என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிருஷ்ணகிரியில் வெவ்வேறு இடங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்சூர் அருகேயுள்ள பண்ண சீமளூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜன் மகன் அன்பழகன் (28). இவர் ராயக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் அன்பழக னுக்கும் ஒரு இளம்பெண்ணக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கு அன்பழகன் குடு்ம்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் மனம் உடைந்த அன்பழன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஒசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே போன்று மத்தகிரி கூடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அபிஷேக்(26) இவர் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த பெண் விவகாரத்து பெற்று சென்று விட்டார். இதில் மன வருத்தத்தில் இதில் மன வருத்தத்தில் இருந்து வந்த அபிஷேக் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பொங்கல் பரிசு தொகுப்புடன் மண் பானை, அடுப்பு வழங்க கோரிக்கை
    • ஏரிகளின் மண் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் எஸ்.எம்.முருகேசன் தலைமையில், பொங்கல் பண்டிகைக்கு வழங்கும் பரிசுத் தொகுப்புடன் மண் பானை மற்றும் அடுப்பையும் சேர்த்து வழங்கக்கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குலாலர் சமூகத்தினர் ஒன்றிணைந்து பல கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளது. பொங்கல் திருநாளில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு அரிசி, கரும்பு உள்ளிட்ட வைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பொங்கலுக்கு மிக முக்கியமானது மண்பானை. அதுதான் பாரம்பரியம். அலுமினியம், பித்தளை பாத்திரங்கள் வந்தபின் மண்பானை தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு, இத்தொழில் செய்ப வர்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.

    எனவே இந்த ஆண்டிலிருந்து தமிழக முதல்-அமைச்சர் அரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றுடன் சேர்த்து, எங்கள் குலத் தொழில் பாதிக்கப்படாமல் இருக்க ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும், மண் பானை மற்றும் அடுப்பை வழங்க வேண்டும். மண்பானை மற்றும் மண் அடுப்பை வழங்குவதில் சிக்கல் உள்ளதாக கருதி னால், எந்த ரேஷன் கடைக்கு எவ்வளவு மண்பானை, அடுப்பு வேண்டும் என்று சொன்னால் நாங்களே முன்னின்று பாதுகாப்புடன் மண்பானையுடன் அடுப்பை யும் ஒப்படைப்போம்.

    அதே போல் ஏரிகளில் களி மண் எடுக்க எங்களுக்கு தொடர்ந்து இடையூறுகள் உள்ளன. அவற்றையும் களைந்து எந்த நிபந்தனையும் இன்றி குலாலர்கள், ஏரிகளின் மண் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரி அருகே மாமரங்களை வெட்டி அழித்த மர்ம நபர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
    • அதிகாரிகள் விசாரணை

    சின்னகுட்டை கிராமத்தை விவசாயிகள் கலெக்டரை சந்தித்து கொ டுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அணைக்கு நிலம் கொடுத்தவர் விவசா யிகள் ஒரு தரப்பினர், அகரம் அருகே சின்ன குட்டையில மலை கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் அணைக்கு நிலம் கொடுத்த தற்காக, வழங்கப்பட்ட நிலத்தில் விவசாயிகள் மரக்கன்றுகள் வைத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்து றையினர் என கூறி கொண்டு மர்ம நபர்கள் 3 பேர், மாந்தோட்டத்தில் இருந்த 30 மரங்களை வெட்டி அழித்துள்ளனர். ஏற்கனவே நாங்கள் விவசா யம் செய்யும் நிலத்திற்கு பட்டா வழங்காமல் காலதா மதம் செய்து வரும் நிலை யில், தற்போது எங்களது தோட்டத்தை அழித்து, எங்களை அங்கிருந்து வெளியேற்றிட திட்டமிட் டுள்ளனர்.

    எனவே, மாமரங்களை வெட்டி அழித்த மர்ம நபர்கள் 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலந்த தண்ணீர் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • கால்நடைகள், பொது மக்களுக்கும் நோய் பரவும் அபாயம்

    தென்பெண்ணை ஆற்றில், கர்நாடகா பகுதி பெங்களூர் பெரும்நகர் பகுதிகளில் உள்ள தொழிற் சாலையில் இருந்து வெளி வரும் ரசாயன கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றத்துடன் கருமைநிறத்தில் நீர் வெளியேறி வருகிறது.

    ஒசூர் அருகே கெலவரப் பள்ளி அணையின் மதகு கள் சீரமைப்பு காரணமாக நீர் சேமிக்கப்படாமல் வரத்தாக உள்ளநீர் அப்ப டியே தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படு கிறது. சூளகிரி தாலுகாவில், பாத்தக்கோட்டா, ஆழியா ளம், கனுஞ்சூர் பகுதிகளில் தென்பண்ணை ஆற்று கரை யோம் தென் பண்ணை ஆற்றை நம்பி பல ஏக்கர் நிலப்பரப்பில் நெல், வாழை, புதினா ஆகிய வற்றை விவசாயிகள் சாகு படி செய்து வருகின்றனர்.

