என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தேர்ச்சி குறைவாக உள்ள 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து தேர்வுகள் நடத்த வேண்டும்.
    • வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ணகிரி 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக, அரசு மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மார்ச் 2023 தேர்ச்சி குறித்த பகுப்பாய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சரயு பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உள்ள 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளை சிறப்பு கவனம் செலுத்தி, வரும் கல்வி ஆண்டில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள 25 பள்ளி தலைமை ஆசிரியர் வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி தினந்தோறும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மெதுவாக கற்கும் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று தேர்ச்சி குறைவாக உள்ள 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து தேர்வுகள் நடத்த வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் பாட வாரியாக சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் மேம் பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்பு களைப் பெற நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி என்ற திட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.

    இதன் வாயிலாக சேகரிக் கப்படும் நிதி தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவ லர்கள் மணிமேகலை (கிருஷ்ணகிரி), கோவிந்தன் (ஓசூர்), மாவட்டத் திட்ட அலுவலர் வடிவேலு, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் பள்ளி தலைமையா சிரியர்கள், உதவி தலை மையாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 5-ந்தேதி தமிழ்செல்வன் வீட்டிற்கு சிறுமியின் உறவினர்கள் சென்றனர்.
    • அக்கம்பக்கத்தினர் உடனே கோவிந்தனையும், அவரது மனைவி சாலம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே மொள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது55). விவசாயியான இவருக்கு சாலம்மாள் (48) என்ற மனைவியும், தமிழ்செல்வன் (21) என்ற மகனும், மஞ்சுளா என்ற மகளும் உள்ளனர்.

    தமிழ்செல்வன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிறுமியும், தமிழ்செல்வனும் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    காதல் விவகாரம் குறித்து இருவர் வீட்டாருக்கும் தகவல் தெரிந்தால், எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதி மாணவன் தமிழ்செல்வனும், சிறுமியும் பயந்து வீட்டைவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சிறுமி பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனையும், சிறுமியையும் தேடி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 5-ந்தேதி தமிழ்செல்வன் வீட்டிற்கு சிறுமியின் உறவினர்கள் சென்றனர். அங்கு அவரது தந்தை கோவிந்தனையும், தாய் சாலம்மாளையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும், ஆத்திரம் தீராத சிறுமியின் உறவினர்கள் கோவிந்தனின் வீட்டை அடித்து நொறுக்கினர்.

    இதனால் செய்வதறியாது பயத்தில் இருந்த கோவிந்தன் மற்றும் அவரது மனைவி சாலம்மாள் ஆகிய 2 பேரும் கடந்த 7-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தனர்.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே கோவிந்தனையும், அவரது மனைவி சாலம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் ஷெரீப் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த கோவிந்தனிடம் விசாரணை நடத்தினார்.

    இதில் தனது மகன், சிறுமியை காதலித்ததால், அவர்கள் இருவரும் ஊரை விட்டு சென்று விட்டதாகவும், இதற்காக சிறுமியின் உறவினர்களான மாது, பெருமாள், குமார் மற்றும் ஒரு நபர் ஆகிய 4 பேர் எனது வீட்டிற்கு வந்து என்னையும், எனது மனைவி சாலம்மாளை தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    அதன்பின்னர் 4 பேரும் சேர்ந்து எனது வீட்டின் ஜன்னல், கதவுகளை அடித்து நொறுக்கினர். பயத்தில் தற்கொலை செய்வதற்காக நாங்கள் விஷம் குடித்து மயங்கி கிடந்தோம் என்றார்.

    இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் கோவிந்தனையும், அவரது மனைவி சாலம்மாளையும் தற்கொலைக்கு தூண்டியதாக சிறுமியின் உறவினர்களான மாது, குமார், பெருமாள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாயமான சிறுமியையும், மாணவன் தமிழ்செல்வனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மொள்ளம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள பாரத் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டது.
    • ஆசிரியர் தினவிழாவையொட்டி பாரத் சி.பி.எஸ்.இ. பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கிருஷ்ணவேணி மணி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பள்ளியின் நிறுவனர் மணி விழாவிற்கு தலைமை தாங்கி, அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கி பேசினார்.

    அவர் பேசும் போது டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு குறித்தும், அவர் ஆசிரியராக தனது பணியை தொடங்கி, பிறகு இந்திய குடியரசு தலைவராக உயர்ந்தது குறித்தும் விளக்கினார். அதை போல எதிர்கால சமுதாயத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு செய்ய வேண்டிய சேவை, தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியுடன் களப்பணி யாற்றிட வேண்டும் என்று கூறினார்.

