என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய குடிமைப்பணியில்  பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
    X

    இந்திய குடிமைப்பணியில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

    • மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேர பயிற்சி பெற விண்ணப்பிக்க லாம்.
    • அலுவலக வேலை நாட்களில் விலையின்றி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட் டுள்ள அறிக்கையில்:-

    மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பி னர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி யில் சேரலாம்.

    இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர் விண் ணப்பம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையத ளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை, துணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட உதவி இயக்குனர் அலுவலகங்க ளில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, உதவி இயக்குனர் அலுவலகம், கிருஷ்ணகிரி மீன்பண்ணை எதிரில், கே.ஆர்.பி., அணை அஞ்சல், கிருஷ்ணகிரி 635101 என்ற முகவரிக்கு வரும் 18ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்க ளுக்கு 04343 235745 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்க பட்டுள்ளது.

    Next Story
    ×