    சமீப நாட்களாக அதிகப் படியான கழிவுநீர் கலப்பால் தென்பெண்ணை ஆற்றுநீர் கருமை நிறத்தில் சகதி போல் வந்தாலும் விவசா யிகள் வேறு வழியின்றி அதனையே தங்களது விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சி வருவதால் நிலம் கருப்பாக காட்சியளிப்ப துடன் விளைச்சல் பெரும ளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆற்றங்கரை யோர கிராம மக்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். விளைநி லங்கள் பாதிக்கப்படுவது டன், கால்நடைகள், பொது மக்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

    • கிருஷ்ணகிரி அருகே தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதில் 140 பேர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள் இருக்கின் றன. இந்த ஊராட்சிகளில் பணி யாற்றும் தூய்மை பணியா ளர்கள் மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி டேங்க் ஆப்ரேட்டர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு கடந்த 3 மாதம் சம்பளம் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மேல்நிலை நீர்தேக்க தொட்டி டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு 3 மாத சம்பளம் வழங்கா ததை கண்டித்து ஒட்ஷா கூட்டமைப்பு சங்கம் மாநில தலைவர் லட்சுமனன் தலைமையில் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் சுமார் 140 பேர் கலந்து கொண்டனர்.

    இதனால அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,

    • தேன்கனிக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது கார் மோதி பெண் உயிரிழந்தார். கர்நாடகாவில் இருந்து ஒகேனேக்கல் வந்தபோது விபத்து
    • கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் ஒகேனேக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் ஒகே னேக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அம்போது தேன்கனி கோட்டை மர கட்டா கிரா மத்தின் அருகே ஒர் வளைவில் திரும்பும்போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது நிலை தடுமாறிய கார் மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் ஒரு பெண் சம்ப இடத்திலே யே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தேன்கனிக் கோட்டை போலிசார் விரைந்து வந்து பெண் உடலை கைபற்றி தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவம னையில் சிகிச்சை அளித்து மேற்கி ச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை யில் இறந்தவர் வைசாலி (54) காயம் அடைந்தவர்கள் இஷான் (32) தினேஷ் (27) பவினா (27) ஹேமந் குமார்( 67) ஆகிய 4 பேர் என தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தேன்கனிக்கோட்டை அருகே சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்.
    • வனப்பணியாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம். தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட, இஸ்லாம்பூர் கிராமம் அருகில், சனத்குமார் ஓடைப் பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி அப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை சிறுத்தை ஒன்று தாக்கி, ஒரு ஆட்டினை இழுத்து சென்றதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

    இந்த தகவலின் பேரில், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், தலைமையிலான வனப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர், மேற்படி இடத்தை தணிக்கை செய்து, சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டது.

    சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, தானியங்கி கேமராக்கள் பொருத்தப் பட்டு, வனச்சரக அலுவலர் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் வன கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பிரகாஷ், ஆகியோர் இரவு பகலாக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    சிறுத்தை நடமாட்டம் உள்ள தேன்கனிக்கோட்டை காப்புக்காட்டிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றி சாமிபுரம், அடவிசாமிபுரம், அடைகலபுரம், தண்டரை, இஸ்லாம்பூர், பன்டேஸ்வரம், பேலூர், எண்ணேஸ்வரம். பெண்ணங்கூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிரா மங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பா கவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படி வனப்பணி யாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கடந்த 4-ந் ேததி சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட மேற்படி பகுதியில் ஓசூர் வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் தணிக்கை மேற்கொண்டு, டிரோன், தொலைநோக்கி கள் மற்றும் கேமராக்கள் கொண்டு மேற்படி பகுதியை ஆய்வு செய்து, வன கால்நடை உதவி மருத்துவர் ஆலோ சனைப்படி கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளது.

    • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
    • ஏராளமான பெண் கள் பூசணி மற்றும் தேங்கா யில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமி யையொட்டி சிறப்பு வழிபா டுகள் நடந்தன.

    காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்ட திக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹா லட்சுமி ஹோமம், காலபை ரவ மஹா ஹோமம், பூர்ணா ஹூதி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரா தனை, தீர்த்தப்பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன.

    தங்கக் கவச அலங்கா ரத்தில் காலபைரவர் அருள் பாலித் தார். பகல் 12 மணிக்கு கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.இதில், ஏராளமான பெண் கள் பூசணி மற்றும் தேங்கா யில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ் ணகிரி மாவட்டத்தின் பல் வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதா னம் வழங்கப்பட்டன.

    இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கால பைரவர் கோவில் மற்றும் சூரன் குட்டை தஷ்ண கால பைரவர் கோவிலில், தேய்பி றை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் கள் பங்கேற்றனர்.

