search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே வாகனம் மோதி மான் சாவு
    X

    கூடலூர் அருகே வாகனம் மோதி மான் சாவு

    • சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினா் மானின் சடலத்தை பாா்வையிட்டனா்.
    • இறந்தது 1½ வயதுடைய பெண் மான் என தெரிய வந்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், பந்தலூா் வனச்சரகத்தில் உள்ள தேவாலா-கூடலூா் செல்லும் நெடுஞ்சாலையில் கடமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினா் மானின் சடலத்தை பாா்வையிட்டனா். பின்னா் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா், மானை பிரேதப் பரிசோதனை செய்தாா்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்தது 1½ வயதுடைய பெண் மான் எனவும், சாலையைக் கடக்கும்போது வாகனம் மோதி உயிரிழந்ததாகவும் தெரிவித்தனா்.

    Next Story
    ×