என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடலூரில் நாய்கள் கடித்து மான் படுகாயம்
- வனத்துறையினா் மானை மீட்டு வனத்துறை வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.
- மான் அடா்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் அக்ரஹாரம் பகுதிக்கு ஒரு காட்டு மான் வந்தது. இதனை பார்த்த நாய்கள் துரத்தி சென்று தாக்கின.
இதில் அந்த மான் படுகாயம் அடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினா், ஈட்டிமூலை பகுதியில் மானை மீட்டு வனத்துறை வளாகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு அந்த மான் அடா்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட்டதாக வனச்சரக அலுவலா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.
Next Story






