search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூரில் துணிகரம்: டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மேற்கூரையை உடைத்து ரூ.1.40 லட்சம் பணம் கொள்ளை
    X

    சிசிடிவி கேமராவில் பதிவான திருடனை படத்தில் காணலாம்.

    மத்தூரில் துணிகரம்: டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மேற்கூரையை உடைத்து ரூ.1.40 லட்சம் பணம் கொள்ளை

    • இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு உறங்க சென்றுள்ளார்.
    • சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டிபார் மெண்ட்ஸ்டோர் கடையை உடைத்து கொள்ளை

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பேருந்து நிலையம் அருகில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கடை செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமை யாளர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு உறங்க சென்றுள்ளார்.

    அப்போது ஒரு மர்ம நபர் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளை அடித்துள்ளார்.

    அப்போது சத்தம் கேட்க வே வீட்டில் இருந்து வந்து பார்த்த போது மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    அதனை தொடர்ந்து கடையை திறந்து கல்லா பெட்டியை பார்த்தபோது பணம் கொள்ளை அடித்தது தெரியவந்தது.

    இது குறித்து கடையின் உரிமையாளர் முரளிதரன் மத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் நேரில் சென்று விசாரித்து அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவா னதை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×