search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    குத்தாலம் அருகே முதியவரை அடித்து கொன்ற வாலிபர் கைது

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூர் அருகே உள்ள சின்ன கொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் அக்கரைகொக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) என்பவர் குடிபோதையில் செங்கல் சூளைக்கு சென்று அங்கிருந்த மரக்கழிவுகளை எடுத்துள்ளார். அதனை கணேசன் தட்டிக்கேட்டார். இதில் ரஞ்சித்குமார் ஆத்திரம் அடைந்து கணேசனை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். அதனைக் கண்ட சக தொழிலாளி ரவி (50) ஓடிவந்து தடுக்க முயன்ற போது அவரையும் ரஞ்சித்குமார் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×