என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • வழித்தட பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது
    • போலீசார் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனப்பள்ளி அருகே உள்ள ஜாகீர் நாட்றாம் பள்ளியைச் சேர்ந்தவர் ராமு (வயது52). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் விஜய் (22).

    இவர்களுக்குள் பொது வழித்தட பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே அவர்க ளுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத் தன்று ராமு மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த தினேஷ் குமார், சரத்குமார் ஆகியோரை விஜயை தரப்பினரைச் சேர்ந்த வர்கள் குடிபோதையில் ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் இருதரப்பி னருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இது குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ண கிரி தாலுகா போலீசார் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் தனசேகரன் (29), தினகரன் (27), பிரதீப் குமார் (33), கார்த்திக் (21), மண்ணுகான் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • பள்ளியின் நிறுவனர் அன்பரசன் மற்றும் தாளாளர் சங்கீதா அன்பரசன் தலைமை தாங்கினார்கள்.
    • மாணவர்களுக்கு மாறுவேட போட்டி, நடன போட்டிகள் நடைபெற்றது.

    குருபரப்பள்ளி,  

    கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டு ரோட்டில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் பள்ளியின் நிறுவனர் அன்பரசன் மற்றும் தாளாளர் சங்கீதா அன்பரசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பள்ளி முதல்வர் ஷர்மிளா வரவேற்றார். விழாவில் மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர்.

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்களுக்கு மாறுவேட போட்டி, நடன போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளளர் பரிசுகளை வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் மேலாளர் பூபேஷ் செய்திருந்தார். 

    • ரூ.1.15 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய கட்டிட பணிகளை பார்வை யிட்டார்.
    • குடிநீர் வினியோகம், தூய்மை பணிகளை நக ராட்சி பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி யில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் நடை பெற்ற வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்தார். அதன் படி, கிருஷ்ணகிரி பழைய பேட்டை பழைய பஸ் நிலைய வளாகத்தில் கலைஞர் நகர்புற மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1.15 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய கட்டிட பணிகளை பார்வை யிட்டார்.

    தொடர்ந்து, திருவண் ணாமலை சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.43 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை மக்காத திடக்கழிவுகள் சேகரிப்பு மைய கட்டிட கட்டுமான பணிகளையும், நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையத்தில், நகரில் சேரும் மக்கும் குப்பை, பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்கா குப்பைகள் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பின்னர், சேலம் மேம் பாலம் அருகில், சுமார் 9 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, கிருஷ்ணகிரி நகராட்சியிலிருந்து நாள்தோறும் 6 முதல் 7 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து வெளி யேற்றும் பணிகளையும், இவ்வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், கழிவுகசடுகளை சுத்தி கரிப்பு செய்து வெளி யேற்றும் பணிகளுக்காக ரூ.16 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு கலெக்டர் வளாகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க அறிவுறுத்தினார்.

    மேலும், பொதுமக்களின் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் குடிநீர் வினியோகம், தூய்மை பணிகளை நக ராட்சி பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் வசந்தி, செயற்பொறியாளர் சேகரன், சுகாதார ஆய்வா ளர் ராமகிருஷ்ணன், நகர கட்டமைப்பு அலுவலர் செந்தில், வருவாய் ஆய்வா ளர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலா வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது அவரை ஒரு வாலிபர் வழிமறித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வாலிபரை தேடிவந்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அனுமந்தீர்த்தம், மத்தூர் ஆகிய பகுதிகளில் பெண்கள் சிலர் தங்களது குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக கிடைக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    அவ்வாறு வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிற்கு திரும்பி வரும்போது இரவு நேரம் ஆகிவிடுவதால், தனியாக நடந்து வர அஞ்சி வந்தனர்.

    இந்த நிலையில் ஊத்தங்கரையை அடுத்த அனுமந்தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு தனியாக திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்து கட்டிபிடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த பெண் சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    இதேபோன்று சாமல்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா (வயது23) என்பவர் அங்குள்ள தனியார் நூல் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலா வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது அவரை ஒரு வாலிபர் வழிமறித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிஓடி விட்டார்.

