search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    கால பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
    • ஏராளமான பெண் கள் பூசணி மற்றும் தேங்கா யில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமி யையொட்டி சிறப்பு வழிபா டுகள் நடந்தன.

    காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்ட திக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹா லட்சுமி ஹோமம், காலபை ரவ மஹா ஹோமம், பூர்ணா ஹூதி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரா தனை, தீர்த்தப்பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன.

    தங்கக் கவச அலங்கா ரத்தில் காலபைரவர் அருள் பாலித் தார். பகல் 12 மணிக்கு கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.இதில், ஏராளமான பெண் கள் பூசணி மற்றும் தேங்கா யில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ் ணகிரி மாவட்டத்தின் பல் வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதா னம் வழங்கப்பட்டன.

    இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கால பைரவர் கோவில் மற்றும் சூரன் குட்டை தஷ்ண கால பைரவர் கோவிலில், தேய்பி றை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×