என் மலர்
கிருஷ்ணகிரி
- ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செயயப்பட்டது.
- 11 பேரை கைது செய்த போலீசார், ரூ.1000 பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்கா ணித்தனர்.
அந்த வகையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த–தாக கிருஷ்ணகிரி, குருபரப் பள்ளி, ஓசூர், பாகலூர், சூளகிரி, பேரிகை, ஊத்தங்கரை, நாகரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 26 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செயயப்பட்டது.
இதேபோல தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதாக கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.700 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பணம் வைத்து சூதாடியதாக பர்கூர், நாகரசம்பட்டி, கெல மங்கலம், சிங்காரப்பேட்டை பகுதிகளை சேர்ந்த 11 பேரை கைது செய்த போலீசார், ரூ.1000 பறிமுதல் செய்தனர்.
இதே போல மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்தாக பாகலூர், கந்திகுப்பத்தில் தலா ஒருவர் என மொத்தம் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பெரியார் பல்கலைக்கழகத்தில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
- பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றி தழும் வழங்கப்பட்டது.
ஓசூர்,
இராமலிங்கர் நற்பணி மன்றமும், ஏவிஎம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 56-ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழாவை முன்னிட்டு,சேலம் மண்டல அளவில் பெரியார் பல்கலைக்கழகத்தில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இவற்றுள் 'ஒளி வழிபாட்டில் ஓங்கும் தத்துவம்' என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சேலம் மண்டல அளவில் ராமலட்சுமி (மூன்றாம் ஆண்டு கணிதம்) மூன்றாம் பரிசு பெற்றார்.
போட்டிகளில். வெற்றி பெற்ற மாணவ-மாணவி யர்களுக்கு சென்னை, மயிலாப்பூர், ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் குன்றக்குடி குருமகா சன்னிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றி தழும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ராமலட்சுமியை, எம்ஜி.ஆர்.கல்லூரி முதல்வர் முத்துமணி தமிழாய்வுத்துறை தலைவர் லட்சுமி மற்றும் தமிழாய்வுத்துறைப் பேராசி ரியர்களும் பாராட்டி வாழ்த்தினர்.
- சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி.வெங்கடேஷ் தலைமை யிலான குழுவினர் அத்திப்பள்ளிக்கு வந்தனர்.
- அதிக ஒலி எழுப்ப கூடிய பட்டாசுகள் இங்கு இருந்துள்ளன
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடக மாநில எல்லையானஅத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில ஆர்ச் அருகில், தேசியநெடுஞ் சாலையையொட்டி,10 பட்டாசு கடைகள் அமைந்துள்ளன. கடந்த 7-ந் தேதி மாலை, அந்த பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் நடந்தபயங்கர தீ விபத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ள குறிச்சிபகுதியை சேர்ந்த 14 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தவிபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.வெடி விபத்து நடந்த இடத்தை கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையாநேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்தவழக்கை சி.ஐ.டி. பிரிவு போலீசார் விசாரிப்பார்கள் என்று அவர் அறிவித்தார். அதன் படி கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி.வெங்கடேஷ் தலைமை யிலான குழுவினர் நேற்று வெடி விபத்து நடந்த அத்திப்பள்ளிக்கு வந்தனர்.
அங்கு வெடி விபத்து நடந்த கடையை ஆய்வு செய்தனர். வெடி விபத்தில் சேதம டைந்த பிக்அப் வேன்கள், எரிந்த லாரி, டூவீலர்கள் மற்றும்கட்டிட சுவர்கள் என அனைத்தையும் அவர்கள் ஆய்வு செய்து போட்டோஎடுத்துக் கொண்டனர். அப்போது சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.பி. மதுக்கர் பவார், அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இது குறித்து அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் கூறியதாவது:-
அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு கடைகள் இயங்க வேண்டும். இங்கு எந்த விதிமுறைகளும் கடை பிடிக்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசின் 25 வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதில் எதையும் இங்கு கடைபிடிக்கவில்லை. குறிப்பாக பட்டாசு கடைகள் அமைந்துள்ள இடத்தில் மணல் வாளிகள் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் நிரப்பப்பட்ட லாரிகள் வைத்திருக்க வேண்டும்.
தீ தடுப்பு கருவிகள் இருக்க வேண்டும். அவசர கால வழிகள் இருக்க வேண்டும். இதில் எதுவும் இந்த பட்டாசு கடையில் இல்லை. காவல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரி யம், வணிக வரித்துறை, தீயணைப்பு துறை என்று பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இங்கு விதிமுறைகளை மீறி பட்டாசு கடை அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டும். ஆனால் அதிக ஒலி எழுப்ப கூடிய பட்டாசுகள் இங்கு இருந்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- தண்ணீர், மண் நிரப்பப்பட்ட வாளிகள் வைக்க வேண்டும்.