    இதுகுறித்து வெண்ணிலா சாமல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வாலிபரை தேடிவந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தலைமறைவான வாலிபரை பிடிக்க உஷார்படுத்தினர். மேலும், சம்பவ இடங்களில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் 2 இடங்களில் பெண்களை வழிமறித்து பாலியல் சில்மிஷ சம்பவங்களில் ஈடுபட்டவர் ஒரே நபர் என்பது தெரியவந்தது. இதனால் தலைமறைவான வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அந்த வாலிபரை நேற்று ஊத்தங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், கைதான வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மடத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (38) என்பதும் இவர் தான் 2 பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், இவர் மீது தருமபுரி, சென்னை, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைதான முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் கைது செய்ததன் மூலம் ஊத்தங்கரை, மத்தூர், சாமல்பட்டி ஆகிய பகுதிகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் நிம்மதி அடைந்தனர்.

    • 2-ந் தேதி இரவு மாடுகளை கொட்டகையில் கட்டி போட்டு விட்டு தூங்க சென்றார்.
    • 2 பசுமாடுகளும் விஷம் கொடுத்து சாகடிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

    மத்தூர்,

    மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி பக்கமுள்ளது பச்சியப்பன் வட்டம். இந்த ஊரை சேர்ந்தவர் கண்ணுபெருமாள் (87). விவசாயி. இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து வந்தார். கடந்த 2-ந் தேதி இரவு மாடுகளை கொட்டகையில் கட்டி போட்டு விட்டு தூங்க சென்றார்.

    நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்த போது 2 பசுமாடுகளும் இறந்து கிடந்தன. மேலும் அந்த 2 பசுமாடுகளும் விஷம் கொடுத்து சாகடிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இது குறித்து கண்ணு பெருமாள் மத்தூர் போலீசில் புகார் செய்தார். மாடுகளுக்கு விஷம் கொடுத்து சாகவைத்தது யார், என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை செய்து பணி களை தொடக்கி வைத்தார்.

     மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் , களர்பதி ஊராட்சியை சேர்ந்த கொத்தக்கோட்டை விநாயகர் கோவில் தெருவில், 15-வது நிதி மானிய குழுவில் இருந்து ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் 240 மீட்டர் தூரம் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை செய்து பணி களை தொடக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், தர்மகர்த்தா தங்கராஜ், முன்னாள் தர்ம கர்த்தா கோவிந்தன், ராஜப்பன் நாயுடு, ஒப்பந்த தாரர் கணேஷ்குமார், தகவல் தொழில் நுட்பவு பிரிவு பூபதி, பொன்னுசாமி, சக்திவேல், ஞானவேல், சம்பத், பிரவின், சிலம்பசரன், ஊராட்சி செயலர் சரவணன் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் விடா முயற்சியுடன் தொடர்ந்து போராடி வெற்றி பெற வேண்டும்.
    • 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில், கணினி அறிவியல் துறை சார்பில் "கம்ப்யூட்எஃஸ் -2கே23" என்ற தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

    விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ரங்கநாத் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி வைத்து விழாவில் பேசுகையில், மாணவர்கள் விடா முயற்சியுடன் தொடர்ந்து போராடி வெற்றி பெற வேண்டும். சந்திராயன்- 2 தோல்வியை கண்டாலும், நம் விஞ்ஞானிகள் தொடர்ந்து போராடி சந்திராயன்- 3 ஐ வெற்றிபெற வைத்தது போல், மாணவர்கள் அனை வரும் தோல்வியை கண்டு துவளாமல் தொடர்ந்து போராடி வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று கூறினார்.

    முன்னதாக, கணினி அறிவியல் துறை தலைவர் பாத்திமா வரவேற்றார். பேராசிரியை விஜயலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். உதவி பேராசிரியை கலை வாணி, கருத்தரங்கின் முழுமையான நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.

    இதில், சிறப்பு விருந்தினராக, ஷ்னீதெர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு வடிவமைப்பாளர் பாலு வெங்கடேஷ் கலந்து கொண்டு, மாணவர்களின் எதிர் காலத்தை ஊக்கப் படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டின் முக்கியத்து வம் குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

    கருத்தரங்கில் கணினி அறிவியல் துறை பேராசிரி யர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு கல்லூரி களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர் கலந்து கொண்டனர்.

