என் மலர்
உள்ளூர் செய்திகள்

உம்மியம்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- ஐ.வி.டி.பி. நிறுவனர் வழங்கினார்
- பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் பல்வேறு சமூக சேவை களையும், கல்வி சேவை களையும் ஆற்றி வருகிறது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட உம்மியம்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் 360 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த மாணவ, மாணவி களின் உடல் நலன் கருதி யும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குடிநீர் பாட்டில்களை தவிர்க்கும் வகையிலும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.43 ஆயிரத்து 200 மதிப்பில் வாட்டர் பாட்டில்கள், மாணவ, மாணவிகள் நகங்களை வெட்டி ஆரோக்கி யமாகவும், சுத்தமாகவும் பராமரிக்கும் வகையில் ரூ.18 ஆயிரம் மதிப்பில் நக வெட்டிகள் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.14 ஆயிரத்து 400 மதிப்பில் கேக்குகள் என மொத்தம் ரூ.75 ஆயிரத்து 600 மதிப்பிலான உதவிகளை ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி. நிறுவன தலைவர், ஐ.வி.டி.பி. நிறுவனம் வழங்கும் இந்த கல்வி உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து, பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.






