என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மலை யாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 34). இவர்களுக்கு 2  மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் லட்சு மிக்கும், அதே பகுதியை சேர்ந்த பசுபதி (30) என்ற வாலிபருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதனால் மாரியப்பன், கூலி வேலைக்கு வௌ¤யே செல்லும் நேரங்களில் லட்சுமியும், பசுபதியும் உல்லாசமாக இருந்து வந்தனர். தொடர்ந்து 2 ஆண்டுகளாக இவர்களுக்குள் கள்ளக்காதல் இருந்து வந்தாக கூறப் படு கிறது. 

    இதற்கிடையே நேற்று முன்தினம் கள்ளக் காதலன் பசுபதிக்கும், லட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தகராறு வந்ததாக கூறப்படுகிறது. 

    இதில் மனமுடைந்த லட்சுமி,  விஷம் குடித்து உயிருக்கு போராடினர். உடனே அவரை, பசுபதி மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த் தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில்  மத்தூர் போலீசில் மாரியப்பன் புகார் செய்தார். அதில் தனது மனைவி லட்சுமியுடன் பசுபதி கள்ளத்தொடர்பு வைத்து தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் பசு பதியை நேற்று கைது செய்தனர்.

    கள்ளக்காதல் விவகாரத் தில்  வாலிபர் கைதான சம்பவம் மத்தூர் பகுதியில் பரபரப் பை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள சவுட்ட அள்ளி பகுதியை சேர்ந்தவர் தர்மன் (வயது32). இவர் கடந்த 12&ந்தேதி அன்று மோட்டார் சைக்கிளில் மலையாண்டஅள்ளி பேக்கரி கடை அருகே சென்று கொண்டிருந்தார். 

    அப்போது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் தர்மனை  வழிமறித்தனர். கத்தியை காட்டி அவரிடம் இருந்து 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறிமுதல் செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    இது குறித்து தர்மன் காவேரிப்பட்டணம் போலீசில புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் வேலம்பட்டியை சேர்ந்த நவீன்குமார் (19), காவேரிப்பட்டணத்தை சேர்ந்த தரணிதரன் ஆகியோர் சேர்ந்து தர்மனை வழிமறித்து மொபைல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதனால் அவர்கள் இரு வரையும் போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பஸ் டிரைவர்- கண்டக்டரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம்  ஊத்தங்கரையில் இருந்து கல்லாவி வழியாக மடப்பள்ளிக்கு நேற்று ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை, கல்லாவி அருகே உள்ள வீராச்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 46)  என்பவர் ஓட்டினார். 

    இந்த நிலையில் அரசு பஸ் , மடப்பள்ளி அருகே குறுகிய சாலையில் வந்த போது, ரோட்டை மறித்து கொண்டு, மடப்பள்ளி பகுதி அம்பேத்கார் நகரை சேர்ந்த வாலிபர் சிவசக்தி (20) உள்பட 3  பேர் நின்று கொண்டிருந்தனர். இதனால் டிரைவர் பரமசிவம், கண்டக்டர் கிருஷ்ணன் (52) ஆகியோர், அந்த வாலிபர்களிடம் ரோட்டில் இப்படி நிற்காதீர்கள்... என்று கூறினர்.

    இதை கேட்டு ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும், டிரைவர், கண்டக்டரை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசினர். மேலும் இருவரையும் தாக்கி விட்டு 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து கண்டக்டர் கிருஷ்ணன், ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் சிவசக்தி உள்பட 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தாராகானூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஞானவேல் (வயது 22). ஜெசிபி ஆபரேட்டர்.

    இந்த நிலையில் நேற்று தாராகானூரில் இருந்து புலியூருக்கு ஞானவேல் , மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் திடீரென மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு காயமடைந்த ஞானவேலை, அக்கம்பக்கத்தினர் மீட்டு போச்சம் பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மலை யாண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 34). இவர்களுக்கு 2  மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் லட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலி பருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப் படுகிறது. 

    இதற்கிடையே கள்ளக் காதலனுக்கும், லட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தகராறு வந்ததாக கூறப் படுகிறது. 

    இதில் மனமுடைந்த லட்சுமி, நேற்று விஷம் குடித்து உயிருக்கு போராடினர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆ,ஸ்பத்திரியில் சேர்த் தனர். பின்னர் மேல் சிகிச் சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த் தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதல் விவகாரத் தில் இளம்பெண் தற் கொலை செய்து கொண்ட சம்பவம் மத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் 2 குழந்தைகளுடன் மாயமான தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
    ராயக்கோட்டை,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பிக்கனஅள்ளியை சேர்ந்தவர் டிரைவர் துரைராஜ் இவரது மனைவி மாதம்மாள் (வயது 30).