    விழாவையொட்டி ஆசிரி யர்கள், ஆசிரியைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பள்ளியின் நிறுவனர் மணி பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சந்தோஷ், ஆசிரியர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார். இந்த விழாவின் முடிவில் முதல்வர் ஹரிநாத் நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மாதேஷ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 445 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி

     

    கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

    இதில் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், விலைவாசியைக் குறைக்க வேண்டும், மத்திய அரசை கண்டித்தும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தபட்டது. இதற்கு மாவட்ட செயலாளர் நஞ்சு ண்டன் தலைமை தாங்கி னார். வட்ட செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரியில் 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல், ஓசூர், சூள கிரி, தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, சிங்காரப் பேட்டை, ஊத்தங் கரை, போச்சம்பள்ளி என 8 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 445 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • தூங்க செல்வதற்கு முன்பு படுக்கையில் இருந்த படியே சிகரெட் குடித்தார்.
    • தீப்பொறி பறந்து வந்து படுக்கை பற்றி கொண்டது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிகரலபள்ளி அருகே உள்ள ஜீவன் வாட்டம் பகுதியைச் சேர்ந்த வர் கோவிந்தசாமி (வயது60). இவர் கடந்த 6-ந் தேதி வீட்டில் தூங்க செல்வதற்கு முன்பு படுக்கையில் இருந்த படியே சிகரெட் குடித்தார்.

    அப்போது அவர் தீயை அணைக்காமல் சிகரெட்டை அவர் தூக்கி போட்டார். அதில் இருந்த தீப்பொறி பறந்து வந்து படுக்கை பற்றி கொண்டது. இதில் கோவிந்த சாமி மீது பற்றியதால் காயம டைந்தார். அவரை உறவினர்கள் உடனே மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவிந்தசாமியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கல்விக் கட்டணம் ரூ. 25 ஆயிரம் ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
    • பட்டயப்படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சி மருந்துக்கடை, விதைகடை வைக்கலாம்.

    கிருஷ்ணகிரி, 

    பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர் அனிஷாராணி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலை தூரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், செப் 2-ம் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்த பட்டயப் படிப்பு ஒரு ஆண்டு, இரண்டு பருவங்கள் ஆகும். கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் மற்றும் எந்த கல்வி படித்திருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

    தமிழ்வழிக் கல்வியில் இப்பாடங்களுக்கு நேர்முக பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம் ரூ. 25 ஆயிரம் ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பட்டயப்படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சி மருந்துக்கடை, விதைகடை மற்றும் தாவர மருந்துவ மையம் வைக்கலாம். மேலும் இடுப்பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை யாளராகலாம். சுய வேலை வாய்ப்பு பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. 

    • பஸ் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் சுற்றித்திரிகின்றனர்.
    • பஸ்சை எடுக்க முடியாமல் திணறிய கண்டக்டர் ஆளைவிட்டால் போதும் என்று தன்னிடம் இருந்த சில்லரை காசுகளை அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து சுற்றுப்புற கிராமப்புற பகுதிகளுக்கும் மற்றும் ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பரபரப்பாக காணப்படும் இந்த பஸ் நிலையத்தில் பயணிகள், பொதுமக்கள், கடைக்காரர்கள் பயணம் செய்ய வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் பஸ் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் சுற்றித்திரிகின்றனர். இவர்கள் அவ்வப்போது அப்பகுதியில் நிற்கும் பொதுமக்களிடம் டீ வாங்கி கொடு, சாப்பாடு வாங்கி கொடு என்று கேட்டு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் காசு கொடு என்று பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளை பின் தொடர்ந்து சென்றும் தொந்தரவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட தயாரான அரசு பஸ்சை அப்பகுதியில் நின்ற மனநோயாளி பெண் ஒருவர் மறித்து நின்றுள்ளார். இதனால் டிரைவர் பஸ்சை இயக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த கண்டக்டர் பஸ்சின் முன்பகுதிக்கு சென்று அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நகர்ந்து செல்லுமாறு கூறினார். ஆனாலும் அந்த பெண் அந்த இடத்தை விட்டு நகரவில்லை, தலையில் கல்லை வைத்து கொண்டு நீண்ட நேரம் அவர் அப்படியே நின்றார்.

    இதனால் பஸ்சில் ஏறிய பயணிகள், கண்டக்டர், டிரைவர் என அனைவரும் செய்வதறியாது திகைத்தனர். ஒரு கட்டத்தில் அந்த பெண் காசு கொடு அப்போதுதான் போவேன் என்று அடம் பிடித்தார். பஸ்சை எடுக்க முடியாமல் திணறிய கண்டக்டர் ஆளைவிட்டால் போதும் என்று தன்னிடம் இருந்த சில்லரை காசுகளை அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார். காசு வாங்கிய பிறகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அங்கிருந்து நகர்ந்துள்ளார். இதனை அடுத்து கண்டக்டர் மற்றும் டிரைவர் பஸ்சை அங்கிருந்து ஒட்டி சென்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் இந்த செயலால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அவதி அடைந்தனர்.