    முடிவில், ஒருங்கிணைப் பாளர் விக்ரம் நன்றி கூறினார்.

    • தையற்பயிற்சி பெறுவதற்காக தையல் இயந்திரங்களை வழங்குமாறு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.
    • 30 தையல் இயந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,  

    ஐ.வி.டி.பி நிறுவனம், திருப்பத்தூர் நகரில் கல்விப் பணியில் சிறப்புறச் செயலாற்றி வரும் மேரி இம்மாகுலேட் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் சுயத்தொழில் கற்று மேன்மையடையும் வகையிலும், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பயன்பெறும் வகையிலும், அவர்கள் தையற்பயிற்சி பெறுவதற்காக தையல் இயந்திரங்களை வழங்குமாறு பள்ளி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளையேற்று, அப்பள்ளிக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் வழங்கினார்.

    3.9.2023 அன்று நடை பெற்ற தையல் எந்திரங்கள் வழங்கும் விழாவில் ஐ.வி.டி.பி நிறுவனத்தின் பங்களிப்பாக ரூ.93 ஆயிரம் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்கள், பள்ளி நிர்வாகத்தின் பங்களிப்பாக ரூ.93 ஆயிரம் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்கள் என மொத்தம் ரூ.1.86 இலட்சம் மதிப்பிலான 30 தையல் இயந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

    விழாவிற்கு முன்னிலை வகித்த பள்ளியின் தாளாளர், தலைமை யாசிரியர் மற்றும் பிற ஆசிரியப் பெருமக்கள் விழா விற்கான ஏற்பாடு களைச் சிறப்பாக செய்ததுடன், பெற்றோர்களின் நலனுக்காக தையல் எந்தி ரங்கள் வழங்கியமைக்கு தங்களின் நன்றியை ஐ.வி.டி.பி நிறுவனருக்கு தெரிவித்துக் கொண்டனர். இதுவரை ஐ.வி.டி.பி நிறுவனம் இப்பள்ளிக்கு ரூ.34.2 இலட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.

    • முறையாக பராமரிக்கப்படாததால், பாழடைந்து காணப்படுகிறது.
    • பண்ணைக்குள் உள்ள ஏராளமான பொருள்களும் அவ்வப்போது திருடு போய் வருகின்றன.

    ஓசூர்,  

    ஓசூர் அருகே மத்திகிரி பகுதியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய சுமார் 1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட கால்நடைப் பண்ணை உள்ளது. இந்த கால்நடை பண்ணையில் மாடுகள், குதிரைகள் பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இது தவிர இந்த கால்நடை பண்ணை வளாகத்தில் கோழிப் பண்ணை, உயர்வகை மாட்டு இனங்களான சிந்து, காங்கேயம் உள்ளிட்ட மாடுகளின் உறை விந்து சேகரிக்கும் பகுதியும், கோழியின ஆராய்ச்சி பல்கலைக்கழகம், மாவட்ட வனத்துறை அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    இந்த கால்நடை பண்ணையில் கால்நடை மருத்துவர்கள், துணை கால்நடை மருத்துவர்கள், உதவியாளர்கள், பண்ணை பராமரிப்பு பணியாளர்கள் என ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு வேலை செய்யும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் குடும்பத்துடன் தங்க குடியிருப்புகள் கட்டப்பட்டு, கடந்த 1964 -ஆம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி அப்போதைய கால்நடைத்துறை மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் திறந்து வைத்து, ஒப்படைக்கப்பட்டது.

    இந்த குடியிருப்புகள் அனைத்தும் தற்போதும் நல்ல நிலையில் இருந்தாலும், முறையாக பராமரிக்கப்படாததால், அவை பாழடைந்து காணப்படுகிறது. அங்குள்ள பழமை வாய்ந்த ஆங்கிலேயர் கால கிறிஸ்தவ தேவாலயம் அருகே உள்ள இந்த குடியிருப்புகள் புதர் மண்டி, செடி கொடிகள் சூழ்ந்தும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் தங்கி இருக்கும் கூடாரமாகவும் காட்சியளிக்கிறது. ஒட்டடைகள் சூழ்ந்து அப்பகுதி வழியே யாரும் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தேவாலயம், பயன்பாட்டில் தற்போதும் நல்ல நிலையில் உள்ளது. ஆனால், அதன் பின்னர் கட்டப்பட்ட குடியிருப்புகள் பராமரிப்பு இல்லாததால் பாழடைந்துள்ளது. இதற்கு, அதிகாரிகளில் மெத்தன போக்கு தான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. கால்நடை பண்ணையில் ஒரு சில இடங்களை மட்டுமே அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர்.

