என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மேயர் ஆனந்தய்யா நலத்திட்ட உதவி களை வழங்கினார்.
    • பிரகாஷ் எம்.எல்.ஏ.வழங்கினார்

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகர மேற்கு பகுதி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவி கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமை தாங்கினார். விழாவில், மேற்குப் பகுதியைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி ஒருங்கி ணைப்பாளர்களுக்கும், பிரகாஷ் எம்.எல்.ஏ மற்றும் துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் நலத்திட்ட உதவி களை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த னர். மேலும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாற்பதும் நமதே என்ற குறிக்கோளுடன் உழைத்து, கட்சிக்கும், கட்சித் தலைவ ரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. 

    இந்த நிகழ்ச்சியில், கட்சி நிர்வா கிகள்,கிளை செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஐ.வி.டி.பி. நிறுவனர் வழங்கினார்
    • பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


    கிருஷ்ணகிரி ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் பல்வேறு சமூக சேவை களையும், கல்வி சேவை களையும் ஆற்றி வருகிறது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட உம்மியம்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் 360 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த மாணவ, மாணவி களின் உடல் நலன் கருதி யும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குடிநீர் பாட்டில்களை தவிர்க்கும் வகையிலும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.43 ஆயிரத்து 200 மதிப்பில் வாட்டர் பாட்டில்கள், மாணவ, மாணவிகள் நகங்களை வெட்டி ஆரோக்கி யமாகவும், சுத்தமாகவும் பராமரிக்கும் வகையில் ரூ.18 ஆயிரம் மதிப்பில் நக வெட்டிகள் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.14 ஆயிரத்து 400 மதிப்பில் கேக்குகள் என மொத்தம் ரூ.75 ஆயிரத்து 600 மதிப்பிலான உதவிகளை ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

    பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி. நிறுவன தலைவர், ஐ.வி.டி.பி. நிறுவனம் வழங்கும் இந்த கல்வி உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து, பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
    • 1750 பேருக்கு பொற்கிழி வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரிக்கு வருகிற 22 மற்றும் 23-ந் தேதி வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

     கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ண–கிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி–னார். அப்போது அவர் பேசியதாவது:-

     கிருஷ்ணகிரியில் கலைஞரின் முழு உருவ சிலை திறப்பு விழா, திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம், டி.மதியழகன் எம்.எல்.ஏ. இல்ல திருமண வரவேற்பு விழா, நகர செயலாளர் நவாப் இல்ல திருமண விழா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் இல்ல திருமண விழாக்களில் பங்கேற்க தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரிக்கு வருகிற 22-ந் தேதி வருகிறார்.

    22 மற்றும் 23-ந் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருந்து ஓசூர் விமான நிலையம் வந்து கிருஷ்ணகிரிக்கு வருகிறார். அவரை வரவேற்கவும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

     கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை 2-ம் கட்டமாக தந்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் தமிழக முதல்-அமைச்சருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்து தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1750 பேருக்கு பொற்கிழி வழங்கி, பல்வேறு கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தி.மு.க. இளைஞர் அணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பெருந்திரளாக கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் வெற்றிச்செல்வன், சுகவனம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், நகர தி.மு.க. செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், பேரூராட்சி தலைவர்கள் ஊத்தங்கரை அமானுல்லா, பர்கூர் சந்தோஷ், காவேரிப் பட்டணம் அம்சவேணி செந்தில்குமார் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பேரூராட்சி, ஒன்றிய குழு தலைவர்கள், தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முருகருக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    ஓசூர் பிருந்தாவன் நகரில் உள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் கோவிலில் 11-ஆம் ஆண்டு கந்த சஷ்டி மற்றும் லட்சார்ச்சனை விழா நேற்று தொடங்கியது. .

