என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு உறங்க சென்றுள்ளார்.
    • சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டிபார் மெண்ட்ஸ்டோர் கடையை உடைத்து கொள்ளை

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பேருந்து நிலையம் அருகில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கடை செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமை யாளர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு உறங்க சென்றுள்ளார்.

    அப்போது ஒரு மர்ம நபர் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளை அடித்துள்ளார்.

    அப்போது சத்தம் கேட்க வே வீட்டில் இருந்து வந்து பார்த்த போது மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    அதனை தொடர்ந்து கடையை திறந்து கல்லா பெட்டியை பார்த்தபோது பணம் கொள்ளை அடித்தது தெரியவந்தது.

    இது குறித்து கடையின் உரிமையாளர் முரளிதரன் மத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் நேரில் சென்று விசாரித்து அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவா னதை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • "மா "அரிமா சங்கத்தின் தலைவர் கிருஷ்ண்மூர்த்தி தலைமை வகித்தார்.
    • அரசு சார்ந்த பல்வேறு பொது சேவையிலும் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என சிறப்புரையாற்றினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில், மத்தூர் "மா "அரிமா சங்கம் சார்பில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் 5 ஆயிரம் பனை விதைகள் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் விவசாயிகளுக்கு தேன்கூடு அமைத்து கொடுத்தல், மத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் படித்து பயன் பெறும் வகையில் நூலகத்திற்கு புத்தகம் அளித்தல், அதே போல் மத்தூர் குணாமெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்களால் இயற்கை முறையில் சமைக்கப்பட்ட சிறு தானிய உணவை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து பரிசளித்தல் உள்ளிட்ட அரசு சார்ந்த பொது சேவை திட்டங்கள் நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சிக்கு மத்தூர் "மா "அரிமா சங்கத்தின் தலைவர் கிருஷ்ண்மூர்த்தி தலைமை வகித்தார்.

    நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆளுநர் டி.ஆர். தமிழ்மணி கலந்து கொண்டு கவுண்டனூர் ஊராட்சிக்குட் பட்ட அரசு புரம் போக்கு நிலத்தில் தமிழகத்தின் ஆதாரமாக விளங்கும் பனை மரமான பனை விதைகள் நட்டு வைத்து அச்சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், அரசு சார்ந்த பல்வேறு பொது சேவையிலும் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் மத்தூர் குணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளுரும், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் குண வசந்தரசு, மத்தூர் ஒன்றியகுழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பூபதி (பொறுப்பு), மத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசகுமார், சரவணாஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் சரவணன், கண்ணன்டஅள்ளி பரணிப் பள்ளியின் தாளாளர் சேகர், குருமார்டன் வே பிரிட்ஜ் உரிமையாளர் திருப்பதி, திமுக.மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வெடிவிபத்தில் பலியான 14 பேரில் உடல்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.சக்கரபாணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
    • வெடி விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் ஆக்ஸ்போர்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் நடைபெற்ற பட்டாசு வெடி விபத்தில் இறந்த தமிழகத்தைச் சார்ந்த 14 குடும்பத்தினருக்கும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் உயர் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் நிதி உதவி வழங்கவும் இறந்தவர்களின் உடல்கள் அவருடைய உறவினர்களிடம் பாதுகாப்பாக வழங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் இன்று காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான ஆர்.சக்கரபாணி ஆகியோர் இன்று காலை பெங்களூரு வருகை தந்தனர்.

    வெடிவிபத்தில் பலியான 14 பேரில் உடல்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.சக்கரபாணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    வெடி விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் ஆக்ஸ்போர்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களையும் அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

    முன்னதாக அத்திப்பள்ளிக்கு வருகை தருவதற்காக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.சக்கரபாணி ஆகியோரை பெங்களூரு விமான நிலையத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலா ளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. வரவேற்றார். அப்போது, ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா உடன் இருந்தார்.

