என் மலர்
உள்ளூர் செய்திகள்

பர்கூர் அருகே தீக்காயமடைந்த முதியவர் சாவு
- தூங்க செல்வதற்கு முன்பு படுக்கையில் இருந்த படியே சிகரெட் குடித்தார்.
- தீப்பொறி பறந்து வந்து படுக்கை பற்றி கொண்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிகரலபள்ளி அருகே உள்ள ஜீவன் வாட்டம் பகுதியைச் சேர்ந்த வர் கோவிந்தசாமி (வயது60). இவர் கடந்த 6-ந் தேதி வீட்டில் தூங்க செல்வதற்கு முன்பு படுக்கையில் இருந்த படியே சிகரெட் குடித்தார்.
அப்போது அவர் தீயை அணைக்காமல் சிகரெட்டை அவர் தூக்கி போட்டார். அதில் இருந்த தீப்பொறி பறந்து வந்து படுக்கை பற்றி கொண்டது. இதில் கோவிந்த சாமி மீது பற்றியதால் காயம டைந்தார். அவரை உறவினர்கள் உடனே மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவிந்தசாமியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story