    இந்த நிலையில் மனைவி மாதம்மாள் நடத்தையில் சந்தேகம் அடிக்கடி கணவன்&மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மாதம்மாள் கோபித்துக்கொண்டு ராயக்கோட்டையில் உள்ள அவரது தாயார் நீலா வீட்டுக்கு மகன் வினோத் (11) மகள் உஷா (9) அழைத்துக்ª காண்டு வந்தார். இந்த நிலையில் மாதம்மாள், தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். அவர் எங்கு சென்றார் என்று தெரிய வில்லை. கடந்த ஒரு மாதத்மாக பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

     இதனால் மாதம்மாள் தாயார் நீலா ராயக்கோட்டை  போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்ட்டர் சுப்பிரமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே நள்ளிரவில் கோழி பண்ணைக்கு தீ வைத்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பொம்மை பள்ளி காளி கவுண்டர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தா (வயது 40). இவர் தனது வீடு அருகே கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இதில் சுமார் 3,500 கோழிக் குஞ்சுகளை வைத்து பராமரித்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோழிப்பண்ணையில் திடீரென தீப்பிடித்தது . இதில் கோழி பண்ணையில் இருந்த 3500 கோழி குஞ்சுகள் தீயில் கருகி சாம்பல் ஆனது. 

    மேலும் அங்கிருந்த தீவனப் பொருட்கள் தட்டு தளவாட சாமான்கள் அனைத்தும் சேதமானது.  இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் செங்கோட்டு வேலவன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

    இருப்பினும் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. கோழிப்பண்ணைக்கு மர்மநபர்கள் தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு காரணமா? என்று மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    நள்ளிரவில் கோழிப்பணியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாளேத் தோட்டத்தில் அமைந்துள்ள கங்கை குமரன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாளேத் தோட்டம், ஊராட்சி போக்கம்பட்டி (கிப்காட்) மலை குன்றின் மீது  ஸ்ரீகங்கை குமரன் கோவில் அமைந்துள்ளது. 

    இக்கோவிலில் 40 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வருவதையொட்டி கங்கை குமரன் முருகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் சிறப்பு பூஜைகள் செய்து அரோகரா கரகோஷத்துடன் கொடியேற்று விழா நடைபெற்றது. 

    விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் விமலா வேலாயுதம் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊத்தங்கரை தொகுதி எம் .எல்.ஏ. தமிழ்செல்வம் கொடியேற்று விழாவை தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார். 

    விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே முட்புதருக்கு தீ வைத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொத்தகிருஷ்ணப்பள்ளி கிராமத்தில் கோழி பண்ணைக்கு அருகே உள்ள புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக இந்த நிலத்தில் முட்புதர்களுடன் அடர்ந்து இருந்துள்ளது.

    இந்தநிலையில் அந்த பக்கம் செனற மர்ம நபர்கள் சிலர் அந்த வயலில் உள்ள முட்புதர்களுக்கு தீ வைத்துள்ளனர். இதையடுத்து தீ மளமளவென பரவி சுமார் 3 ஏக்கர் நிலமும் தீ பரவியது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கிருஷ்ணகிரி தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 ஏக்கரில் பரவியிருந்த நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீயால் இப்பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டது. 3 ஏக்கர் நிலம் முழுவதும் தீயில் எரிந்து சாம்பல் ஆனது. இந்த தீயால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ஊத்தங்கரை அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மகனூர் பட்டி ஜெ.ஜெ.நகர் அருகே இன்று அதிகாலை சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

    திருப்பத்தூரில் இருந்து சிங்காரப்பேட்டை நோக்கி பிக்கப் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது மகனூர்பட்டி என்ற இடத்தில் வந்த போது 2 வாகனங்களும் திடீரென எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் பிக்கப் வேன் வாகனம் தீ பற்றி எரிந்தது. இதில் வாகனத்தை ஓட்டிவந்த திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே உள்ள வெலக்கல் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த அமீர் பாஷா என்பவர் மகன் பாசில் (வயது 26) என்ற வாலிபர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுபற்றி தகவல் அறிந்து அருகில் இருந்த பொதுமக்கள் வாகனத்தில் எரிந்த தீயை அணைத்தனர். பிறகு சம்பவத்தை அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    லாரியை ஓட்டி வந்த தருமபுரி மாவட்டம் அஸ்தகிரி கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் செந்தில்குமார் (வயது 33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    4 மாநில தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதால் ஓசூரில் பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
    ஓசூர், 

    உ.பி, உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
    இந்த வெற்றியை கொண்டாடும்வகையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க.சார்பில் ஓசூரில் நேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண் டாடினர்.

    ஓசூர் தாலுக்கா அலுவலக சாலையில் உள்ள அண்ணாசிலையருகிலும், எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலை அருகிலும் நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். மேலும் இதில், மாவட்ட செயலாளர்கள் அம்மன் சுரேஷ், சீனிவாசன், மாநில பட்டியலின பிரிவு செயலாளர் கஸ்தூரி,   மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள பழனியாண்டவர் கோவில் தர்மதோப்பு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது55). இவர் நேற்று வீட்டிற்கு குடத்தில் குடிநீர் எடுத்து விட்டு சாலையை கடக்க முயன்றார். 

    அப்போது போச்சம்பள்ளி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மணி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணி உயிரிழந்தார். 

    மோட்டார் சைக்கிளில் வந்த தருமபுரி மாவட்டம், கொக்கரப்பட்டியை சேர்ந்த பசுபதி (25) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×