    • கடைக்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
    • பட்டாசுக்கடையின் பக்கத்தில் உள்ள 2 மதுபான கடைகள், டீ கடையும் சேதம் அடைந்தன

    ஓசூர்:

    ஓசூர் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நவீன். இவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் அதனுடன் இணைந்த குடோனும், ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளி வளைவு அருகே உள்ளது. அவர் இந்த கடையை நீண்ட காலமாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று 3.15 மணியளவில் கடையில் திடீரென தீ பிடித்தது சிறிது நேரத்திற்குள் தீ மளமள என்று நாலாபுறமும் பரவியது.இதைக் கண்டு கடை உரிமையாளர் நவீன் மற்றும் கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்தனர். இந்த தீ விபத்தில் 10 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடைக்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடக மாநில அத்திப்பள்ளி போலீசாரும், தமிழக எல்லையில் ஓசூர் சிப்காட் போலீசாரும் போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து போக்குவரத்தில் இயல்பு நிலை ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 7 இரு சக்கர வாகனங்கள், 2 பிக்கப் வேன்கள் மற்றும் 1 சரக்கு மினி லாரி ஆகியவை தீயில் கருகி எலும்புக்கூடாகின. மேலும் பட்டாசுக்கடையின் பக்கத்தில் உள்ள 2 மதுபான கடைகள், டீ கடையும் சேதம் அடைந்தன.

    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க வை முழுவதுமாக ஒழித்து விடுவார் என்று பெங்களூர் புகழேந்தி தெரிவித்தார்.
    • எடப்பாடி பழனிசாமி திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று இரவு நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அ.தி.மு.க (ஓ.பன்னீர்செல்வம் அணி) கொள்கைபரப்பு செயலாளர் பெங்களூர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதா வது:- ஏற்கனவே, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களை முதுகில் குத்திய எடப்பாடி பழனி சாமி பற்றி தற்போது தான் பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு தெரிய வந்துள்ளதா? முதன் முதலாக, பா.ஜனதா கட்சியை பின்னாலிருந்து முதுகில் குத்திய ஒரே மனிதர் எடப்பாடி பழனி சாமி தான். அந்த கட்சியே, நிலை தடுமாறும் அளவிற்கு அவர்களது முதுகில் எடப்பாடி பழனிசாமி பலமாக குத்தியுள்ளார்.

    திமுகவுக்கும், அதிமுக வுக்கும் தான் போட்டி எனக் கூறிவரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு, திமுகவை எதிர்ப்பதற்கு தமிழ்நாட்டில் அவர்களிடத்தில் தற்போது என்ன பலம் இருக்கிறது? ஏற்கனவே. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்து கட்ட மைப்பு சீராக இருந்த ஒரே தொகுதியான தேனி யில் மட்டும் ஓபிஎஸ் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

    தற்போது, கட்சி பிளவு பட்டுள்ள சூழ்நி லையில் இவர்களிடம் என்ன கட்டமைப்பு உள்ளது? எடப்பாடி பழனி சாமியும், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் ரகசிய உடன்பாட்டில் உள்ளனர். எனவே தான் எடப்பாடி பழனிசாமி மீது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கட்சி யை காட்டி கொடுத்து விட்டதுடன்,தற்போது அதிமுக என்ற கட்சியை முழுவதுமாக ஒழித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

    மேலும் தற்போ துள்ள அதிமுக இரண்டாக பிளவுபட்டு, வேலுமணி போன்றவர்கள், எடப்பாடி பழனிசாமியிடமிருந்து வெளியேறப் போகிறார்கள். இதனை சாதகமாக்கிக் கொண்டு, அதிமுகவிலிருந்து சுமார் 28 எம். எல். ஏ.க்களை பா.ஜனதா கட்சியினர்தங்கள் வசம் நிச்சயம் இழுத்து விடுவார்கள். ஓ.பன்னீர்செல்வத்தை புறம்தள்ளி, எடப்பாடி பழனிசாமியை நம்பி, அவர் முதுகில் குத்தியதை இன்னும் சரி செய்ய முடியாத சூழலில் நிலை தடுமாறி, புரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பா.ஜனதா தலைவர்களில் அண்ணாமலையும் ஒருவர். இவ்வாறு புகழேந்தி நிருபர்க ளிடம் கூறினார். 

