என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
- கிருஷ்ணகிரி அருகே தனியார் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
- பிரவீனை சந்தித்து கொடுத்த கடனை திருப்பி கேட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பையனபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது24). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.6 ஆயிரம் கடனாக பெற்றார். ஆனால், இதுவரை பிரவீன் கடனை திருப்பிதராமல் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அரவிந்தும், அவரது நண்பர் தருண் ஆகிய 2 பேரும் சேர்ந்து சம்பவத்தன்று பிரவீனை சந்தித்து கொடுத்த கடனை திருப்பி கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில், பிரவீனை, அரவிந்தும், அருணும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பிரவீன் காயமடைந்தார். இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்த், அருண் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Next Story