    தேன்கனிக்கோட்டை பகுதிகளில் இதுபோன்று ஏராளமான மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித்திரிகின்றனர். மாவட்ட நிர்வாகம் இவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • சாப்பரம் வழியாக காவேரிப்பட்டணம் நகருக்குள் வந்து தான் செல்ல முடியும்.
    • வருவாய்த்துறை மற்றும் போலீசார் கண்டு கொள்வதில்லை.

    காவேரிப்பட்டணம்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களின் அருகே ஏராளமான மலைகள் சூழ்ந்து காணப்படுகிறது. மலைகள் அருகே செம்மண் , சவுல் மண் , நுரம்பு வகை மண்கள் அதி கமாக காணப்படுகின்றது.

    இவ்வகை மண்களை சிலர் சட்டவிரோதமாக வெட்டி கடத்து கின்றனர். இப்பகுதிகளில் மண்களை சட்ட விரோதமாக கடத்துபவர்கள் பாலக்கோடு ரோடு மற்றும் சாப்பரம் வழியாக காவேரிப்பட்டணம் நகருக்குள் வந்து தான் செல்ல முடியும். ஆனால் அப்படி மண்களை லாரியில் எடுத்துக்கொண்டு வரும் பொழுது வருவாய்த்துறை மற்றும் போலீசார் கண்டு கொள்வதில்லை.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    தினமும் இரவு பகல் பாராமல் செம்மண் , நுரம்பு மண், ஆகியவற்றை மினி லாரியில் வைத்து கடத்துகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். நாங்களே ரகசியமாக தகவல் கூறினாலும் அதை அவர்கள் கண்டு கொள்வதில்லை.

    காவேரிப்பட்டணத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் மண் கடத்தலில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டு பிடிக்கலாம்.  எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு மண் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • சீனிவாசா கல்வி அறக்கட்ட ளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை தாங்கினார்.
    • கிருஷ்ணரின் வரலாற்றையும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக் களை கூறினார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் மல்லிகை நகரில் அமைந்து உள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டா டப்பட்டது. இவ்விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்ட ளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    அதைத்தொடர்ந்து அதிய மான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் சீனி. திருமால் முருகன் இவ்வி ழாவை தொடங்கி வைத்து கிருஷ்ண ஜெயந்தி தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் "நல்ல வர்களைக் காத்து தீயவர் களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட மேலும் அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று "கிருஷ்ணர் கீதையில் கற்பித்த பாடங்களை நினை வூட்டி தர்மத்தின் வழியைப் பின்பற்றி வாழ வழிகாட்டி" சிறப்புரை ஆற்றினார்.

    இந்நிகழ்வைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் வரவேற்புரை அளித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சி யாக கவிதை, பேச்சு, மாறு வேடம், நடனம், பாட்டு, உரியடித்தல் மற்றும் நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விழாவிற்கு மேலும் அழகூட்டி தம் திறமைகளை வெளிப்படுத் தினர்.

    இந்நிகழ்வில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி கணபதி ராமன், இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவி களைப் பள்ளியின் தாளாளர் பாராட்டினார். ஐந்தாம் வகுப்பு மாணவி சுபிக்ஷா மற்றும் பதினோறாம் வகுப்பு மாணவிகள் அர்ஃபாதாஜ், ஜீவிகா ஆகியோர் விழாவினைத் தொகுத்து வழங்கினர். இறுதியாக 11-ம் வகுப்பு மாணவர் இலக்கியன் நன்றியுரை வழங்கினார்.

    • தேவர் முக்குளம் கிராமத்தில், வணிகக்குழு கல்வெட்டினை புதிதாய் கண்டு பிடித்துள்ளது.
    • வணிகக் குழு கல்வெட்டு, கோவிலை பிரித்துக் கட்டியபோது கீழே தனியே வைக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர் முக்குளம் கிரா மத்தில், வணிகக்குழு கல் வெட்டினை புதிதாய் கண்டு பிடித்துள்ளது.

