என் மலர்
கிருஷ்ணகிரி
- கோவில் புதுப்பிக்கும் பணியின் போது இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது.
- வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவமும் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடியில் இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் சம்பத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை ஆதிதிராவிடர் நல ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடி கிராமத்தில், மாரியம்மன் கோயில் புதுப்பிக்கும் பணியின் போது இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்கள் வீசி தாக்கியும், வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவமும் நடந்தது. இதில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் சோக்கா டியில் இருதரப்பினரிடையே நடந்த மோதல் பகுதிகளை, மாநில ஆதிதிராவிடர் நல ஆணைய இயக்குனர் ரவிவர்மன், மாநில ஆதிதிராவிடர் நல ஆணைய ஆலோசகர் ராமசாமி ஆகியோர், மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலையில் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தும் ஆறுதல் கூறிய அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்றனர். இதில், மாவட்ட எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ்குமார், ஏடிஎஸ்பி விவேகானந்தன், கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி, தாசில்தார் விஜயகுமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
- குழந்தை திருமணத்தை தடுக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்து ரைக்கப்பட்டது.
- குழந்தைகள் நல அலுவலர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மதுவிலக்கு, சைபர் கிரைம், குழந்தை திருமணம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலை வரும், முதன்மை நீதிப தியுமான சுமதிசாய் பிரியா தலைமை தாங்கி பேசியபோது ஆன்லைன் கடன், பண இரட்டிப்பு மோசடி, குறித்தும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினார். தொடர்ந்து, மொபைல் ஆப் மூலம் பணத்தாசை காட்டி மோசம் செய்வது, கஞ்சா, போதை பழக்கங்களால் உடல்ந லத்துடன் குடும்பங்களும் சீரழிவது, குழந்தை திருமணத்தை தடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்து ரைக்கப்பட்டது.
மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் நிலைய கண்காணிப்பாளர் சரண்யா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான ஜெனிபர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், உள்பட, 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
- வடகிழக்கு பருவ மழை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஏரியில் விழுந்த ஒருவரின் உயிரை காப்பாற்றுவது போல நிகழ்த்தி காட்டினர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட துரை ஏரியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு மீட்புத்துறை, வருவாய் துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை வருகை எதிரொலியாக பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒசூர் தீயணைப்பு நிலைய அலுவலர் நாக விஜயன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக சூளகிரி தாசில்தார் சக்திவேல், வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம அலுவலர் அகிலன் மற்றும் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர். இதில் தீயணைப்பு மீட்புகுழு வினர் மிக தத்துருபமாக ஏரியில் விழுந்த ஒருவரின் உயிரை காப்பாற்றுவது போல நிகழ்த்தி காட்டினர்.
கிணறு , ஏரி, குளம் பகுதிகளில் விழுந்த வர்களை பொதுவாக பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபடும் போது பிளாஸ்டிக் கேன்கள் , பிளாஸ்ட்டி பாட்டில்கள், காளி சிலிண்டர்களை இடுப்பில் கட்டி கொண்டு காப்பாற்ற முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினர்.
- ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- மருத்துவர்கள் நேற்று அவரை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த வடமாநில வாலிபருக்கு 93 நாள் சிகிச்சை அளித்து டாக்டர்கள் குணமாக்கினர். கிருஷ்ணகிரியில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலை யில் சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர், தான் யார் என்ற விவரம் கூட தெரியாத அளவில் இருந்தார். அவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.பூவதி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் மன நல மருத்துவர்கள் பூங்கொடி, முனிவேல், சுவேதா மற்றும் செவிலியர் குமார் அடங்கிய குழுவினர் தொடர் சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து, 80 நாட்கள் சிகிச்சையளித்தும் சுயநினை வின்றி இருந்த வாலிபருக்கு, 81வது நாளில் சுயநினைவு மெதுவாக திரும்பியது. அவர் தன் பெயரை கூறாமல், ஒரிசா மாநிலம் கதிகானியா என்னும் அவரது ஊர் பெயரை மட்டும் திரும்ப திரும்ப கூறியுள்ளார். இது குறித்து டாக்டர்கள் அனுப்பிய விவரங்களுடன் போலீசார், மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒரிசா மாநிலம், கதிகானியாவை சேர்ந்த அஜய்,(வயது18) என்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அஜய்யை அழைத்து செல்ல அவரது உறவினர் பிஜய்குமார் என்பவர் வந்த நிலையில் அஜய்யின் ஆவணங்களை போலீசார் சரிபார்த்து அவருடன் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 93 நாட்கள் சிகிச்சை பெற்று குணமடைந்த அஜய்யை, ஒரிசா மருத்துவமனையில் சிகிச்சையை தொடருமாறு கூறிய மருத்துவர்கள் நேற்று அவரை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி வைத்தனர்.
