search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.2.25 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி
    X

    புதிய வகுப்பறைகள் கட்டும் பணியினை பூமி பூஜை செய்து மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.2.25 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி

    • கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என பள்ளி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • புதியவகுப்பறைகள் கட்டும் பணியினை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.25 கோடி மதிப்பில் புதியவகுப்பறைகள் கட்டும் பணியினை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுங்கல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என பள்ளி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து, நபார்டு திட்டத்தில், புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்ட, ரூ.2.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் பங்கேற்று, கட்டுமான பணிகளை பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாக ராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×