    இங்குள்ள பள்ளி கொண்ட பெருமாள் கோவில் கூரையில் வைத்துக் கட்டப்பட்டிருந்த முதலாம் ராஜேந்திரசோழனின் 18-ம் ஆட்சியாண்டை சேர்ந்த வணிகக் குழு கல்வெட்டு, கோவிலை பிரித்துக் கட்டியபோது கீழே தனியே வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    இந்த கல்வெட்டு 11-ம் நூற்றாண்டில் தேவர் முக்குளத்தினரின் சிறந்த வணிக தளமாக இருந்துள்ளது. அங்கு பல்வேறு வணிக குழுக்கள் இருந்து, அவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு என வீரர்படைகளை வைத்து உள்ளனர். மேலும் அந்த வீரர்கள் தங்குவதற்கு என வீரப்பட்ட ணம் இங்கு இருந்ததை இந்த கல்வெட்டு வாயிலாக அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுப்பணியில் பிரகாஷ், தலைவர் நாராயண மூர்த்தி, சதானந்த கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன், வரலாற்று ஆசிரியர் ரவி, தேவர் முக்குளம் சிங்காரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி அவரது சொந்த நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பில் நீர் ஏற்றும் அறை கட்டிக்கொடுத்தார்
    • 60 கிராமங்–களை சேர்ந்த விவசாயிகள் நீர் ஏற்றும் மோட்டார் பொருத்தப்–பட்டுள்ளது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஅள்ளி சட்ட–மன்றத் தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டை, கொப்ப–கரை, மேட அக்ரகாரம் ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 60 கிராமங்–களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் குடிநீர் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் ராட்சத கிணறு அமைத்து நீர் ஏற்றும் மோட்டார் பொருத்தப்–பட்டுள்ளது.

    இதற்காக வேப்பன அள்ளி தொகுதி எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி அவரது சொந்த நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பில் நீர் ஏற்றும் அறை கட்டிக்கொடுத்தார். அந்த அறையை மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்–கப்பட்டது. நீர் ஏற்றும் அறை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர் ஏற்றும் அறையை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஓசூர் மாநக–ராட்சியின் மண்டல குழு தலைவர் ஜெய்பிரகாஷ், ராயக்கோட்டை மக்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணி, செயலாளர் வக்கீல் முரு–கேசன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட கவுன்சி–லர் விமலா சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், புதுப்பட்டி தூரு–வாசன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், சஜ்ஜலப்பட்டி மணி மற்றும் 3 ஊராட்சி–களின் பிரமு–கர்கள், விவசாயிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்தலுடன் சிறப்பு பூஜைகள் நடை பெற்றன.
    • 20 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியில் வீர பத்திர சுவாமி 2-ம் ஆண்டு கும்பாபிஷேக அஷ்டபந்தன விழா நடைபெற்றது. முன்ன தாக செவ்வாய்க்கி ழமை அன்று இரவு சந்தூரில் இருந்து கங்கை பூஜை செய்து கால்நடையாக ஈச்சங்காடு பகுதியில் உள்ள வீரபத்திர சுவாமி கோவிலை வந்த டைந்தது. அன்று இரவு பெரியமொய் சுவாமிக்கு புன்னியதானம் அபிஷே கமும் சேவாட்ட வரவு வேடிக்கையும் நடைபெற்றன.

    புதன்கிழமை காலை சித்தப்பசுவாமி மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு ஆலங்கார தீபாரதனையுடன் தலை முடி வாங்குதல் மற்றும் விரதம் இருந்த பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்தலுடன் சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. இதனை தொ டர்ந்து ஸ்ரீ வீரபத்திர சுவாமி மற்றும் நந்தீஸ்வரருக்கு 2-ம் ஆண்டு அஷ்ட்டபந்தன கணபதி ஹோமகுண்ட சிறப்பு அபிஷேக ஆராத னையுடன் மஹா கும்பாபி ஷேகம் நடைபெற்றன.

    விழாவினை தொடர்ந்து கோவில் வளாகத்தில் குரும்பர் இன மக்களின் குல வழக்க சேவாட்ட நடனத்து டன், பூசாரி காளை மாட்டின் தலை மீதும், ஆட்டுகடாவின் தலை மீது தேங்காய் உடைத்தும், விரதம் இருந்த பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இத்துடன் பக்தர்கள் கரகம் எடுத்தல், தலை கூடுதல் நிகழ்ச்சி நடை பெறறன. இக்கும்பாபிஷேக விழாவினை சந்தூர், ஈச்சங்காடு, மங்கல்பட்டி, வெப்பாலம்பட்டி உள்ளிட்ட 65 கிராமங்களை சேர்ந்த குல தெய்வ கோவிலுக்கு சொந்தமான பங்குதாரர்கள், உறவினர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கம்புக்காலப்பட்டி பகுதியை சேர்ந்த ஊர் கவுண்டர் ராஜா, கோவில் பூசாரிக ளான சந்தூர் பகுதியை சேர்ந்த ராஜா, பூவாண்டி மாதையன், வெப்பாலம் பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ், கருப்பேரி பகுதி யை சேர்ந்த சிலம்பு உள்ளிட்ட விழா குழுவினர் செய்தருந்தனர். அத்துடன் பக்தர்களுக்கு சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    ×