search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே டைல்ஸ் கடையில் திருட்டு
    X

    போச்சம்பள்ளி அருகே டைல்ஸ் கடையில் திருட்டு

    • கடையில் மேற்கூரை உடைக்கப் பட்டிருந்தது.
    • மடிக்கணினி, ஒரு செல்போன் ஆகிவை திருட்டு போய் இருந்தது.

    மத்தூர்,

    போச்சம்பள்ளி தாலுகா வடமலம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 47). இவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 10-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். 11-ந் தேதி காலை கடைக்கு சென்று பார்த்த போது அங்கு கடை யில் மேற்கூரை உடைக்கப் பட்டிருந்தது.

    மேலும் கடையில் வைத்தி ருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம், ஒரு மடிக்கணினி, ஒரு செல்போன் ஆகிவை திருட்டு போய் இருந்தது.

    இது குறித்து மாதேஷ் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி னார்கள்.

    அதே போல கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×