என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.9.50 லட்சம் மதிப்பில்  நீர் ஏற்றும் அறை திறப்பு விழா
    X

    ரூ.9.50 லட்சம் மதிப்பில் நீர் ஏற்றும் அறை திறப்பு விழா

    • எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி அவரது சொந்த நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பில் நீர் ஏற்றும் அறை கட்டிக்கொடுத்தார்
    • 60 கிராமங்–களை சேர்ந்த விவசாயிகள் நீர் ஏற்றும் மோட்டார் பொருத்தப்–பட்டுள்ளது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஅள்ளி சட்ட–மன்றத் தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டை, கொப்ப–கரை, மேட அக்ரகாரம் ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 60 கிராமங்–களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் குடிநீர் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் ராட்சத கிணறு அமைத்து நீர் ஏற்றும் மோட்டார் பொருத்தப்–பட்டுள்ளது.

    இதற்காக வேப்பன அள்ளி தொகுதி எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி அவரது சொந்த நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பில் நீர் ஏற்றும் அறை கட்டிக்கொடுத்தார். அந்த அறையை மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்–கப்பட்டது. நீர் ஏற்றும் அறை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர் ஏற்றும் அறையை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஓசூர் மாநக–ராட்சியின் மண்டல குழு தலைவர் ஜெய்பிரகாஷ், ராயக்கோட்டை மக்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணி, செயலாளர் வக்கீல் முரு–கேசன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட கவுன்சி–லர் விமலா சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், புதுப்பட்டி தூரு–வாசன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், சஜ்ஜலப்பட்டி மணி மற்றும் 3 ஊராட்சி–களின் பிரமு–கர்கள், விவசாயிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×