- 46 கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரியில் பழையபேட்டையில் கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி பட்டாசு குடோனில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகள், குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது கெலமங்கலம் அருகே ஒரு குடோனில் சோதனை செய்த போது பட்டாசுகள்வெ டித்து சிதறியது. இதில் ஒருவர் பலியானார். அதிகாரிகள் உள்பட 3 பேர் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக பட்டாசு கடைகள், குடோன்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. அதில் 46 கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 14 பேர் பலியானார்கள். இவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளகுறிச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். பெங்களூரு நகருக்குள் பட்டாசு கடைகளுக்கு அனுமதி இல்லாததால் பெரும்பாலானவர்கள் பட்டாசுகள் வாங்க, கர்நாடக எல்லையான ஓசூர் அத்திப்பள்ளி பகுதிக்கு வருவார்கள்.
தற்போது அத்திப்பள்ளி–யில் பட்டாசு கடையில் பயங்கர விபத்து ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் இந்த முறை பட்டாசு கடைகள் அமைக்க அதிகாரிகள் கடும் விதிமுறைகளை வகுத்துள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், பல இடங்களில் பட்டாசு கடைகள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமலும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் இயங்கி வருவதாக பொது மக்கள் தரப்பில் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பட்டாசு கடைகளில் தீயணைப்பு கருவிகள், தண்ணீர், மண் நிரப்பப்பட்ட வாளிகள் வைக்க வேண்டும். கடையில் அவசர கால வழிகள் இருக்க வேண்டும் என்பது உள்பட பல விதிமுறைகள் உள்ளன. இதில் பல பின்பற்றப்படாமல் பல பட்டாசு கடைகள் உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.
எனவே இந்த முறை நகருக்குள் பட்டாசு கடைகளுக்கு அனுமதிக்க கூடாது என்றும், நகருக்கு வெளியே இடங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும் என்றும், இந்த பட்டாசு கடைகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்ய அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி போலீசார் அனுமதி தர மறுத்து விட்டனர்.
- கோட்டை வாசல் பகுதியில் பொதுக்கூட்டத்திற்காக மேடை அமைக்கும் பணி நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கடந்த 1990 அக்டோபர் மாதம் 10-ந்தேதி அயோத்தில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ராமஜோதி ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது தடை செய்யப்பட்ட பகுதியில் அவர்கள் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த சங்கர், பாபு, நரசிம்மய்யா, ராஜா ஆகிய 4 பேர் பலியாகினர்.
அவர்களின் நினைவாக, தேன்கனிக்கோட்டை கோட்டை வாசல் 4 ரோடு அருகே, நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10-ந்தேதி நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியையொட்டி இன்று 33-ம் ஆண்டாக ஊர்வலமாக சென்று நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த விஷ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து அமைப்பினர் தேன்கனிக்கோட்டை போலீசாரிடம் முன் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி போலீசார் அனுமதி தர மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான 4 பேருக்கு நினைவு நாளையொட்டி தேன்கனிக்கோட்டையில் இன்று அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், இந்து அமைப்பினர் தடையை மீறி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறாமல் இருக்கவும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் கோட்டை வாசல் பகுதியில் பொதுக்கூட்டத்திற்காக மேடை அமைக்கும் பணி நடைபெற்றது.
அதனை போலீசார் தடுத்து நிறுத்தி மேடைகளை உடனே அகற்றுமாறு கூறினர். அந்த பகுதியில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- கெலமங்கலம் பேரூராட்சி சார்பில், மாரத்தான் நடை பெற்றது.
- பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலை மை தாங்கி கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சி சார்பில், தகவலறியும் உரிமை சட்டம் விழிப்பு ணர்வு மாரத்தான் நடை பெற்றது.
இதில் பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலை மை தாங்கி கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கி வைத் தார். செயல் அலுவலர் சுப்பிரமணி, துணைத்தலைவர் மும்தாஜ் சையத் அசேன் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய ஓட்டத்தில் பள்ளி மாணவர்கள், தூய்மை பணியாக்ஷளர்கள், திடக்கழிவு பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- பேரணியை வருவாய் கோட்டாட்சியர் பாபு தொடங்கி வைத்தார்.
- மஞ்சப்பை குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் தகவல் அறியும் உரிமை சட்ட வாரவிழா குறித்த விழிப்பு ணர்வு பேரணி நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா நடை பெறுவதை முன்னிட்டு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் பாபு தொடங்கி வைத்து கூறிய தாவது: தகவல் அறியும் உரிமை சட்ட வாரவிழா 5ம் தேதி முதல் 12ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.
புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. பேரணியை தொடர்ந்து மஞ்சப்பை குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது, என்றார்.
இந்நிகழ்வில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மகாலிங் கமூர்த்தி, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெங்க டேஷ், விளையாட்டு அலு வலர் மகேஷ்குமார், சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, வட்டாட்சியர் விஜயகுமார், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
- விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது.
