என் மலர்
கிருஷ்ணகிரி
- இரவு வரை மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு, சுரேஷ் தனது அறையில் போய் படுத்து உள்ளார்.
- தொழிலதிபர் சுரேஷ் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்து இருந்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழைய சென்ட்ரல் தியேட்டர் அருகேயுள்ள காந்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் தொழிலதிபர் சுரேஷ். இவருக்கு சொந்தமாக ஜூவல்லரி தொழில் செய்து வருகிறார். இதனை தவிர ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் இவர் வசித்து வந்த அவரது வீட்டில் இருந்து திடீரென்று சத்தம் கேட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் மனைவி மற்றும் குழந்தைகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது சுரேஷ் துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழிலதிபர் சுரேஷ் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்து இருந்துள்ளார். இரவு வரை மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு தனது அறையில் போய் படுத்து உள்ளார். இன்று காலையில் தான் துப்பாக்கியால் கழுத்தில் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி பகுதியில் செல்வாக்குடன் இருந்து வந்த தொழிலதிபர் என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த சுரேஷ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரது வீடு முன்பு திரண்டு உள்ளனர். கிருஷ்ணகிரி டவுனில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீசார் குவிக்கப்பட்டு பாதுபாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கெலமங்கலம் அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- நம்மை காக்கும் 48 திட்டம் குறித்து கோவர்த்த னால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை நடத்திவரும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துவக்க நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை கெலமங்கலம் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் கிருஷ்ணகிரி கட்டுமானம் மற்றும் பரா மரிப்பு கோட்டப் பொறியா ளர் சரவணன் துவக்கி வைத்தார்.
கல்லூரி இயந்தி ரவியல் துறை விரிவுரை யாளர் சீனிவாசன் அனைவ ரையும் வரவேற்று பேசி னார், கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் தலைமையு ரை வழங்கினார்.
நிகழ்வில் சாலைப் பாதுகாப்பு குறித்த விளக்கக் காட்சிகளுடன், மாணவ மாணவியர் தங்க ளுடைய இல்லத்தில் இருந்து கல்லூரி அடையும் வரை பின்பற்ற வேண்டிய பாது காப்பு விதிகள் குறித்தும், வாகன உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கக் கூடாத காரணம் குறித்தும், தமிழ கத்தில் ஒரு வருடத்தில் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அதை குறைப்ப தற்கான வழிகள் குறித்தும் தோழன் அமைப் பின் ஜெகதீஸ்வரன் விளக் கினார்.
விபத்தில் சிக்கிய வர்களை உடனடியாக காக்கும், தமிழக அரசின் "நம்மை காக்கும் 48" திட்டம் குறித்து கோவர்த்த னால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
யாருக்கேனும் விபத்து நடந்தால் அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்களையும், விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியவருக்கு கிடைக்க வேண்டிய உதவி குறித்தும், எவ்வாறு ஆம்புலன்ஸை அழைப்பது போன்ற விஷயங்களை தோழன் அமைப்பின் நந்தகு மார் விளக்கினார்.
அதைத் தொடர்ந்து கலந்து கொண்ட மாணவ, மாண விகளுக்காக சாலைப் பாது காப்பு குறித்த கவிதை, ஓவியம் மற்றும் வாசகப் போட்டி நடத்தப்பட்டது. சிறப்பாக கவிதை, ஓவியம் மற்றும் வாசகங்கள் எழுதிய வர்களுக்கும், நிகழ்ச்சி நடக்கும்போது கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் தெரிவித்த மாணவ மாணவிகளுக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப் பட்டது.
அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சாலைப் பாதுகாப்பு துண்டறிக்கை வழங்கப்பட்டது. இறுதியில் தேன்கனிக்கோட்டை கட்டுமான மற்றும் பரா மரிப்பு உதவிக் கோட்டப் பொறியாளர் திருமால் செல்வன் சாலைப் பாது காப்பு உறுதி மொழியை மாணவ, மாணவிகள் ஏற்கச் செய்தார். சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி வாசிக்க மற்ற மாணவ, மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் தேன்கனிக் கோட்டை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு இளநி லைப் பொறியாளர் டேவிட், ராயக்கோட்டை கட்டுமா னம் மற்றும் பராமரிப்பு உதவிப் பொறியாளர் மன்னர் மன்னன், நெடுஞ்சா லைத் துறை ஊழியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரி யர்கள் கலந்துகொண்டனர்.
- ஒசூர் அருகே 7 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- விபத்தில் பலி எண்ணிக்கை 16 உயர்வு
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் அதிதிப்பள்ளி வளைவு அருகே நவீன் என்பவர் பட்டாசு கடையை நடத்திவந்தார். இந்த கடையில், கடந்த, 7-ந்தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த 14 இளைஞர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், நேற்று ஒரு இளைஞரும், இன்று காலை ஒரு இளை ஞரும் சிகிச்சை பலனளிக் காமல் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
தவிர, இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள், 2பிக்கப் வேன்கள், 1சரக்கு லாரி என 15-க்கும் மேற் பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, கர்நாடக மாநில முதல் -மந்திரி சித்தராமையா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டும், உயிரிழந்த வர்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்க ளுக்கும் ஆறுதல் கூறினார். மேலும், பட்டாசு கடை வெடி விபத்து வழக்கினை, குற்ற புலனாய்வுத்துறைக்கு மாற்றியுள்ளதாக அறிவித் தார். இதனைக் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவு போலீஸ் சூப்பிரண்டு.வெங்கடேஷ் தலைமையி லான குழுவினர் வெடி விபத்து நடந்த அத்திப்பள் ளிக்கு வந்தனர்.
அங்கு வெடி விபத்து நடந்த கடையை ஆய்வு செய்தனர். வெடி விபத்தில் சேதமடைந்த பிக்அப் வேன்கள், எரிந்த லாரி, இருசக்கர வாகனங்கள் மற்றும் கட்டிட சுவர்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.பி.பிர வீன் மதுக்கர் பவார், அத்திப் பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் மற்றும் அலுவ லர்கள் உடன் இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) சிஐடி பிரிவு டிஜிபி எம்,ஏ, சலீம், மற்றும் ஐ.ஜி.பி பிரவீன் மதுக்கர் பவார், ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, நேற்று டிஒய்எஸ்பி சீனிவாசன், போலீஸ் சூப்பிரண்டு மல்லி கார்ஜூன பால்தண்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தம் மற்றும் போலீஸ் அதிகாரிகள், கர்நாடகா லோகாயுக்தா அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக எல்லையில் வைக்கப்பட்டி ருந்த 7 பட்டாசு கடைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்த னர். பின்னர், அந்த கடைக ளுக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்ட னர். மேலும், ஆனேக்கல் தாலுக்காவில் உள்ள அனைத்து பட்டாசு கடைக ளுக்கும் சீல் வைக்க அதிகாரி கள் நடவடிக்கை எடுத்துள்ள தாக தெரிய வந்துள்ளது.
- விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து பெங்களூரு பகுதியில் வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் கடந்த 7-ந்தேதி, நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 14 இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து பெங்களூரு பகுதியில் வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள உள்ள வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் (17) என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூர் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கர்நாடக மாநிலம் முல்பாகலை சேர்ந்த வெங்கடேஷ் (25) என்ற வாலிபரும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, பட்டாசு கடை தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது.
- ரூ.164 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடை பெற்று வருகிறது.
- மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரி களுடன் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி 29-வது வார்டிற்குட்பட்ட சானசந்திரம், முல்லை நகர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.164 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடை பெற்று வருகிறது. இதனை, மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரி களுடன் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, அப்பகுதியில் அமைக்கப் பட்டுள்ள சாலையின் தரம், அதன் உயரம், அகலம் குறித்தும் மற்றும் மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படு கிறதா? என அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து, அப்பகுதியில், மின் தகன மேடை , கால் சென்டர் கட்டிடம் , ரேஷன் கடை, அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும், மேயர் சத்யா கேட்டறிந்தார். இந்நிகழ்வில், மண்டல குழு தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் தில்ஷாத் ரகுமான். மற்றும் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சந்தீப், அமான் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- உடன் வந்த 3 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் மண்ணடி கிராமத்தைச் சுரேஷ் மகன் சந்தீப் (வயது26), அதே பகுதியைச் சேர்ந்த அமான் (26), ஜமாலுதீன் மகன் ரியாஸ் (24), அடூரைச் சேர்ந்த மித்துஜிலால்(26), கிருஷ்ணன் சாந்த் (22) ஆகிய 5 பேரும் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு வந்தனர்.
அந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரபள்ளி, போலுப்பள்ளி அருகே உள்ள கிருஷ்ணகிரி - ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புளியரசிமேடு என்ற பகுதிக்கு இன்று அதிகாலை வந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த சந்தீப், அமான் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த ரியாஸ், மித்துஜிலால், கிருஷ்ணன் சாந்த் ஆகிய 3பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குருபரப்பள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான சந்தீப், அமான் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியுள்ள நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கால்நடைகளை ஆற்றங்கரையேராம் கொண்டு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உருவாகிறது தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து வங்கக்கடலில் கலக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஆர்.பி அணை கட்டப்பட்டுள்ளது.