    முதல் நாளான நேற்று, வாஸ்து பூஜை, கணபதி ஹோமம்,காப்பு கட்டுதல்,சுப்ரமணிய ஹோமம், முருகருக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, தேவார திருமுறை மற்றும் திருப்புகழ் பாடல்கள் சுதாகர் ஓதுவார் மூலமாக பிரசங்கம் நடைபெற்றது. விழாவில், பிருந்தாவன் நகர், லட்சுமிநாராயண நகர், என்.ஜி.ஜி.ஓ.எஸ். காலனி, கிருஷ்ணா நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 13 ஆடுகளின் கழுத்தை அறுத்துவிட்டு 7 ஆடுகளை எடுத்து சென்றுள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஆலப்பட்டி கிராமத்தில் சின்னக்கண்ணு. இவருக்கு சொந்தமான 13 ஆடுகள் உள்ளது. இவர் நேற்று மாலை தனது விவசாய நிலத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 13 ஆடுகளின் கழுத்தை அறுத்துவிட்டு 7 ஆடுகளை எடுத்து சென்றுள்ளனர். மேலும் 2 இருசக்கர வாகனங்கள் அங்கே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து சின்னக்கண்ணு கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்ததில், மர்மநபர்கள் வந்த 2 இருசக்கர வாகனங்களும் திருட்டு வண்டி என்றும், வந்தவர்கள் குற்றவாளிகள் என்றும், மேலும் அவர்கள் இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு ஆடுகளுடன் காரில் தப்பி ஓடியது தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சசிகுமார் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
    • வடமாநில தொழிலாளர்கள் போனஸ் தருவது தொடர்பாக தாக்கி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஓசூர்:

    பீகார் மாநிலம் பட்னா மாவட்டம் முஷ்காபூர் பகுதியைச் சேர்ந்த ராம் தீப் மகன் சசிகுமார் (வயது23). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மத்திகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் தங்க வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் தீபாவளி போனஸ் தருவது தொடர்பாக அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அணில்லிங்கா (44), மார்க்அராத் கேசரிமாணிக் (36), அக்ஷய்குமார் தாஸ் (34) ஆகிய 3பேரும் சேர்ந்து சசிகுமாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது அவரை 3 பேரும் சேர்ந்து கட்டையாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சசிகுமார் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சசிகுமாரை தாக்கிய அணில்லிங்கா உள்பட 3 பேரை கைது செய்தனர். இதேபோன்று சந்தீப்மாணிக் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பீகாரைச் சேர்ந்த அசோக்குமார்(21), சசிகுமார், உத்தரபிர தேசத்தை சேர்ந்த அபிஷேக்ராய் (31) தீராஜ்ராய் (38) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    வடமாநில தொழிலாளர்கள் போனஸ் தருவது தொடர்பாக தாக்கி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் யானை ஒன்று சுட்டு கொல்லப்பட்டு கிடந்தது. இந்த சமபவம் தொடர்பாக சென்னமாளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்து மல்லேஷ் என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • தேன்கனிக்கோட்டை அருகே யானையை சுட்டுக்கொன்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ஜவளகிரி வனச்சரகத்துக்கு சென்னமாலம் கிராமம் அடுத்துள்ள கக்க மல்லேஸ்வரசுவாமி கோயில் அருகே கடந்த அக் 29-ந் தேதி ஒரு ஆண் காட்டு யானை உயிரிழந்து கிடந்தது. அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் வன அதனை பார்த்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் வனக்கோட்ட வன உயிரினகாப்பாளர் கார்த்தி கேயனி, உதவி வன பாதுகாவலர் ராஜ மாரியப்பன் மற்றும் ஜவள கிரி வனச்சரகர் உள்ளிட்ட வனத்துறையினர் காட்டு யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த யானை சுமார் 15 வயது மதிக்கத்தக்கது எனவும், காட்டு யானையின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இருந்ததும் 2 தந்தங்கள் உடலில் அப்படியே இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வேட்டைக்காக காட்டு யானை சுட்டு கொல்லப்படவில்லை என வனத்துறையினர் அறிந்தனர்.

