத்துறை, தமிழகத் தோட்டக்கலைத் துறை, இன்கோசர்வ் சார்பில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 நாட்கள் தேயிலை கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த தேயிலை கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். தேயிலை கண்காட்சியில் பொதுமக்கள் எது உண்மையான சரியான தேயிலை அந்த தேயிலையின் தரம், ருசி அதனுடைய வண்ணம் தரம் எப்படி உள்ளது.
தேயிலையை எந்த நிறத்தில் வந்தால் அது கலப்பட தேயிலை என்று அறியும் வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல்முறையும் காண்பிக்கப்பட்டது. இந்த செயல்முறையை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து தேயிலை தரத்தையும் அதன் சுவையையும் ருசித்துப் பார்த்து தெரிந்து கொண்டனர்.
இதில் முக்கிய அம்சம் சிறுமிகளுக்கு தேயிலையை சுடுதண்ணீரில் போட்டு அதன் சுவையை ருசித்து பார்த்து என்ன மாதிரி சுவை உள்ளது என்பது சரியாக சொன்னால் சொல்லிய சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தேயிலை கலப்படம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளதாக சுற்றுலா பயணிகள் பாராட்டினர். மேலும் இந்த தேயிலை கண்காட்சியை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்தியாவின் பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் ஊட்டி குறிப்பிடத்தக்கது.
- 3 பெரிய எல்.இ.டி மரங்கள் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன.
ஊட்டி, மே.22-
இந்தியாவின் பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் ஊட்டி குறிப்பிடத்தக்கது. இங்கு கோடைக்காலத்தில் தட்பவெப்பநிலை மிகவும் இதமாக இருக்கும். அதுவும் தவிர ஊட்டியில் உள்ள பச்சைப்பசேல் இயற்கை காட்சிகள், காட்சிமுனையம், பிரையண்ட் பூங்கா மற்றும் படகு சவாரி ஆகியவை கண்களுடன் கருத்தையும் கவர்ந்து இழுக்கும். எனவே கோடைக்காலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ஊட்டியில் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தண்டர் வேர்ல்டு- குளோ கார்டன் எனும் ஒளிரும் பூங்கா ஊட்டியில் வடக்கு ஏரி சாலையில் அமைந்துள்ளது.
இதனை இந்த நிறுவனத்தின் செயல் இயக்குனர் வின்சென்ட் அடைக்கலராஜ் திறந்து வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதல்முறையாக குளோ கார்டன் என்னும் ஒளிரும் பூங்கா 50க்கும் மேற்பட்ட ஜொலிக்கும் மலர்கள் மற்றும் 3 பெரிய எல்.இ.டி மரங்கள் ஆகியவை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன.
மலர்களின் வண்ணமயமான வடிவங்களை காண்பிக்கும் வகையில் எல்இடி மரத்தில் 4கே ரெசல்யூஷன் கொண்ட பிரம்மாண்ட திரை ஒன்றும் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
இந்த பூங்காவுக்கு வருகை தரும் அனைவரது பார்வைக்கும் இது விருந்தாக அமையும். 1.50 ஏக்கர் பரப்பளவில் 50க்கும் மேற்பட்ட ஒளிரும் மலர் செடி வகைகள் இங்கு உள்ளன. மேலும் 10 மீட்டர் உயரமும், 10 மீட்டர் அகலமும் கொண்ட 3 பெரிய எல்இடி ஒளிரும் மரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கணினி தொழில்நுட்பத்தில் 54 வண்ணங்களின் கலவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்கவர் மலர் வடிவங்களை திரையிடும் திறனுடன் இந்த எல்இடி ஒளிரும் மரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த குளோகார்டன் பூங்காவின் நுழைவு வாயில் 1000 அடி அளவிலான எல்இடி மேட்ரிக்ஸ் புரோபைல் முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்கவரும் வடிவங்களை காண்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளனது. இதனை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர்.
- ஊட்டியில் உள்ள பெரு ம்பாலான விடுதிகளில் தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.