    • தேன்கனிக்கோட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணிப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தண்டரை ஊராட் சிக்கு உட்பட்டது இஸ்லாம் பூர் கிராமம். இந்த கிரா மத்தின் அருகில் சன்னத்து ஓடை என்ற இடம் உள்ளது. இதன் அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை சிறுத்தை ஒன்று தாக்கி ஒரு ஆட்டை கடந்த சில நாட்க ளுக்கு முன்பு இழுத்து சென்றது.

    இதை யடுத்து தேன்க னிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன் தலை மையிலான வன குழுவினர் அந்த இடத்தை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கு தடயங்கள் உள்ளதா என பார்த்தனர். அதில் சிறுத்தையின் கால் தடயங்கள் கண்டறி யப்பட்டன.

    இதையடுத்து ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி சம்பவ இடத்தை பார்வை யிட்டு தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள் ளவும், சுற்று வட்டார கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் வனத்துறை யினருக்கு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து ஓசூர் வன கோட்ட உதவி வன பாது காவலர் ராஜமாரியப்பன் தலைமையில் வன குழுவி னர் சம்பவ இடத்தை கண்கா ணித்து வந்தனர். இந்த நிலையில் சிறுதை யின் நடமாட்டத்தை கண்கா ணிக்க தானியங்கி கேமராக் கள் பொருத்த பட்டு கண்கா ணிக்கப்பட்டன.

    அதில் தானியங்கி கேமரா வில் சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டது. இதன் மூலம் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இந்த சிறுத்தை தற்போது தேன்கனிக்கோட்டை காப்பு காட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள து. இதன் அருகில் சாமிபுரம், அடவிசாமிபுரம், அடைக்கல புரம், தண்டரை, இஸ்லாம் பூர், பண்டேஸ்வரம், பே லூர், எண்ணேஸ்வ ரமடம், பென்னங்கூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள், தொழிற்சா லைகள், குடியிருப்புகள் அமைந்துள்ளன.

    ஆகவே அந்த பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வருகிறார்கள். மேலும் வருவாய்த்துறையி னரும், காவல் துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகை யில், பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டின் வெளி யில் மின் விளக்கு களை ஒளிர செய்ய வேண்டும். சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக தேன்கனிக்கோட்டை வன சரக அலுவலர் 97870 96753 மற்றும் அய்யூர் வனவர் 82482 61278 ஆகிய எண்க ளில் தொடர்பு கொள்ளலாம். என தெரிவித்துள்ளனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேரிடம் செல்போன் மூலம் ரூ. 63 லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • படித்தவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கொப்பகரை அருகே எச்சனஅள்ளி அருகேயுள்ள கோனேரி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31).

    இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 9.5. 2023 அன்று இவரது செல்போனில் வாட்ஸ் அப் செயலிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதில் பகுதி நேரமாக பணியாற்றினால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நடைமுறை செலவுகளுக்காக குறிப்பிட்ட கணக்குகளில் பணம் செலுத்தவும் கூறப்பட்டிருந்தது.

    இதை நம்பி ரமேஷ், அவர் கூறியிருந்த வங்கி கணக்குகளில் ரூ. 30 லட்சத்து 83 ஆயிரத்து 298 தொகையை அனுப்பினார். அந்த தொகை கிடைத்த உடன் எதிர் முனையில் தகவல் அனுப்பியவர் தொடர்பை துண்டித்தார். இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ், இது குறித்து கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதே போன்று ஓசூர் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (38). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது செல்போன் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

    அதனை டவுன் லோடு செய்து அதில் இருந்த செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, அதில் பேசிய நபர் பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்றுகூறியுள்ளார். இதனையடுத்து அவர் சொன்ன வங்கி கணக்கு எண்ணில் ரூ. 21 லடசத்து 18 ஆயிரம் பணத்தை செலுத்தியுள்ளார்.

