என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பங்கு சந்தையில் பங்குகளை பட்டியலிடும் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    பங்கு சந்தையில் பங்குகளை பட்டியலிடும் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மயிலாடுதுறை கிளை தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் ராமானுஜம் முன்னிலை வகித்தார். செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

    இதில் பொருளாளர் ஜெகனாத், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரவீந்திரன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில், எல்.ஐ.சி.யின் பங்குகளை பங்கு சந்தையில் பட்டியலிடும் முடிவை திரும்பப்பெற வேண்டும். ஆன்லைன் பாலிசி விற்பனையை கைவிட வேண்டும். பொதுத்துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் கொரோனா முன்பணமாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு வழங்கிய கொரோனா முன்பண தொகையை நிவாரண தொகையாக மாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில், இணை செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை எல்.ஐ.சி. மயிலாடுதுறை கிளையின் முதுநிலை கிளை மேலாளரிடம் வழங்கினர்.


    Next Story
    ×