search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிப்பர் லாரி மீது கார் மோதி பெண் சாவு; 4 பேர் படுகாயம்
    X

    டிப்பர் லாரி மீது கார் மோதி பெண் சாவு; 4 பேர் படுகாயம்

    • தேன்கனிக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது கார் மோதி பெண் உயிரிழந்தார். கர்நாடகாவில் இருந்து ஒகேனேக்கல் வந்தபோது விபத்து
    • கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் ஒகேனேக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் ஒகே னேக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அம்போது தேன்கனி கோட்டை மர கட்டா கிரா மத்தின் அருகே ஒர் வளைவில் திரும்பும்போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது நிலை தடுமாறிய கார் மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் ஒரு பெண் சம்ப இடத்திலே யே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தேன்கனிக் கோட்டை போலிசார் விரைந்து வந்து பெண் உடலை கைபற்றி தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவம னையில் சிகிச்சை அளித்து மேற்கி ச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை யில் இறந்தவர் வைசாலி (54) காயம் அடைந்தவர்கள் இஷான் (32) தினேஷ் (27) பவினா (27) ஹேமந் குமார்( 67) ஆகிய 4 பேர் என தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×