    அதன் பிறகு அந்த எண்ணில் உள்ள நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமரேசன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே போன்று ஒசூர் ஜவஹர் நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ரேகா (60). இவரது செல்போன் நம்பருக்கு ஒருவர் ஸ்டேட் வங்கி மேலாளர் பேசுவதாககூறி கூறி மர்ம நபர் ஒருவர் பேசினார். அவர், ஏடி.எம் கார்டை புதிதாக மாற்ற வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு எண், ஏடி.எம் பின் நம்பர் மற்றும் ஒ.டி.பி. நம்பர் ஆகியவற்றை கேட்டுள்ளார். ரேகா எல்லாவற்றையும் கூறியுள்ளார்.

    சிறிது நேரத்தில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் அவரது வங்கி கணக்கில் எடுக்கப்பட்டதாக செய்தி வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரேகா இது குறித்து சம்பந்தப் பட்ட வங்கியில் சென்று விசாரித்தபோது அவரிடம் மேலாளர் என்று பேசிய மர்மநபர் ஒருவர் ஏமாற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து ரேகா கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படித்த வர்களை குறிவைத்து அதிக சம்பாதிக்காலம் என்று ஆசை வார்த்தை கூறி பண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது பொது மக்களிடத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்; பொதுமக்கள் தங்களது செல்போனுக்கு வரும் அறிமுகம் இல்லாதவர்களை அழைப்பையும், குறுஞ்செய்தி களையும் தவிர்ப்பது நல்லது என்றார். 

    • சாலையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பழுதான நிழற்குடையால் பொது மக்கள் அவதி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இப்பகுதியில் கடந்த 2002- 2003-ம் ஆண்டு பஸ் நிறுத்த நிழற் குடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பயணிகள் நிழற் குடையானது சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. தற்பொழுது ஒரு சில ஆண்டுகளாக பழுதாகி மிகவும் நிழற்குடையின் மேல் பகுதியில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்து கம்பிகள் தெரியும் அளவிற்கு மிக மோசமாக இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது.

    இந்த நிழற் குடை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு நகர்ப்புறம் செல்வதற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது மேற்படிப்புக்காக நகர் பகுதிகளுக்கு செல்லவும் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் வெயில் நேரத்திலும் மழை நேரத்திலும் இந்த நிழற்குடையில்தான் அமர்ந்திருக்க வேண்டி யுள்ளது. தற்பொழுது இந்த நிழற்குடை மிகவும் பழுதாகி உள்ளதால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தான் பொதுமக்கள் அமர்ந்து பஸ்சுக்காக காத்திருந்து சென்று வருகின்றனர்.

    எனவே இப்பகுதி பொது மக்களின் நலன் கருதி பழுதான நிழற் குடையை அகற்றிவிட்டு புதியதாக நிழற் குடையை அமைக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிருஷ்ணகிரியில் ரூ.6 லட்சம் செலவில் குடிநீர் இணைப்பு பணிகள் நடந்தன.
    • அசோக்குமார் எம்.எல். ஏ., தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சி புளியந்தோப்பு கொத்தாலன் கொட்டாய் கிராமத்தில், மாநில நிதிக்குழு மானியம் திட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில், ஏற்கனவே உள்ள ஆழ்துளைக் கிணறு முதல் சின்டெக்ஸ் டேங்க் வரை குழாய் அமைத்து 25 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்ப டுகிறது. இதற்கான பணியை கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்ட றிந்தார்.

