என் மலர்
மயிலாடுதுறை
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அஞ்சார்வார்த்தலை கிராமத்தில் விவசாய நிலப்பகுதியில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் 2002 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் இரண்டு எண்ணெய் கிணறுகளை அமைத்து எரிவாயு எடுத்தது. இதனால் அப்பகுதியில் 40 அடியில் கிடைத்த நிலத்தடிநீர் மட்டம் குறைந்து இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியானதுடன் குடிநீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. இந்நிலையில், அஞ்சார் வார்த்தலை கிராமத்தில் உள்ள 2 பழைய எண்ணெய் கிணறுகளையும் சுத்தம் செய்வதாக கூறி ஒ.என்.ஜி.சி நிறுவனம் புதிய பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பணிக்காக அங்கு ஏராளமாக ராட்சத குழாய்கள் இறக்கப்பட்டுள்ளதையும், புதிய கிணறு அமைக்க விடப்படும் கழிவுநீர் தேக்கும் குளமும் வெட்டப்பட்டுள்ளதையும் பார்க்கும்போது அங்கு புதிதாக ஷேல் மீத்தேன் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை அப்பகுதியில் இருந்து வெளியேற்றக்கோரி கோஷம் எழுப்பினர்.
ஏற்கனவே அஞ்சார் வார்த்தலை கிராமத்தில் ஒஎன்ஜிசி நிறுவனம் பழைய எண்ணெய் கிணறுகளை சுத்தம் செய்வதாக கூறி சட்டத்திற்கு புறம்பாக ஷேல் மீத்தேன் கிணறு அமைப்பதாகவும் உடனடியாக தடுத்து நிறுத்தகோரி மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவல் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அரசு மருத்துவத்துறை மூலம் செலுத்தப்படுகிறது.
அதன்படி மயிலாடுதுறையில் இன்று (சனிக்கிழமை) பெரியார் அரசு மருத்துவமனையிலும், சீர்காழி அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதேபோல மயிலாடுதுறை ஒன்றியத்தில் காளி, மணல்மேடு, வில்லியநல்லூர், இளந்தோப்பு, முருகமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், திருவிழுந்தூர் ஊராட்சி பல்லவராயன்பேட்டையிலும், ஐவநல்லூர் ஆகிய ஊராட்சியிலும், குத்தாலம் ஒன்றியத்தில் கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, கிளியனூர், கோமல், தேரழுந்தூர் ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் ஆக்கூர் ஆரம்பப்பள்ளியிலும், சீர்காழி ஒன்றியத்தில் திருவெண்காடு, மங்கைமடம், காத்திருப்பு ஆகிய பகுதிகளிலும், கொள்ளிடம் ஒன்றியத்தில் அரசூர், தொடுவாய், கூழையாறு, பழையாறு ஆகிய பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்படும். மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரெயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதேபோல கூறைநாடு புனுகீஸ்வரர் சன்னதி திருமண மண்டபத்தில் பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம் நடக்கிறது. எனவே இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் சென்று பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், முகாமிற்கு வரும் பொதுமக்கள் ஆதார் கார்டு எடுத்து வர வேண்டும். 2-வது டோஸ் செலுத்திக்கொள்ள வருபவர்கள் முதல் டோஸ் செலுத்தியதற்கான குறிப்பு சீட்டு மற்றும் ஆதார் கார்டுகளை எடுத்து வர வேண்டும் என்றும் மயிலாடுதுறை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூர் அருகே உள்ள சின்ன கொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அக்கரைகொக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) என்பவர் குடிபோதையில் செங்கல் சூளைக்கு சென்று அங்கிருந்த மரக்கழிவுகளை எடுத்துள்ளார். அதனை கணேசன் தட்டிக்கேட்டார். இதில் ரஞ்சித்குமார் ஆத்திரம் அடைந்து கணேசனை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். அதனைக் கண்ட சக தொழிலாளி ரவி (50) ஓடிவந்து தடுக்க முயன்ற போது அவரையும் ரஞ்சித்குமார் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






