என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் ஹோஸ்டியா சங்கம் சார்பில் 3 எம்.எல்.ஏ.க்களிடம் மனு
    X

    ஓசூர் ஹோஸ்டியா சங்கம் சார்பில் 3 எம்.எல்.ஏ.க்களிடம் மனு

    • மின் கட்டண உயர்வை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தின.
    • சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனு கொடுக்கும் போராட்டம் மேற்கொள்ளப் பட்டது.

    ஓசூர் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கத்தின் (ஹோஸ்டியா) தலைவர் மூர்த்தி, நேற்று நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓசூர் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கமும், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்ட மைப்பும் இணைந்து, கடந்த ஆண்டு தமிழக அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தின.

    அதன் தொடர்ச்சியாக, இன்று 7-வது கட்ட போராட்டமாக, சட்டமன்ற த்தை கூட்டி மின் கட்டண உயர்வுக்கு எதிராக நமது சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மனு கொடுக்கும் போராட்டம் இன்று மேற்கொள்ளப் பட்டது. அதன் அடிப்படை யில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மற்றும் வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.

    கே.பி. முனுசாமி ஆகியோ ரிடம் ஹோஸ்டியா சார்பில், நேரில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மின்சார உயர்வு கட்டணத்தை அடுத்து 2 வருடங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும், நிலை கட்டணம் 150- லிருந்து பழைய கட்டணமான ரூபாய் 35-க்கு மாற்ற வேண்டும். பீக் அவர் கட்டணம் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கள் வலியுறுத்த ப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    அப்போது, சங்க செயலாளர். ஸ்ரீதரன், பொருளாளர் வடிவேல் மற்றும் துணைத் தலை வர்கள், இணை செயலா ளர்கள், செயற்குழு உறுப்பி னர்கள். மற்றும் உறுப்பி னர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×