    இதனையடுத்து வனத்துறையினர் வனத்துறை கால்நடைருத்துவர் குழுவினரை கொண்டு அதே இடத்தில் காட்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். இதனிடையே 15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானையை சுட்டு கொன்றது யார்? என்பது குறித்து வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த னர்.விசாரணையில் ஜவளகிரி வனப்பகுதிக்கு அருகே உள்ள சென்ன மாளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்து மல்லேஷ் (வயது 43) என்பவர் காட்டு யானையை நாட்டுதுப் பாக்கியால் சுட்டு கொன்றது தெரியவந்தது. இதனை யடுத்து அவரை வனத்துறை யினர் கைது செய்தனர்.

    அவரிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தனது ராகி பயிர்களை யானை நாசம் செய்ததால் துப்பாக்கால் சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரை தேன் கனிக்கோட்டை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர். இதனிடையே வனசரகர் விஜயன், (பொ) மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்ட தில் யானையை சுட்டு கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் இருப்பது தெரிய வந்தது கார்நாடக மாநிலம் கனகபுரம் தாலுக்க காடு சிவனப் பள்ளி கிராமத்தை சேர்ந்த சினிவாசமூர்த்தி (34) என்பவரை கைது செய்து வழக்கு பதிந்து தேன்கனிக் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பகுதி நேர வேலையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று குறும் செய்தி வந்தது.
    • அதை நம்பி வங்கி கணக்கில் ரூ.59,11,250 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார்.

     கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள அலசநத்தம் ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் தியாகராஜன் இவர் வரி ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 25 ந்தேதி இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் பேரில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளது. அதற்கு விண்ணப்பித்து முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து அந்த குறுஞ்செய்தியில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தியாகராஜன் பேசியுள்ளார். அப்போது அவரிடம் பேசிய நபர் ஒரு வங்கி கணக்கு எண்ணை கொடுத்து அதில் பணம் செலுத்த சொல்லி உள்ளார். அதன்படி ரூ.59,11,250 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார். இதனையடுத்து சில நாட்கள் கழித்து அந்த நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்த போது முடிய வில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தியாகராஜன் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     அதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தகிரி அருகேயுள்ள பொதிகை நகர் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி இவரது மகன் பரந்தாமன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது வாட்ஸ்ஆப்பில் வந்த குறுஞ்செய்தியில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாகவும் அதில் விண்ணப்பித்து முதலீடு செய்தால் லட்ச கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து பரந்தாமன் அதில் இருந்த செல்போன் எண்ணில் பேசி விவரம் கேட்டுள்ளார்.

    அப்போது போனில் பேசிய மர்ம நபர் சொன்ன வங்கி கணக்கில் ரூ.8,88,000 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேச முயன்ற போது முடிய வில்லை. இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    இந்த 2 மோசடி வழக்குகள் குறித்தும் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். படித்த பட்டதாரி வாலிபர்களிடம் ஆன்லைன் மூலமாக ரூ.68 லட்சம் மோசடி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. நேற்று முன் தினம் பெண் உள்ளிட்ட 3 பேரிடம் இதே பாணியில் ரூ.57.87 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கிருஷ்ணகிரியில் பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்ப்படுகிறது.
    • 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம் ஆண்டிற்கான 23-வது அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப் பங்கள் இணையதள மூலம் மட்டுமே வரவேற்கப் படுகிறது. இதுகுறித்து மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தாவது:-

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் பர்கூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24-ம் ஆண்டு 23-வது அஞ்சல்வழி மற்றும்பகுதிநேர(மாறுதலுக்குட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி (புதிய பாடத்திட்டத்தின்படி) விரைவில் துவங்கப்ப டவுள்ளது.

    இதற்கான விண்ணப்–பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.100-ஐ இணையவழியில் செலுத்தி 10.11.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.

    10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக் கலாம். மற்ற விவரங்கள் அனைத்தும் மேற்படி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு பர்கூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம்( 04343-265652) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டு றவு ஒன்றியம் ஆகியவற்றில் தொடர்ந்து கொள்ளலாம்.

