என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குச்சாவடி முகவர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    வாக்குச்சாவடி முகவர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

    • மேயர் ஆனந்தய்யா நலத்திட்ட உதவி களை வழங்கினார்.
    • பிரகாஷ் எம்.எல்.ஏ.வழங்கினார்

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகர மேற்கு பகுதி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவி கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமை தாங்கினார். விழாவில், மேற்குப் பகுதியைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி ஒருங்கி ணைப்பாளர்களுக்கும், பிரகாஷ் எம்.எல்.ஏ மற்றும் துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் நலத்திட்ட உதவி களை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த னர். மேலும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாற்பதும் நமதே என்ற குறிக்கோளுடன் உழைத்து, கட்சிக்கும், கட்சித் தலைவ ரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், கட்சி நிர்வா கிகள்,கிளை செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×