    • கோவையில் வருகிற 17ந் தேதி நடைபெறவுள்ள ஜவுளி தொழில் முனை வோர்கள் கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டும்.
    • ஜவுளி தொழில் முனை வோர்கள் கலந்து கொள்ளலாம்,

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    இந்தியாவில் துணிநூல் மற்றும் ஆயத்த ஆடைகள் சந்தையில் தொழில்நுட்ப ஜவுளிகள் 13 சதவீதம் பங்க ளிப்பு வழங்குகின்றன. தொழில்நுட்ப ஜவுளித்துறை ஆண்டிற்கு 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடை யும் என்றும், 2030ஆம் ஆண்டிற்குள் சந்தை மதிப் பில் 45 பில்லியன் அமெ ரிக்க டாலர் அளவிற்கு உயரும் என எதிர் பார்க்கப்ப டுகிறது.

    நமது நாட்டில் தொழில் நுட்ப ஜவுளித்துறை நேரடி யாக 12 லட்சம் நபர்களுக்கு, மறைமுகமாக 50 லட்சம் நபர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.

    இந்திய தொழில் கூட்ட மைப்பு மூலமாக வருகிற 17ம் தேதியன்று, கோவையில் உள்ள ஹோட்டல் லீமெரிடி யனில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து தொழில் நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடத்த உள்ளது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுனர்கள் தொழில் நுட்ப ஜவுளித் துறையில் உள்ள வாய்ப்புகள், வளர்ச்சி, புதிய முதலீடுகள், பன்னாட்டு சந்தை மற்றும் அதனுடைய போக்குகள் குறித்து கலந்து ரையாடல்கள் நடக்க உள்ளது.

    இதில் கலந்து கொள்வதற்கு முன்ப திவு செய்வதற்கான இணை யதள இணைப்பு (https://bit.ly/CIITechnicalTextiles) மேற்படி கருத்தரங்கில் ஜவுளி தொழில் முனை வோர்கள் கலந்து கொள்ள லாம். மேலும் விவரங்களுக்கு, மண்டல துணை இயக்குனர், அம்சவேணி, மண்டல துணை இயக்குனர் அலுவல கம், துணிநூல் துறை, சங்ககிரி மெயின்ரோடு குகை, சேலம் 636006, 0427 2913006 என்ற விலாசத்தில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக் குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். 

    • மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேர பயிற்சி பெற விண்ணப்பிக்க லாம்.
    • அலுவலக வேலை நாட்களில் விலையின்றி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட் டுள்ள அறிக்கையில்:-

    மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பி னர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி யில் சேரலாம்.

    இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர் விண் ணப்பம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையத ளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை, துணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட உதவி இயக்குனர் அலுவலகங்க ளில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, உதவி இயக்குனர் அலுவலகம், கிருஷ்ணகிரி மீன்பண்ணை எதிரில், கே.ஆர்.பி., அணை அஞ்சல், கிருஷ்ணகிரி 635101 என்ற முகவரிக்கு வரும் 18ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்க ளுக்கு 04343 235745 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்க பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரி அருகே இளம் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே கே.திப்பனபள்ளியில் உள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் திலகவதி (வயது24).

    சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விரக்தி அடைந்த திலகவதி கடந்த மாதம் 21-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனை கண்ட அவரது உறவினர்கள் திலகவதியை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து குருபரப் பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
    • ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் கடந்த மாதம் 7 ந்தேதி பட்டாசு விற்பனை கடை மற்றும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர், இதன் காரணமாக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் இந்த வருடம் பட்டாசு விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

    மேலும் கர்நாடகா மாநிலத்தில் பட்டாசு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக அருகேயுள்ள தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் விடுமுறை தினமான நேற்று மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து தேவையான பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.

    இந்தாண்டு தமிழக அரசு 2 மணி நேரம் மட்டுமே தங்கள் வீடுகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளதால், தமிழக மக்கள் தற்போது பட்டாசுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.

    குறிப்பாக கர்நாடகவில் விலை கூடுதலாக உள்ளதால் தொடர்ந்து தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். தவிர, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடைகளில் மட்டுமில்லாமல் சாலைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகளும் அதிகளவில் வந்துள்ளதால் அதனை சிறுவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர், பட்டாசுகளை பொறுத்த வரை இந்த வருடம் விலை ஏற்றம் என்பது சற்று குறைவாகவே காணப்படுகின்றது என பட்டாசு வாங்க வந்தவர்கள் தெரிவித்தனர்.

    குறிப்பிட்ட கடைகளில் மட்டும் வாங்க வருவதால் அவர்கள் அதிகளவில் தள்ளுபடி கொடுக்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பெரும்பாலானோர் பட்டாசுகளை வாங்குவதற்கு கார்களில் வந்தனர். இதனால், கார்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையோரமும் சர்வீஸ் சாலையிலும் கார்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் அதே போல் கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ×