என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் பகுதியில்  வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் சத்யா ஆய்வு
    X

    ஓசூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் சத்யா ஆய்வு

    • ரூ.164 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடை பெற்று வருகிறது.
    • மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரி களுடன் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி 29-வது வார்டிற்குட்பட்ட சானசந்திரம், முல்லை நகர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.164 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடை பெற்று வருகிறது. இதனை, மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரி களுடன் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, அப்பகுதியில் அமைக்கப் பட்டுள்ள சாலையின் தரம், அதன் உயரம், அகலம் குறித்தும் மற்றும் மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படு கிறதா? என அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து, அப்பகுதியில், மின் தகன மேடை , கால் சென்டர் கட்டிடம் , ரேஷன் கடை, அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.

    பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும், மேயர் சத்யா கேட்டறிந்தார். இந்நிகழ்வில், மண்டல குழு தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் தில்ஷாத் ரகுமான். மற்றும் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×