- கிருஷ்ணகிரி மேற்பார்வையாளர் ஆய்வு
- 1,090 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் மேற்பார்வை யாளராக, மீன்வளம் மற்றும் மீனவர் நல ஆணையர் பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலையில் நடந்த கூட்டத்தில், மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, கிருஷ்ணகிரி மாவட் டத்தில் வாக்காளர் பட்டியல் -2024 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற்று வருகின்றது.
வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் இன்று(5ம் தேதி), வருகிற 18 மற்றும் 19ம் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 1,090 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
முகாம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் இலவச கட்டணமில்லா தொலை பேசி எண் 04343-1950 என்கிற எண்ணில் அழைத்து தங்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் பெறலாம். இந்த சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2024-ல் பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு முறையான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்றார்.
முன்னதாக பையூர், காவேரிப்பட்டணத்தில் 9 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை, வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் பாபு, ஓசூர் துணை ஆட்சியர் (பொ) பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டரின் நேர்முகஉதவியாளர் சுந்தரராஜன், தேர்தல் தாசில்தார் ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பொட்டு, மயிலை, நாடு, செம்மறி என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
- 15 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகின.
மத்தூர்:
தீபாவளி பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஜோராக நடைபெற்றது. அந்த ஆடுகளை வாங்குவதற்காக போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுகிழமை தோறும் கூடுவது வழக்கம். இச்சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை அனைத்தும் விற்கப்படுவதால், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வாரச்சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் வருகிற 12-ந்தேதி அன்று தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக ரூ. 1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிராமங்களில் பண்டிகைகளை எதிர்பார்த்து விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும்போது சராசரி விலையை விட சற்று கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக் கிடாய்கள் வரத்து அதிகமாக இருந்தது. பொட்டு, மயிலை, நாடு, செம்மறி என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 15 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகின.
சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- மடக்கிபிடித்து அவரிடமிருந்த 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
- போலீசார் மூர்த்தியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜெ. காருப்பள்ளி பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் கெலமங்கலம் போலிசார் ஜெ. காருப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை மடக்கிபிடித்து அவரிடமிருந்த 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், பிடிப்பட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் உள்ள காமையூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 24) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மூர்த்தியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்
- தொடர்ந்து 8 கி.மீ.தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், சென்னையில் இன்று காலை சுகாதாரத் துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தை, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து , கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா ஆகியோர் முன்னிலையில் முன்னிலையில், இந்த திட்டத்தை, ஓசூர் அண்ணாமலை நகரில் உள்ள நகர்புற நல மையம் அருகில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், துணை மேயர் ஆனந்தய்யா, சுகாதாரத்துறை அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர தொடர்ந்து 8 கி.மீ.தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
- மத்தூர் அருகே போலீஸ்காரர் ரோட்டோர பேரிகார்டு தடுப்பில் மோதி பலியானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பார்த்திபன் இவரது மகன் சத்தியமூர்த்தி (வயது 35).
இவர் 2013-ம் ஆண்டு காவலராக தேர்ச்சி பெற்று தற்பொழுது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் ஆயுத படையில் முதல் நிலை போலீசாக பணியாற்றி வந்தார். இவருக்கு நேத்ரா என்ற மனைவியும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் இவர் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி காவலர் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தார். போலீஸ்காரர் சத்தியமூர்த்தியின் சொந்த ஊரான ஊத்தங்கரைக்கு செல்ல கடந்த 2-ந் தேதி அன்று அவரது இருக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து மத்தூர் அருகே உள்ள அந்தப் பட்டி கூட்டுச் சாலையில் அருகே வந்த போது அங்கு பெங்களூரு திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையின் குருக்கே போலீசார் வைத்திருந்த பேரி கார்டு தடுப்பு கம்பி மீது நிலை தடுமாறி சத்தியமூர்த்தி இருசக்கர வாகனம் மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சைகாக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைகாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் சத்தியமூர்த்தி நேற்று மாலை உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
- 3 கிலோ மீட்டர் தூர சாலைகள் குண்டும் குழியாகவும், மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாகவும் உள்ளது.
