search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
    X

    இறந்த முனிராஜ்.

    மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

    • முனிராஜ் தனது நிலக்கடலை தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
    • மின்வயர்களில் சிக்கி முனிராஜ் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தடிக்கல் அடுத்துள்ள கோவிந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முனிராஜ் (34). இவர் தனது விவசாய தோட்டத்தில் நிலக்கடலை செடி பயிர்செய்திருந்தார். கடலை தோட்டத்திற்கு காட்டுப்பன்றிகள் வராமல் தடுப்பதற்காக திருட்டுதனமாக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் இரவு அதே கிராமத்தை சேர்ந்த இவரது உறவினர் மஞ்சுநாத் (35) என்பவரை அழைத்து கொண்டு முனிராஜ் தனது நிலக்கடலை தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.

    தோட்டத்தில் சிறுது நேரம் இருந்துவிட்டு மின்வேலிக்கு மின்சார இணைப்பு கொடுத்துவிட்டு அருகில் இருக்கும் மற்றொரு தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு மஞ்சுநாத்தை அருகில் உள்ள குடிசையில் தூங்குமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நேற்று சுமார் 7 மணி அளவில் மஞ்சுநாத் குடிசையிலிருந்து எழுந்த வந்து பார்த்தபோது மின்வயர்களில் சிக்கி முனிராஜ் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

    இது குறித்து மஞ்சுநாத் உடனே கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். இறந்த முனிராஜிக்கு அம்சா (30) என்ற மனைவியும், கோமதி (11) என்ற மகளும் ஹேமந்த் (8) என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×