    • கிருஷ்ணகிரி மக்கள் மாசற்ற தீபாவளியை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
    • காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே அனுமதி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாசற்ற தீபாவளியை கொண்டாடு மாறு கலெக்டர் சரயு வேண்டு கோள் விடுத்துள் ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி திருநாளில் சிறுவர்கள் முதல் பெரி யவர்கள் வரை பட்டாசு களை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்ப டுத்துவார்கள். அதே வேளையில் பட்டாசு களை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெரு மளவில் மாசுப டுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.

    பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொட ரப்பட்ட பொது நல வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், சுற்றுச்சூ ழலுக்கு உகந்த மூலப்பொ ருட்களை பயன்படுத்தி, பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். வருங்கா லங்களில் பசுமைப் பட்டாசு களை உற்பத்தி செய்து, விற்பனை செய் வேண்டும் என நிபந்தனைகள் விதித் தது.

    அத்துடன் பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து, அனுமதி வழங்கியது. அதனை பின் பற்றி பட்டாசுகளை வெ டிக்க வேண்டும். மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்பு கள் கறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங் கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித் துறை, உயர் கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனை வோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மா£ட்ட கலெக்டர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள், உயர் அதிகா ரிகள் ஒத்துழைப்போடு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டது.

    சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது நம் ஒவ்வொவரின் கடமை யும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள், குறைந்த ஒலியுடனும், குறைந்த அள வில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டு மே வெடிக்க வேண்டும். மாவடட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொது மக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டமாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழி பாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    எனவே, பொதுமக்கள் சுற்றுச் சூழல் அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டமாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரியில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • செயலியை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து தங்களின் பிரச்சினைகளை பதிவு செயயலாம்.

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டு தலின் படி தேசிய சட்ட தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்கு ழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எம்.சுமதிசாய் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட நீதிபதி பேசியதாவது:-

    சட்ட சேவையின் ஒரு அங்கமாக பொதுமக்கள் இலவச சட்ட உதவிகளை போன் மூலம் பெறலாம். தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் செயலி மூலம் இலவச சட்ட உதவிகள் தேவைப்படுபவர்கள் தங்களின் போனில் மேற்கண்ட செயலியை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து தங்களின் பிரச்சினைகளை பதிவு செயயலாம்.

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பட்டியல் வழக்கறிஞர் தங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தீர்வுகளை வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் நீதிமன்ற ஊழி யர்களால் வரையப்பட்டிருந்த தேசிய சட்ட விழிப்புணர்வு கோலத்தை பலரும் பார்வையிட்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சட்டம் சம்பந்தமான விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிபதி எஸ். நாகராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி வி.தாமோதரன், சிறப்பு மாவட்ட நீதிபதி எம்.அமுதா, மாவட்ட அமர்வு நீதிபதி வி.சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.பிரியா, சிறப்பு சார்பு நீதிபதி எம்.எம்.அஷ்வஹ் அகமது, முதன்மை சார்பு நீதிபதி என்.மோகன்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பி.டி.ஜெனிபர், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் ஜி.யுவராஜ், ஏ.இருதயமேரி, மாஜிஸ்திரேட்டுகள் கே.கார்த்திக் ஆசாத், ஏ.ஸ்ரீவர்ஸ்தவா, வக்கீல் சங்க துணை தலைவர் சுரேகா, செயலாளர் சத்திய நாராயணன் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 4,480 கனஅடி நீரும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
    • 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஓசூர்:

    கர்நாடகா மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை மற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக நாள் தோறும் மழை பெய்து வருகின்றது.

    கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 4,513 கன அடி நீர் வந்தது.

    இன்று வினாடிக்கு 4,480 கன அடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 4,480 கன அடி நீரும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், சுற்றியுள்ள முத்தாலி, சித்தனபள்ளி, பெத்த குள்ளு, தட்டகானபள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனிடையே, பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் அணை நீரில் கலந்து நுரை பொங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    ×