    இந்த நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் ராதா சென்றாயன், ஊர்கவுண்டர் திம்மராயன், கோவிந்தன், மாதன், ரமேஷ், குமார், மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓசூரில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடைபெற்றது.
    • 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஓசூர் ஒன்றிய அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் பவுன்துரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கோபி வரவேற்றார். இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டார தலைவர் பிரசாத், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் தசரத ராமிரெட்டி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்.வட்டார செயலாளர் ஜனார்த்தனா, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் முன்னாள் வட்டார செயலாளர் நாகராஜன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டின்போது, இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண் டும் என்று கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், 200-க்கும் மேற்பட்ட ஓசூர் ஒன்றிய அனைத்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வட்டார தலைவர் நாக பிரசாத் நன்றி கூறினார்.

    • கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் தொடங்கியது.
    • மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிகளில் கலந்து கொள்பவர்கள்

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக்கல்விதுறை சார்பில் வருவாய் மாவட்ட அளவி லான 2 நாள் தடகளப் போட்டி நேற்று தொடங்கி யது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் பரிதாநவாப், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனி ராஜ், தொடக்க கல்வி அலுவலர் ஆனந்தன், மாவட்ட உடற்கல்வி ஆய்வா ளர் துரை, பெருமாள் மணிமேகலை கல்லூரி இயக்குனர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்போட்டிகள், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில், 100, 200, 800, 1500, 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி களைச் சேர்ந்த 1450-க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங் கப்பட உள்ளன. முதலிடம் பெறும் மாணவ, மாண விகள் சென்னையில் நடக்கும் மாநில அளவிலான தடகளப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுகின்றனர். நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆய்வாளர் துரை, உடற் கல்வி இயக்குனர்கள் கிருஷ்ணன், ஜான்பாய், உடற்கல்வி ஆசிரியர்கள் சத்தியநாதன், பார்த்தீபன், அருளரசு, ரகுசரவணன், ஜோதி ஆகியோர் கவுர விக்கப்பட்டனர்.

    இதில், கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி தேவி, கவுன்சி லர்கள் ஜெயகுமார், பிர்தோஷ்கான், செந்தில்கு மார், சுனில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் மாணவ, மாண வியர் மற்றும் ஆசியர்களுக்கு மதிய உணவு வழங் கப்பட்டது.

    • ஊத்தங்கரை அருகே பழுதான தார் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • 5 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாசனூர் முதல் மாரம்பட்டி கூட்ரோடு சாலை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தார் சாலை மிகவும் மோசமாக பழுதாகி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    இந்த சாலையை சாசனூர் உள்ளிட்ட 5 கிராம பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலையாகும். பாம்பாறு அணை கிழக்கு புற கால்வாய் ஓரம் அமைந்துள்ள தார்சாலை கடந்த 5 ஆண்டுகளாக காலமாக பழுதாகி குண்டு குழியமாக காட்சியளிக்கிறது.இப்பகுதி பஸ் வசதி இல்லாத கிராம பகுதியாகும்.

    எனவே அப்பகுதி கிராம மக்கள் அனைவரும் தங்களது அத்தியாவசிய தேவையான மருத்துவமனை , பள்ளி மற்றும் கல்லூரிக ளுக்கு செல்லவும், உணவு பொருட்கள் வாங்கவும், விவசாய இடு பொருட்களை நகர் பகுதியில் விற்பனை செய்ய கொண்டு செல்லவும், சிரமபட்டு வருகின்றனர்.

    மேலும் தங்களது முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய ஊத்தங்கரை போன்ற நகர் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அனைவரும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி இந்த சாலைவழியாக தான் செல்ல  . அப்போது அவர்கள் அந்த சாலையில் சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.பெரும்பாலான நேரங்க ளில் உரிய நேரத்திற்கும் உரிய பணிகளை செய்து முடிக்காத அவல நிலைக்குதள்ளபட்டுள்ளதாக இபபகுதி மக்கள் புலம்புகின்றனர்.

    எனவே இந்த பழுதான தார் சாலையை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×