- விலை உயர்வால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஊட்டி
சமவெளி பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைப்பதாலும், ஊட்டியில் தற்போது கோடை விழா தொடங்கப் பட்டுள்ளதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.
இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளில் தங்கி பல்வேறு இடங்களை பாா்வையிட்டு வருகின்றனா்.இந்நிலையில், ஊட்டியில் உள்ள பெரு ம்பாலான விடுதிகளில் தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
சாதாரண விடுதிகளில் ஒருநாள் அறை கட்டணம் ரூ. 1,800-இல் இருந்து ரூ. 2,700 ஆகவும், சிறப்பு வசதிகளுடன் கூடிய அறை கட்டணம் ரூ.2,300இல் இருந்து ரூ.3,000 ஆகவும், காட்டேஜ்களின் கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சற்றுலா பயணிகள் கூறுகையில், ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ள நிலையில், வார விடுமுறை நாட்களில் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வும், கடந்த 2 ஆண்டுகளாக இல்லாத அளவில் தற்போது கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
இதனால் அவதி யடைந்து வருகிறோம். இதுதவிர உணவு பொருட்க ளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே விடுதி கட்டணங்களை முறைபடுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- கண்காட்சியை சிறப்பிக்கும் வகையில் 45 ஆயிரம் பல வண்ண கொய்மலர்களை கொண்டு மயில் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது.
- மலர்களால் ஆன தமிழ்நாடு மாநில சின்னங்கள், அழியும் பட்டியலில் உள்ள விலங்குகளின் உருவங்கள், இளைஞர்களை கவரும் செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டிருந்தன.
ஊட்டி:
ஊட்டியில் கோடை சீசனின் போது சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் இந்த ஆண்டுக்கான கோடைவிழா தொடங்கியது. தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி, படகு போட்டிகள் நடைபெற்றன.
புகைப்பட கண்காட்சி, மரபு வழி நடைபயணம், குன்னூரில் தேயிலை கண்காட்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன.
கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 125-வது மலர் கண்காட்சி கடந்த 19-ந்தேதி ஊட்டியில் தொடங்கியது. கண்காட்சியையொட்டி பூங்கா நுழைவு வாயிலில் பல்வேறு வண்ண மலர்களால் ஆன 10-க்கும் மேற்பட்ட அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியை சிறப்பிக்கும் வகையில் 45 ஆயிரம் பல வண்ண கொய்மலர்களை கொண்டு மயில் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது.
மலர்களால் ஆன தமிழ்நாடு மாநில சின்னங்கள், அழியும் பட்டியலில் உள்ள விலங்குகளின் உருவங்கள், இளைஞர்களை கவரும் செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டிருந்தன.
அலங்கார மேடைகளில் கார்னேசன், ரோஜா மலர்கள் ஆந்தூரியம், ஆர்கிட் மலர்களும் வைக்கப்பட்டுள்ளன. 35 ஆயிரம் தொட்டிகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். மலர் கண்காட்சி நாளை வரை நடக்க உள்ளது. வாரவிடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்து அங்கு மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள அலங்கார வடிவங்களை கண்டு ரசித்தனர். மேலும் குடும்பத்துடன் தாவரவியல் பூங்கா புல்வெளியில் அமர்ந்து பேசியும், விளையாடியும் பொழுதை கழித்தனர்.
கண்காட்சி தொடங்கிய நாளன்று 22 ஆயிரத்து 711 பேர், 2-வது நாள் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், 3-வது நாளான நேற்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
3 நாளில் மட்டும் 92 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர். இன்றும், நாளையும் கண்காட்சி நடைபெறும். எண்ணிக்கையானது பல மடங்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடைவிழா காரணமாக ஊட்டி நகரில் முக்கிய சாலைகளான அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலை, ஊட்டி-மைசூா் சாலை, ஊட்டி-கோத்தகிரி, குன்னூா் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
இதனால், வாகனங்கள் பல கிலோ மீட்டா் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்களிலேயே சிக்கிக் கொண்டதால் பல்வேறு இடங்களை பாா்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாகத் தெரிவித்தனா்.