    இந்த கால்நடை பண்ணையில் வேலிகள் இல்லாததால், விலை உயர்ந்த மரங்கள், பழமையான இயந்திரங்கள் மற்றும் பண்ணைக்குள் உள்ள ஏராளமான பொருள்களும் அவ்வப்போது திருடு போய் வருகின்றன. இதற்கும் இங்குள்ள அதிகாரிகளின் கவனக்குறைவு மற்றும் மெத்தன போக்கே காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குடியிருப்புகளை சீரமைத்து, அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் ,தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • 14, 17 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் தேர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
    • 9 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

     கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மண்டல அளவிலான ஆண்களுக்கான கோ-கோ தேர்வுப் போட்டிகள் நேற்று நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 215 மாணவர்கள் கலந்து கொண்டனர். 14, 17 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் தேர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 9 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை தலைமையில் நடந்த தேர்வுப் போட்டியில், உடற்கல்வி ஆசிரியர்கள் மாணிக்கம், ராகவன், கோபி, மாதேஷ், பரிமளா, மரியசெல்வம், திவ்யலட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, மீனாட்சி, முருகன், ஆல்பர்ட், ஆண்டனி, கருப்பையா, செல்வகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) பெண்களுக்கான கோ-கோ தேர்வுப் போட்டிகள் நடக்க உள்ளன.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு நடத்தினர்.
    • சாமிக்கு மகா மங்கள தீபாராதனை செய்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசனட்டி பாரதி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவில் அமைத்து, 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக வெள்ளி விழா பிரம் மோற்சவம் மற்றும் ஏக தின லக்ஷார்ச்சனை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு நடத்தினர். விழாவானது, கணபதி ஹோமம், குரு பிரார்த்தனை, நாந்தி பூஜை, அக்னி ஜனனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. பின்னர் கலச ஆராதனைகள், மகா கணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம், துர்கா ஹோமம் நவகிரக ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பின்னர், மகா தீபாராதனை செய் யப்பட்டது.

    3-ஆம் நாள் நிகழ்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, மூலவருக்கு சிறப்பு அபிஷே கம் மற்றும்,சதா ருத்ராபிஷேகமும் நடந்தன. இதைத்தொடர்ந்து ஏக தின லட்சார்ச்சனை நடை பெற்றது. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, பல்லாயிரக்கணக்கான மலர்களைக் கொண்டு விநாயகப் பெருமானுக்கு மலர்களால் லட்ச அர்ச்ச னைகள் செய்யப்பட்டது. இதன் பின்னர் சாமிக்கு மகா மங்கள தீபாராதனை செய்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், சிறப்பு மலர் அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்க பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை,கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர்.

    • செவிலியர் பயிற்சியை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முடித்துள்ளோம்.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 250 பேரும் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

    கிருஷ்ணகிரி, 

    தனியார் பயிற்சி பள்ளியில், 2 ஆண்டுகள் துணை செவிலியர் பயிற்சி முடித்தவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    அரசு அனுமதி பெற்ற தனியார் செவிலியர் பள்ளியில் துணை செவி லியர் பயிற்சியை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முடித்துள்ளோம். ஆனால் அரசு இதுவரை எங்களுக்கு வேலை வழங்கவில்லை. துணை செவிலியர் பயிற்சி முடித்து தமிழகத்தில் 3 ஆயிரம் பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 250 பேரும் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

    ஆனால் கடந்த 2018-க்கு பிறகு தனியார் பள்ளியில் செவிலியர் பயிற்சி முடித்த வர்களுக்கு தமிழக அரசு வேலை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.இதனால் வேறு பணிக்கும் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றோம். எனவே பணி மூப்பு அடிப்படையில் தனியார் பயிற்சி பள்ளியில் செவிலியர் பயிற்சி முடித்த வர்களை தமிழக அரசு பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×