என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிருஷ்ணகிரியில் பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்ப்படுகிறது.
    • 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம் ஆண்டிற்கான 23-வது அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப் பங்கள் இணையதள மூலம் மட்டுமே வரவேற்கப் படுகிறது. இதுகுறித்து மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தாவது:-

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் பர்கூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24-ம் ஆண்டு 23-வது அஞ்சல்வழி மற்றும்பகுதிநேர(மாறுதலுக்குட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி (புதிய பாடத்திட்டத்தின்படி) விரைவில் துவங்கப்ப டவுள்ளது.

    இதற்கான விண்ணப்–பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.100-ஐ இணையவழியில் செலுத்தி 10.11.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.

    10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக் கலாம். மற்ற விவரங்கள் அனைத்தும் மேற்படி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு பர்கூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம்( 04343-265652) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டு றவு ஒன்றியம் ஆகியவற்றில் தொடர்ந்து கொள்ளலாம்.

    • கிருஷ்ணகிரி மக்கள் மாசற்ற தீபாவளியை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
    • காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே அனுமதி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாசற்ற தீபாவளியை கொண்டாடு மாறு கலெக்டர் சரயு வேண்டு கோள் விடுத்துள் ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி திருநாளில் சிறுவர்கள் முதல் பெரி யவர்கள் வரை பட்டாசு களை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்ப டுத்துவார்கள். அதே வேளையில் பட்டாசு களை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெரு மளவில் மாசுப டுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.

    பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொட ரப்பட்ட பொது நல வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், சுற்றுச்சூ ழலுக்கு உகந்த மூலப்பொ ருட்களை பயன்படுத்தி, பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். வருங்கா லங்களில் பசுமைப் பட்டாசு களை உற்பத்தி செய்து, விற்பனை செய் வேண்டும் என நிபந்தனைகள் விதித் தது.

    அத்துடன் பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து, அனுமதி வழங்கியது. அதனை பின் பற்றி பட்டாசுகளை வெ டிக்க வேண்டும். மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்பு கள் கறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங் கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித் துறை, உயர் கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனை வோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மா£ட்ட கலெக்டர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள், உயர் அதிகா ரிகள் ஒத்துழைப்போடு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டது.

    சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது நம் ஒவ்வொவரின் கடமை யும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள், குறைந்த ஒலியுடனும், குறைந்த அள வில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டு மே வெடிக்க வேண்டும். மாவடட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொது மக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டமாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழி பாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    எனவே, பொதுமக்கள் சுற்றுச் சூழல் அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டமாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரியில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • செயலியை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து தங்களின் பிரச்சினைகளை பதிவு செயயலாம்.

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டு தலின் படி தேசிய சட்ட தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்கு ழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எம்.சுமதிசாய் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட நீதிபதி பேசியதாவது:-

    சட்ட சேவையின் ஒரு அங்கமாக பொதுமக்கள் இலவச சட்ட உதவிகளை போன் மூலம் பெறலாம். தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் செயலி மூலம் இலவச சட்ட உதவிகள் தேவைப்படுபவர்கள் தங்களின் போனில் மேற்கண்ட செயலியை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து தங்களின் பிரச்சினைகளை பதிவு செயயலாம்.

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பட்டியல் வழக்கறிஞர் தங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தீர்வுகளை வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் நீதிமன்ற ஊழி யர்களால் வரையப்பட்டிருந்த தேசிய சட்ட விழிப்புணர்வு கோலத்தை பலரும் பார்வையிட்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சட்டம் சம்பந்தமான விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிபதி எஸ். நாகராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி வி.தாமோதரன், சிறப்பு மாவட்ட நீதிபதி எம்.அமுதா, மாவட்ட அமர்வு நீதிபதி வி.சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.பிரியா, சிறப்பு சார்பு நீதிபதி எம்.எம்.அஷ்வஹ் அகமது, முதன்மை சார்பு நீதிபதி என்.மோகன்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பி.டி.ஜெனிபர், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் ஜி.யுவராஜ், ஏ.இருதயமேரி, மாஜிஸ்திரேட்டுகள் கே.கார்த்திக் ஆசாத், ஏ.ஸ்ரீவர்ஸ்தவா, வக்கீல் சங்க துணை தலைவர் சுரேகா, செயலாளர் சத்திய நாராயணன் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 4,480 கனஅடி நீரும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
    • 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஓசூர்:

    கர்நாடகா மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை மற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக நாள் தோறும் மழை பெய்து வருகின்றது.

    கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 4,513 கன அடி நீர் வந்தது.

    இன்று வினாடிக்கு 4,480 கன அடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 4,480 கன அடி நீரும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், சுற்றியுள்ள முத்தாலி, சித்தனபள்ளி, பெத்த குள்ளு, தட்டகானபள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனிடையே, பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் அணை நீரில் கலந்து நுரை பொங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    • காலை 6 மணிக்கு துவங்கிய வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையால் களை கட்டியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள குந்தாரப்பள்ளி புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெற்று வருகிறது.

    தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர்.

    செம்மறியாடு, வெள்ளாடு, மறிக்கை ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு துவங்கிய வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.

    ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் பெண் ஆடுகள் அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஆடுகள் வாங்கிச்செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலை விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்றும் வழக்கமாக ஒரு கிலோ 750 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் ரூ. 900க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

    சராசரியாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ. 7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையால் அந்த பகுதியே களை கட்டியுள்ளது.

    • கிருஷ்ணகிரி அருகே விபத்துக்குள்ளான காரில் 347 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • தப்பியோடிய டிரைவருக்கு வலைவீச்சு-

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சொகுசு கார் ஒன்று நேற்று முன்தினம் அதிகாலை வந்து கொண்டிருந்தது. அந்த கார் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் பையனப்பள்ளி பக்கமாக வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்து சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.

    இதையடுத்து கார் டிரைவர் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் கார் விபத்துக்குள்ளான தகவல் அறிந்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அங்கு சென்றனர். அந்த நேரம் அவர்கள் காரை சோதனை செய்த போது காருக்குள் 347 கிலோ தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது- அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 700 ஆகும்.

    அதையும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பெங்களூருவில் இருந்து அந்த காரில் குட்கா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அந்த காரை விட்டு சென்ற மர்ம நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தேன்கனிக்கோட்டை அருகே அரசு பஸ்களுக்கு கிராம மக்கள் பூஜை நடத்தினர்.
    • அரசு பஸ்களின் சேவையை பாராட்டி ஆண்டு தோறும் விழா

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாலிவாரம் கிராமத்திற்கு தமிழக அரசு 41 ஆகிய எண் கொண்ட டவுன் பஸ் மற்றும் சாலிவாரம் முதல் பெங்களூர் செல்லும் 2 கர்நாடக அரசு பஸ்கள் இயங்கி வருகிறது. இந்த பஸ்களின் பொதுமக்களின் சேவையை கருதி ஆண்டுதோறும் கிராம மக்கள் சார்பாக 3 பஸ்களுக்கும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நேற்று பூஜை நடத்தினர்.

    முன்னதாக 3 பஸ்களையும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து, வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள் கட்டி மலர்களால் சிறப்பாக அலங்கரிப்பட்டது. சோமேஷ்வரர் கோயில் முன்பாக பஸ்களை நிறுத்தி மேளதாளங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஒலிக்க சிறப்பு பூஜைகள் செய்யபட்டது.

    இதில் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்;-தங்கள் கிராமத்திற்கு வரும் 3 அரசு பஸ்களின் சேவையை பாராட்டி ஆண்டு தோறும் கிராம மக்கள் சார்பாக ஆயுதபூஜை விழா நடந்தி வருகின்றோம் என தெரித்தனர். இவ்விழாவில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • ஒசூரில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் வாரச்சந்தையை மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • பாரம்பரிய சந்தை அழிந்து விடும் எனவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நகரின் மையப்பகுதியில், ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில், பல ஆண்டுகளாக வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தையில், காய்கறிகள், தின்பண்டங்கள், மசாலா பொருட்கள், விவசாய கருவிகள், இரும்பு பொருட்கள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சந்தையின் மூலம் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