ஊட்டியில் கோடை விழா நடைபெற்று வருவதால் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த காவலா்கள் பாதுகாப்பு, போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த காவலா்களுக்கு சுற்றுலாத் தலங்கள் எங்கெங்கு உள்ளன. எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற விவரங்கள் தெரியாததால், சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய வழிகாட்டுதல் செய்ய முடியாமல் உள்ளனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் அவதியடைவதாகவும், கோடை விழாவுக்கு பணியமா்த்தும் காவலா்களுடன் உள்ளூா் காவலா் ஒருவா் இருந்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய முறையில் உதவுவதோடு, போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்த முடியும் என்று உள்ளூா் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குந்தா மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அக்கிம்பாபு பூத் கமிட்டி பணிகளை ஆய்வு செய்து புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
அதிமுக குந்தா மேற்கு ஒன்றிய பொறுப்பாளராக பாசறை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான அக்கிம்பாபு நியமிக்கபட்டு உள்ளார்.
அவர் பூத் கமிட்டி பணிகளை ஆய்வு செய்து நிர்வாகிகளுடன் ஆலோசணை மேற்கொண்டு பாசறை மகளிர் அணிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தொடங்கி வைத்தார்
உடன் மேற்கு ஒன்றிய செயலாளரா சக்கஸ்சந்திரன் ,உதகை நகர பாசறை துணை செயலாளர் இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
- நந்தன் நீலகேணி பல்வேறு திறன்களில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு கேடயங்கள், பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்,
- ஆதாா் மூலம் வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினசரி 18 லட்சம் பரிவா்த்தனைகள் நடக்கின்றன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டி லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இந்த பள்ளியின் 165-ஆவது நிறுவனா் தின விழா கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் அா்ஜுன் சரண் தேவ் ஆனந்த் கட்டளையின் அணிவகுப்பு நடைபெற்றது.
இதில், இன்போசிஸ் மற்றும் முன்னாள் ஆதாா் தலைவரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான நந்தன் நீலகேணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து, பல்வேறு திறன்களில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு கேடயங்கள், பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.
பின்னா் அவா் பேசியதாவது:-
மக்கள் தொகையில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஆனாலும், நமது நாட்டில் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்குச் செல்ல வேண்டிய பாதை சரியாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
அதில் தொழில்நுட்ப வளா்ச்சி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவா்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அங்கிருந்து வரக்கூடிய அந்நிய செலாவாணி அதிகரிக்கிறது.
2016-ல் இந்தியாவில் ஆயிரம் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது 90 ஆயிரம் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.
ஆதாா் மூலம் வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினசரி 18 லட்சம் பரிவா்த்தனைகள் நடக்கின்றன. தொழில், கல்வி, விவசாயம், சுகாதாரத்தில் இந்தியா வளா்ந்து வருகிறது. புவிசாா் அரசியல் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க அதிக ஆா்வம் காட்டுகின்றன.
ஆப்பிள் நிறுவன உதிரிபாகங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது 5 சதவீத உதிரி பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
நுண்ணறிவு திட்டம் வளா்ந்து வருகிறது. இதற்கு ஏற்றாா்போல மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி மைதானத்தில் குதிரை சவாரி மற்றும் சாகச நிகழ்ச்சிகளும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியா் பிரபாகரன் செய்திருந்தாா். விழாவில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த முன்னாள் மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.
- சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினா் மானின் சடலத்தை பாா்வையிட்டனா்.
- இறந்தது 1½ வயதுடைய பெண் மான் என தெரிய வந்துள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், பந்தலூா் வனச்சரகத்தில் உள்ள தேவாலா-கூடலூா் செல்லும் நெடுஞ்சாலையில் கடமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினா் மானின் சடலத்தை பாா்வையிட்டனா். பின்னா் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா், மானை பிரேதப் பரிசோதனை செய்தாா்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்தது 1½ வயதுடைய பெண் மான் எனவும், சாலையைக் கடக்கும்போது வாகனம் மோதி உயிரிழந்ததாகவும் தெரிவித்தனா்.