இந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீர், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் நந்தி மலை, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் போது கே.ஆர்.பி. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.
தற்போது கர்நாடகாவின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முழுக்கொள்ளளவான 52 அடி உயரம் கொண்ட இந்த கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியுள்ளது.
இதனை தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு 1114 கனஅடி நீர் வரும் நிலையில் 1176 கன அடி அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆற்றின் கரையை கடக்க வேண்டாம் என்றும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை ஆற்றங்கரையேராம் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் 22-ந் தேதியும் கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறதக்கப்பட்டது. அப்போதும் தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு கடைகள் இயங்க வேண்டும்.
- விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில ஆர்ச் அருகில், தேசிய நெடுஞ்சாலையையொட்டி,10 பட்டாசு கடைகள் அமைந்துள்ளன. கடந்த 7-ந் தேதி மாலை, அந்த பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் நடந்த பயங்கர தீ விபத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 14 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.வெடி விபத்து நடந்த இடத்தை கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த வழக்கை சி.ஐ.டி. பிரிவு போலீசார் விசாரிப்பார்கள் என்று அவர் அறிவித்தார்.
அதன்படி கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி.வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று வெடி விபத்து நடந்த அத்திப்பள்ளிக்கு வந்தனர். அங்கு வெடி விபத்து நடந்த கடையை ஆய்வு செய்தனர். வெடி விபத்தில் சேதமடைந்த பிக்அப் வேன்கள், எரிந்த லாரி, டூவீலர்கள் மற்றும்கட்டிட சுவர்கள் என அனைத்தையும் அவர்கள் ஆய்வு செய்து போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.பி. மதுக்கர் பவார், அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் கூறியதாவது:-
அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு கடைகள் இயங்க வேண்டும். இங்கு எந்த விதிமுறைகளும் கடை பிடிக்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசின் 25 வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதில் எதையும் இங்கு கடைபிடிக்கவில்லை. குறிப்பாக பட்டாசு கடைகள் அமைந்துள்ள இடத்தில் மணல் வாளிகள் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் நிரப்பப்பட்ட லாரிகள் வைத்திருக்க வேண்டும்.
தீ தடுப்பு கருவிகள் இருக்க வேண்டும். அவசர கால வழிகள் இருக்க வேண்டும். இதில் எதுவும் இந்த பட்டாசு கடையில் இல்லை. காவல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வணிக வரித்துறை, தீயணைப்பு துறை என்று பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இங்கு விதிமுறைகளை மீறி பட்டாசு கடை அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டும். ஆனால் அதிக ஒலி எழுப்ப கூடிய பட்டாசுகள் இங்கு இருந்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செயயப்பட்டது.
- 11 பேரை கைது செய்த போலீசார், ரூ.1000 பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்கா ணித்தனர்.
அந்த வகையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த–தாக கிருஷ்ணகிரி, குருபரப் பள்ளி, ஓசூர், பாகலூர், சூளகிரி, பேரிகை, ஊத்தங்கரை, நாகரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 26 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செயயப்பட்டது.
இதேபோல தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதாக கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.700 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பணம் வைத்து சூதாடியதாக பர்கூர், நாகரசம்பட்டி, கெல மங்கலம், சிங்காரப்பேட்டை பகுதிகளை சேர்ந்த 11 பேரை கைது செய்த போலீசார், ரூ.1000 பறிமுதல் செய்தனர்.
இதே போல மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்தாக பாகலூர், கந்திகுப்பத்தில் தலா ஒருவர் என மொத்தம் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பெரியார் பல்கலைக்கழகத்தில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
- பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றி தழும் வழங்கப்பட்டது.
ஓசூர்,
இராமலிங்கர் நற்பணி மன்றமும், ஏவிஎம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 56-ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழாவை முன்னிட்டு,சேலம் மண்டல அளவில் பெரியார் பல்கலைக்கழகத்தில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இவற்றுள் 'ஒளி வழிபாட்டில் ஓங்கும் தத்துவம்' என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சேலம் மண்டல அளவில் ராமலட்சுமி (மூன்றாம் ஆண்டு கணிதம்) மூன்றாம் பரிசு பெற்றார்.
போட்டிகளில். வெற்றி பெற்ற மாணவ-மாணவி யர்களுக்கு சென்னை, மயிலாப்பூர், ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் குன்றக்குடி குருமகா சன்னிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றி தழும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ராமலட்சுமியை, எம்ஜி.ஆர்.கல்லூரி முதல்வர் முத்துமணி தமிழாய்வுத்துறை தலைவர் லட்சுமி மற்றும் தமிழாய்வுத்துறைப் பேராசி ரியர்களும் பாராட்டி வாழ்த்தினர்.
- சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி.வெங்கடேஷ் தலைமை யிலான குழுவினர் அத்திப்பள்ளிக்கு வந்தனர்.
- அதிக ஒலி எழுப்ப கூடிய பட்டாசுகள் இங்கு இருந்துள்ளன
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடக மாநில எல்லையானஅத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில ஆர்ச் அருகில், தேசியநெடுஞ் சாலையையொட்டி,10 பட்டாசு கடைகள் அமைந்துள்ளன. கடந்த 7-ந் தேதி மாலை, அந்த பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் நடந்தபயங்கர தீ விபத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ள குறிச்சிபகுதியை சேர்ந்த 14 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தவிபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.வெடி விபத்து நடந்த இடத்தை கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையாநேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்தவழக்கை சி.ஐ.டி. பிரிவு போலீசார் விசாரிப்பார்கள் என்று அவர் அறிவித்தார். அதன் படி கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி.வெங்கடேஷ் தலைமை யிலான குழுவினர் நேற்று வெடி விபத்து நடந்த அத்திப்பள்ளிக்கு வந்தனர்.
அங்கு வெடி விபத்து நடந்த கடையை ஆய்வு செய்தனர். வெடி விபத்தில் சேதம டைந்த பிக்அப் வேன்கள், எரிந்த லாரி, டூவீலர்கள் மற்றும்கட்டிட சுவர்கள் என அனைத்தையும் அவர்கள் ஆய்வு செய்து போட்டோஎடுத்துக் கொண்டனர். அப்போது சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.பி. மதுக்கர் பவார், அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இது குறித்து அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் கூறியதாவது:-
அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு கடைகள் இயங்க வேண்டும். இங்கு எந்த விதிமுறைகளும் கடை பிடிக்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசின் 25 வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதில் எதையும் இங்கு கடைபிடிக்கவில்லை. குறிப்பாக பட்டாசு கடைகள் அமைந்துள்ள இடத்தில் மணல் வாளிகள் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் நிரப்பப்பட்ட லாரிகள் வைத்திருக்க வேண்டும்.
தீ தடுப்பு கருவிகள் இருக்க வேண்டும். அவசர கால வழிகள் இருக்க வேண்டும். இதில் எதுவும் இந்த பட்டாசு கடையில் இல்லை. காவல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரி யம், வணிக வரித்துறை, தீயணைப்பு துறை என்று பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இங்கு விதிமுறைகளை மீறி பட்டாசு கடை அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டும். ஆனால் அதிக ஒலி எழுப்ப கூடிய பட்டாசுகள் இங்கு இருந்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- தண்ணீர், மண் நிரப்பப்பட்ட வாளிகள் வைக்க வேண்டும்.
- 46 கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரியில் பழையபேட்டையில் கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி பட்டாசு குடோனில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகள், குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது கெலமங்கலம் அருகே ஒரு குடோனில் சோதனை செய்த போது பட்டாசுகள்வெ டித்து சிதறியது. இதில் ஒருவர் பலியானார். அதிகாரிகள் உள்பட 3 பேர் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக பட்டாசு கடைகள், குடோன்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. அதில் 46 கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 14 பேர் பலியானார்கள். இவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளகுறிச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். பெங்களூரு நகருக்குள் பட்டாசு கடைகளுக்கு அனுமதி இல்லாததால் பெரும்பாலானவர்கள் பட்டாசுகள் வாங்க, கர்நாடக எல்லையான ஓசூர் அத்திப்பள்ளி பகுதிக்கு வருவார்கள்.
தற்போது அத்திப்பள்ளி–யில் பட்டாசு கடையில் பயங்கர விபத்து ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் இந்த முறை பட்டாசு கடைகள் அமைக்க அதிகாரிகள் கடும் விதிமுறைகளை வகுத்துள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், பல இடங்களில் பட்டாசு கடைகள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமலும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் இயங்கி வருவதாக பொது மக்கள் தரப்பில் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பட்டாசு கடைகளில் தீயணைப்பு கருவிகள், தண்ணீர், மண் நிரப்பப்பட்ட வாளிகள் வைக்க வேண்டும். கடையில் அவசர கால வழிகள் இருக்க வேண்டும் என்பது உள்பட பல விதிமுறைகள் உள்ளன. இதில் பல பின்பற்றப்படாமல் பல பட்டாசு கடைகள் உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.
எனவே இந்த முறை நகருக்குள் பட்டாசு கடைகளுக்கு அனுமதிக்க கூடாது என்றும், நகருக்கு வெளியே இடங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும் என்றும், இந்த பட்டாசு கடைகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்ய அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