    ஒவ்வொரு புதன் கிழமையும் ஏராள மானோர் இந்த சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை மலிவு விலையில் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில், ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எம்ஜிஆர் மார்க்கெட்டில் உள்ள பழமையான கடைகள் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக கடைகள் கட்டப்பட்டு வருகிறது. இதனால், புதன்கிழமை தோறும் நடக்கும் சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வேறு இடத்தையும் மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு புதன்கிழமை சந்தை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க இந்த சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற கூடாது. அதே இடத்தில் சந்தையை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும் என சந்தை வியாபாரிகள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இல்லை யென்றால் பாரம்பரிய சந்தை அழிந்து விடும் எனவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    இதே போல் ஓசூர் அருகே பாகலூர், கெலமங்கலம், சூளகிரி, மற்றும் குந்தாரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாரத்தில் வெவ்வேறு நாட்களில், இது போன்ற பாரம்பரியமான வார சந்தைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தைக்கு நேற்று இரவு உடல் நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கும்மாளத்தை அடுத்த முத்துநாயக்கன்போடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ்குமார்.

    இவரது மனைவி மல்லிகா (வயது25). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மல்லிகா மீண்டும் கர்ப்பமானார். இவர் கடந்த சில நாட்களுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

    அந்த குழந்தைக்கு நேற்று இரவு உடல் நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது. உடனே குழந்தையை ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையை பெற்றோர்கள் அடக்கம் செய்து விட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நன்றாக பிறந்த குழந்தை திடீரென்று இறந்ததால், குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சப்பாடி கிராமத்தில் இதேபோன்று ஒரு குழந்தை மர்மமான முறையில் இறந்ததாக கூறி உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் முத்துநாயக்கன்போடூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக நாள்தோறும் மழை பெய்து வருகின்றது.

    கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு, வினாடிக்கு 2,270 கனஅடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2,240 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று நீர்வரத்து கிடுகிடு என அதிகரித்து வினாடிக்கு 4,513 கன அடி நீர் வந்தது. வினாடிக்கு 4,480 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.

    இதனிடையே, அணை நீரில் ரசாயன கழிவுகள் கலந்து நுரை பொங்கி துர்நாற்றத்துடன் குவியல் குவியலாக தென்பெண்ணை ஆற்றில் செல்வது தொடர்ந்தவாறு உள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர்.

    • கிருஷ்ணகிரி அருகே தனியார் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
    • பிரவீனை சந்தித்து கொடுத்த கடனை திருப்பி கேட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பையனபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது24). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.6 ஆயிரம் கடனாக பெற்றார். ஆனால், இதுவரை பிரவீன் கடனை திருப்பிதராமல் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அரவிந்தும், அவரது நண்பர் தருண் ஆகிய 2 பேரும் சேர்ந்து சம்பவத்தன்று பிரவீனை சந்தித்து கொடுத்த கடனை திருப்பி கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில், பிரவீனை, அரவிந்தும், அருணும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பிரவீன் காயமடைந்தார். இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்த், அருண் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • ஓசூர் அருகே அரசு டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • பஸ் நிற்காமல் சென்றதால் சம்பவம் -

    ஓசூர் அருகே பாத்தா கோட்டாவிலிருந்து ஓசூர் நோக்கி, நேற்று மாலை டவுன் பஸ் ஒன்று வந்தது. இதனை, கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த டிரைவர் தங்கராஜ் (59) ஓட்டிச்சென்றார். கண்டக்டராக ஆசைத்தம்பி என்பவர் பணியில் இருந்தார். பஸ் செல்லும் வழியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே நின்ற அந்த பஸ், ஒரு பயணியை இறக்கிவிட்டு மீண்டும் புறப்பட தயாரானது.

    அப்போது ஒரு வாலிபர் ஓடி வந்து பஸ்சில் ஏற முயன்றதாகவும், ஆனால் பஸ் நிற்காமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், கையில் இருந்த இளநீரை எடுத்து பஸ் மீது வீசினாராம். இதில் பஸ்சின் பக்கவாட்டில் லேசாக சேதம் அடைந்தது. மேலும் இளநீர் கடையில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து டிரைவர் தலைமீது வீசினார். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார், அங்கு சென்று டிரைவரை தாக்கிய வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் ஆர்.கே. ஹட்கோ பகுதியை சேர்ந்த ஆசம் (28) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

    ×