கணவாய்ப்பட்டி வெங்கட்ட ரமண சாமி கோவில் முதல் மேலேரிக்கொட்டாய் வரை உள்ள சுமார், 3 கிலோ மீட்டர் தூர சாலைகள் குண்டும் குழியாகவும், மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாகவும் உள்ளது. இதனால் இப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் விழுந்து விபத்துகளுண் அதிகரித்துள்ளது. இதை சீர் செய்யக் கோரி பொதுமக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை என கூறப்படுகிறது.
இதனால் நேற்று காலை மேலேரிக்கொட்டாய் -கிருஷ்ணகிரி சாலையில் அப்பகுதியை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் மற்றும் கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் மற்றும் வருவாய்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி மனு அளித்து வருடக்கணக்கில் ஆகியும் நடவடிக்கை இல்லை. சாக்கடை கால்வாய் இல்லை; குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என்றனர். அந்த நேரம் சாலை மறியல் காரணமாக அரசு பஸ்கள், தனியார் பள்ளி வாகனங்கள் செல்ல முடியவில்லை.இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளா னார்கள்.
தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ஆஜி உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தொடர்ந்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்
- பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் கியூ.ஆர்.கோடு வசதியை தொடங்கி வைத்தார்.
கெலமங்கலம் வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடன் வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டி.ராமச்சந்திரன் (தளி), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, 1,188 பேருக்கு ரூ.21 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
மேலும் மேல்கரடிகுறி, கொத்த கிருஷ்ணப்பள்ளி, துடுக்கனஅள்ளி ஆகிய பகுதிகளில் 3 ரேஷன் கடைகளை திறந்து வைத்தார். அனைத்து ரேஷன் கடைகளிலும் பணமில்லாத பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் கியூ.ஆர்.கோடு வசதியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:-
தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆட்சியில் 376 அரவை நிலையம் மட்டுமே செயல்பட்டு வந்தது. தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு 700 அரவை ஆலைகளாக உயர்த்தியும், 21 மார்டன் ரைஸ் மில் ஆகியவற்றின் மூலம் கருப்பு பழுப்பு இல்லாத அரிசியை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. 29 மாதங்களில் 16 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. குடும்ப அட்டைகள் தொலைத்த வர்கள் புதிய குடும்ப அட்டை பெற இணையதளம் மூலம் ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி, பொதுமக்கள் பயனடையும் வகையில் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள், மருத்துவ முகாம்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேப்போல் கூட்டுறவு துறை சார்பாக பொதுமக்கள் பயனடையும் வகையில் கடன் வழங்கும் விழா நடத்தப்பட்டு பயிர்கடன், கால்நடை பராமரிப்பு கடன், சுய உதவிக்குழு கடன், மாற்றுத் திறனாளிக் கடன், சிறுவணிக கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் என பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 57 இதர கூட்டுறவு நிறுவனங்களும், 22 தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளும் செயல்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பாக, 2022 2023 ஆம் நிதியாண்டிற்கு 33,011 நபர்களுக்கு ரூ.2 கோடியே 68 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலும், 2023 -24 ஆம் நிதியாண்டிற்கு 15,340 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 43 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். இதில் ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் லர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) குமரன், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாச ரெட்டி, பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் குமார், தாசில்தார் பரிமேலழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மர்ம நபர்கள் 2 பேர் தமிழரசியை பின்தொடர்ந்துள்ளனர்.
- மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
மதுரை மாவட்டம், கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன்.இவரது மனைவி தமிழரசி (வயது 59). இவர்களுடைய மகள் ரேணுகா கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், குறிஞ்சி நகரில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று தனது மகளை பார்க்க ஓசூர் குறிஞ்சி நகருக்கு தமிழரசி வந்துள்ளார்.நேற்று ஓசூர் சாலையில் மணல் மாரியம்மன் கோவில் அருகில் தமிழரசி நடந்து சென்று கொண்டிருநதார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் தமிழரசியை பின்தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென்று மர்ம நபர்கள் துணிப்பையில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை தமிழரசியின் முகத்தின் மீது தூவினர். பின்னர் அவர் எரிச்சலால் கத்தினார்.
இதனையடுத்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு 2 பேரும் தப்பி ஓடினர். இந்த திருட்டு சம்பவம் குறித்து தமிழரசி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.






