என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஓசூர் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலியானார்.
    • லாரியை நிறுத்தி டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது விபத்து.

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கரகூர் அருகே உள்ள சீரியம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

    கடந்த 22-ந் தேதி அவர் தர்காவில் உள்ள இரும்பு குடோன் ஒன்றில் லாரியை நிறுத்தி டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரம் அவர் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகன் இறந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒசூர் அருகே லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சுப்பிரபுரத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 40). இவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    கடந்த 21-ந் தேதி மாலை இவர் பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் சிக்னல் அருகில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, துளசிராமன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    • கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியலின் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடக்கிறது
    • அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் களஆய்வு மேற் கொண்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கே.எம்.சரயு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ள, கடந்த அக்டோபர் 27-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் 9-ந் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது. இந்த சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக கடந்த 4-ந் மற்றும் 5-ந் தேதிகளில் நடந்த சிறப்பு முகாமில் பெறப்பட்ட படிவங்களின் மீது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் களஆய்வு மேற் கொண்டுள்ளனர்.

    மேலும், ஏற்கனவே நடைபெற்ற சிறப்பு முகாமில் விண்ணப்பிக்காத இளம் வாக்காளர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கா தவர்கள், வாக்காளர் பட்டி யலில் தங்களது பெயரை சேர்த்து கொள்ளும் வகையில் நாளை (சனிக்கி ழமை), நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.

    இதில், விண்ணப்பங்கள் பெற்று அன்றே பூர்த்தி செய்து உரிய ஆவணங்க ளுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம். எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்ப டுத்தி வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்த்திடவும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரிபார்த்தி டவும் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மேலும், பொது மக்களுக்கு ஏதேனும் சந்தே கங்கள் இருப்பின் 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவ ரங்கள் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

      தேன்கனிக்கோட்டை, நவ.24-

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுக்கா கெலமங்கலம் நகரில் உள்ள சத்ய சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் சத்ய சாய் பாபாவின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச கல்யாண பெருமா ளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    முன்னதாக பக்தர்கள் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாகசாலை நடைபெற்றது.

    பின்னர் தேவி, பூதேவி சீனிவாச பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவி யங்களால் அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து பட்டு உடுத்தி பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    • ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
    • ரிங் ரோடு நான்கு வழி பாதையாக மாற்றப்பட உள்ளது.

    ஓசூர்,  

    ஓசூர்-தளி சாலையில் டிவிஎஸ் நகர் அருகேயுள்ள ெரயில்வே கேட் வழியாக நாள்தோறும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் இந்த பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே இந்த ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என ஓசூர் பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து ரெயில்வே துறை மற்றும் தமிழக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பெங்களூரில் இருந்து ஓசூர் வரை செல்லும் ரெயில்வே பாதை தற்போது ஒரு வழி பாதையாக உள்ளது. இதனை ரெயில்வே துறை இரு வழிப்பாதையாக மாற்றி வருகிறது.

    இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார், ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆகியோர் மேம்பாலம் கட்டப்படவுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், செல்லகுமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    "பெங்களூர் முதல் ஓசூர் வரை ரெயில்வே நிர்வாகம் இருவழிப்பாதையை அமைத்து வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளுக்குப்பிறகு, இந்த இடத்தில் ஏற்படவுள்ள போக்குவரத்து நெரிசலை கணக்கில் கொண்டு மேம்பாலம் கட்டப்பட வேண்டும், ரெயில்வே நிர்வாகம் கூடிய விரைவில் இருவழிப்பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்றும் நிலையும் உள்ளது.

    அதேநேரத்தில் ரெயில்வே கேட் அருகே செல்லும் ரிங் ரோடு நான்கு வழி பாதையாக மாற்றப்பட உள்ளது. எனவே எதிர் காலத்தில் ரெயில்வே பாதை, ரிங் ரோடு ஆகியவற்றுக்கு இடையூறு ஏற்படாமல் ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இணைந்து, உயர் தொழில் நுட்பங்களை கையாண்டு மேம்பாலத்தை அமைக்க வேண்டும்". இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, ரெயில்வே துறை மற்றும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் சென்னீரப்பா, மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் மகாதேவன், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரிகை போலீசில் திரிஷா புகார் செய்ததாக கூறப்படுகிறது.
    • சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து, திரிஷாவை கடத்திச் சென்ற வேணுகோபால் உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே கொல்லப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா என்பவரது மகள் திரிஷா (19). இவர், ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இதேபோல், பேரிகை அருகே அலசபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (22), இவரும் அதே கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகின்றனர்.

