என் மலர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆதீன கலைக்கல்லூரி 75வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை புரிந்த தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து ஆதீனத்தில் நடைபெற்ற விழாவில் ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் மாணவ மாணவிகளிடம் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் திருப்பனந்தாள் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் உள்ளிட்டோர் பேசினர்.
பின்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், பேசுகையில் கூறியதாவது,
புதுச்சேரி மாநிலத்தில் 50 சதவீதம் மக்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பதாகவும், மாணவ மாணவிகள் வீட்டிலேயே இருப்பதால் அனைவரும் ஆன்லைன் கல்வியை கற்க முடியவில்லை, ஆசிரியர்கள் தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொள்ள வேண்டும், 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்கிறார்கள்.
ஆனால் குழந்தைகளின் எதிர் காலத்தை முன்னிட்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். விரைவில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மேகதாது பிரச்சனை பற்றி நான் ஆளுநர் என்பதால் அரசியல் பேச விரும்பவில்லை, ஆனால் காவிரி பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அவர்களுக்கு உரிய பங்கை காவிரி நீரை பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், திருக்கடையூர் கோயில் நிர்வாகிகள், பா.ஜனதா கட்சி வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி சேதுராமன், ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் அகோரம், நாஞ்சில் பாலு, நகர செயலாளர் மோடி கண்ணன், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 36 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 20 ஆயிரத்து 493 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 296 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 269 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ஜான் (வயது 55). விவசாய கூலி தொழிலாளி. இவர் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் கிறிஸ்துவ தெருவில் தனது மாமனார் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்து வந்தார்.
இதே தெருவைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் மனைவி பிலோமினாமேரி (42) ஒரு மகளிர் குழுவில் தலைவியாக இருந்து வருகிறார். இந்த குழுவில் ஜான் மனைவி ஜோஸ்பின் மேரியும் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்தக் குழு மூலம் பெற்ற கடன் தொகையை ஜோஸ்பின் மேரிக்கு முழுமையாக கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு கிறிஸ்தவ தெருவில் வீட்டு முன்பு பெண்களுக்குள் ஒருவரை ஒருவர் வாய் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆரோக்கியதாஸ் தனது மனைவிக்கு ஆதரவாக ஜான் மனைவி ஜோஸ்பின் மேரியை திட்டினார்.
இதில் ஆத்திரம் அடைந்த ஜான், ஆரோக்கியதாசை தட்டிக் கேட்டார். இதில் ஜானுக்கும் ஆரோக்கியதாசுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் ஜானின் கழுத்தைப் பிடித்து அடித்து கீழே தள்ளியதில் ஜான் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியதாஸை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அடுத்த கன்னியாக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜய் மனைவி விஜயா (30). இவர் கணவரைப் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு விஜயா உடல் சிதறி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விஜயா தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடத்துகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடி ஆகிய மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும். அதனை மறுக்கும் பட்சத்தில் 1983-ம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 விதிகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 14 மீனவ கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதாக அறிவித்திருந்தார். அதன் பேரில் மீன் வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு போலீசார், சீர்காழி தாலுகா பழையாறு முதல் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி வரையிலான 26 மீனவ கிராமங்களிலும் சுழற்சி முறையில் இரவு, பகலாக ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்று 9-வது நாளாக தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள படகுகள், வலைகள், என்ஜின்கள் குறித்து மீன்வளத்துறை மற்றும் கடலோர அமலாக்க பிரிவினர் ஆய்வு மேற்கொள்ள சென்றனர். தகவல் அறிந்து கடற்கரை பகுதியில் திரண்ட புதுப்பேட்டை மீனவர்கள், அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர்.
தங்கள் அனுமதியின்றியும், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அனுமதி இன்றியும் தங்களது படகு மற்றும் வலைகளை ஆய்வு செய்யக்கூடாது என அதிகாரிகளிடம், மீனவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்து மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார், புதுப்பேட்டைக்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த அவர்கள், அனுமதியின்றி ஆய்வு செய்வதால் தங்களுடைய மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து இன்று(அதாவது நேற்று) மாலை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், அதுவரையில் மாவட்டத்தில் எந்த கிராமத்திலும் ஆய்வு செய்யக்கூடாது என்று கூறி அதிகாரிகளை திரும்பிச் செல்ல வலியுறுத்தினர்.
மீனவர்களின் எதிர்ப்பு காரணமாக தொடர்ந்து அதிகாரிகள் தங்களது ஆய்வை தொடர முடியாமல் திரும்பிச் சென்றனர். இதனால் தரங்கம்பாடி கடற்கரை கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் கே.பி.எஸ்.எம். கனிவண்ணன் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர்களின் தொலை பேசிகளை ஒட்டுக்ேகட்ட மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், மாவட்ட நிர்வாகி கார்த்திகேயன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிவகுமார், செல்வம், பாலகுமாரன், சகஜானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