தேன்கனிக்கோட்டை,
\கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பிக்கனப்பள்ளி கிராமத்தில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்ரிகல்சுரல் மார்கெட்டிங் மற்றும் தேசிய லீன் ஆர்கனைசேஷன் ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி இணைந்து நடத்திய தேசிய வேளாண்மை சந்தைப்ப டுத்தல் பற்றி விவசாயிக ளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
இந்த பயிற்சி முகாமில் கணேஷ் தலைமை வகித்தார், கோலட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாராயணப்பா வரவேற்பு ரை ஆற்றினார். இருது கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் கலந்து கொண்டு முகாமை தொ டங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அறங்காவலர் முனி சங்க ரப்பா, விவசாயிகளுக்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் முக்கியத்துவம் குறித்து பேசினார். பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான ஆன்லைன் சந்தைப்படுத்தல் குறித்த அனைத்து புள்ளிவி வரங்களையும் பெங்களூரு வில் உள்ள நியூ ஹொரைசன் பொறியியல் கல்லூரியின் பயிற்சியாளரும் பேராசிரி யருமான டாக்டர் ரோஸ் கவிதா விவசாயம் குறித்த பிரதம மந்திரியின் பல்வேறு திட்டங்களைப் குறித்து. மற்றும் டிஜிட்டல் மார்க் கெட்டிங்கிற்கான பல்வேறு பயன்பாடுகளை விளக்க மாக கூறினார் .
ஆற்றல் திறன் பயிற்சியா ளர் விஸ்வாஸ் கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை விவசாயிகளுக்கு புரிய வைக்கும் ஒரு செயல் விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சிகான ஏற்பாடு களை லீன் அமைப்பின் இயக்குனர் பிரதிபா செய்தி ருந்தார்.
முகாமில் 3 நாள் பயிற்சி கலந்து கொண்ட விவசாயி களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பலியானவர்க ளின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
- ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.
ஓசூர்,
ஓசூர் அருகே மாநில எல்லையில், பட்டாசு கடையில் நடந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி ஆகியோர் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர்.
அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு குடோன் விபத்தில் 14 பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நேற்று காலை சென்னையில் இருந்து பெங்களூரு வந்தனர். அங்கிருந்து காரில் அத்திப்பள்ளி வந்த அவர்கள் பலியானவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பலியான 4பேரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.
அதே போல படுகாயம் அடைந்த ராஜேஷ், தினேஷ் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கி னார்கள். மொத்தம் ரூ.44 லட்சத்திற்கான நிவாரண தொகையை அமைச்சர்கள் வழங்கினார்கள். அப்போது மாவட்ட கலெக்டர் சரயு, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்),டி.ராமச்சந்திரன் (தனி), ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா. உதவி கலெக்டர் சரண்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பேட்டி
பின்னர் அமைச்சர்மா.சுப்பிரமணியன் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நானும் அமைச்சர் சக்கரபாணியும் இங்கு வந்து இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உள்ளோம். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிகமாக கடை கள் அமைத்து, அதற்கு தமிழகத்தை சேர்ந்த வர்களை அழைத்து வருவார்கள். இந்த விபத்தில் இறந்த வர்கள் பட்டாசு கடையில் வேலை செய்வதற்காக வந்தவர்கள் ஆவார்கள். இந்த விபத்தில் மொத்தம் 14 பேர் இறந்துள்ளனர். அவர்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விபத்துக்கான காரணம் குறித்து அத்திப்பள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர்.
- முனிராஜ் தனது நிலக்கடலை தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
- மின்வயர்களில் சிக்கி முனிராஜ் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தடிக்கல் அடுத்துள்ள கோவிந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முனிராஜ் (34). இவர் தனது விவசாய தோட்டத்தில் நிலக்கடலை செடி பயிர்செய்திருந்தார். கடலை தோட்டத்திற்கு காட்டுப்பன்றிகள் வராமல் தடுப்பதற்காக திருட்டுதனமாக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் இரவு அதே கிராமத்தை சேர்ந்த இவரது உறவினர் மஞ்சுநாத் (35) என்பவரை அழைத்து கொண்டு முனிராஜ் தனது நிலக்கடலை தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.
தோட்டத்தில் சிறுது நேரம் இருந்துவிட்டு மின்வேலிக்கு மின்சார இணைப்பு கொடுத்துவிட்டு அருகில் இருக்கும் மற்றொரு தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு மஞ்சுநாத்தை அருகில் உள்ள குடிசையில் தூங்குமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நேற்று சுமார் 7 மணி அளவில் மஞ்சுநாத் குடிசையிலிருந்து எழுந்த வந்து பார்த்தபோது மின்வயர்களில் சிக்கி முனிராஜ் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
இது குறித்து மஞ்சுநாத் உடனே கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். இறந்த முனிராஜிக்கு அம்சா (30) என்ற மனைவியும், கோமதி (11) என்ற மகளும் ஹேமந்த் (8) என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.
- அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.
பொதுவாக பட்டாசு ஆலைகளில் தீ விபத்து நடந்தால் தீ வேகமாக பரவுவதாலும், வெடிகள் வெடிப்பதாலும் அருகில் சென்று தீயை அணைப்பது சிரமமானதாகும். இதனால் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. பட்டாசு ஆலைகளை இயக்குவதற்கு அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் முறையாக கடைபிடிக்கப்படாததாலும் விபத்துகள் நிகழுகின்றன.
கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் வாணவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
- ஜலபதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
- இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜலபதி. இவரது மனைவி அபிஷால்மியா (25). இவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜலபதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை இருந்தது.
இதில் மனமுடைந்த அபிஷால்மியா கடந்த 6-ந் தேதி இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இது தொடர்பாக பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.