    இவர்கள் இருவரும் பிளஸ்-2 படிக்கும் போதிலிருந்தே ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் திரிஷாவின் வீட்டில், இவர்களது காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதனை தொடர்ந்து, வேணுகோபாலுடனான காதலை தான் முறித்துக் கொண்டதாகவும், அவர் தொடர்ந்து வற்புறுத்துவதால், வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம், பேரிகை போலீசில் திரிஷா புகார் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் திரிஷாவுக்கும், பர்கூர் அருகே எலத்தகிரியை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில், நேற்று தேர்வு எழுதுவதற்காக திரிஷாவை அவரது கணவர் ரமேஷ் எலத்தகிரியிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஓசூர் அழைத்து வந்தார்.

    பின்னர் தேர்வு முடிந்து மீண்டும் மாலையில் மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்கு திரும்பும்போது, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டபள்ளி அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலைய பகுதியில், ரமேஷ் ஓட்டி வந்த வண்டியை ஒரு கார் வழிமறித்தது. அந்த காரில் 3 பேருடன் வந்த திரிஷாவின் முன்னாள் காதலன் வேணுகோபால், திரிஷாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டார்.

    இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ், இது குறித்து ஓசூர் அட்கோ போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து, திரிஷாவை கடத்திச் சென்ற வேணுகோபால் உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மேலும், அவர்களை பிடிக்க அட்கோ போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து, 200-க்கும் மேற்பட்ட யானைகள் உணவு தேடி வருவது வழக்கம்.
    • யானைகளை விரட்ட பட்டாசு வெடித்தும், மேளம் எழுப்பி யானைகளை விரட்ட முயன்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு காவிரி தெற்கு என இரு வன உயிரின சரணாலயங்கள் உள்ளது.

    இந்த வன உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து, 200-க்கும் மேற்பட்ட யானைகள் உணவு தேடி வருவது வழக்கம்.

    இந்த ஆண்டு யானைகள் அதன் வலசை சீசனுக்கு முன்னரே கடந்த மாதம் முதல் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து 50-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை வழி யாக ஓசூர் அடுத்த சான மாவு வனப்பகுதியில் முகாமிட்டன.

    இந்த தகவல் அறிந்த வனத்துறையினர், யானைகளின் நடமாட்டம் குறித்து சானமாவு, சினிகிரிபள்ளி கொம்மேபள்ளி, பீர்ஜேப் பள்ளி, ராமாபுரம், ஆழியாளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் காலை நேரங்களில் கிராம மக்கள் வயல்வெளிகள் மற்றும் மற்ற பணிகளில் ஈடுபட்டிருந்ததால் நேற்று மாலை யானைகளை விரட்ட பட்டாசு வெடித்தும், மேளம் எழுப்பி யானைகளை விரட்ட முயன்றனர்.

    ஆனால், சினிகிரிபள்ளி வரை சென்ற யானைகள் மீண்டும் சானமாவு பகுதிக்கே வந்ததால் வனத் துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே, இன்று மாலை மீண்டும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

    • கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மோதி மேஸ்திரி இறந்தார்.
    • அரசம்பட்டி ரோட்டில் விபத்து

    பாரூர் அருகே உள்ள அரசம்பட்டி பக்கமுள்ள மஞ்சமேட்டை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 66). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 16-ந் தேதி போச்சம்பள்ளி - அரசம்பட்டி சாலையில், அரசம்பட்டி அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபர், வேல்முருகன் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் இறந்தார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பையில் நகை மாயமாகி இருந்தது.
    • திருடர்களை போலீசார் கைது செய்தனர்.

    ஓசூர், 

    ஓசூர் மத்திகிரி டைட்டான் டவுன்சிப்பை சேர்ந்தவர் அஸ்வினி (29). இவர் சென்னையில் இருந்து பஸ்சில் ஓசூருக்கு வந்தார். பஸ் நிலையத்தில் இறங்கிய போது பையை பார்த்தார். அப்போது பையில் நகை மாயமாகி இருந்தது.

    அந்த நேரம் உடன் வந்த பயணிகள் 2 பேர் மீது சந்தேகம் அடைந்த அஸ்வினி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் 6 பவுன் நகை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்க ளிடம் நடத்திய விசார ணையில் அவர்கள் திரு வண்ணாமலை மாவட்டம் மேல்வத னவாடியை சேர்ந்த பீமன் (33), வீரமணி (30) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • ஆவாரம்காட்டூர் பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வருவதற்கான வீட்டு வரி ரசீதும் ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
    • மாரிக்கும் அவரது மனைவிக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டுக்கோணம்பட்டி பகுதியை சார்ந்தவர் மாரி (வயது 67) இவரது மனைவி வெள்ளையம்மாள் (62) இந்த வயதான தம்பதியினர் மலைவாழ் இனத்தை சார்ந்தவர்கள் எழுத படிக்க தெரியாதவர்கள்.

    இந்த தம்பதியினருக்கு அந்த பகுதியில் சொந்தமாக சிறிய அளவில் விவசாய நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வருகின்றனர். இவர்களது மகள் திருமணம் ஆகி சென்று விட்டார்.

    இந்த நிலையில் இந்த தம்பதியினர் கடந்த 40 ஆண்டுகளாக ரேஷன் அட்டை இல்லாததால் அரசு மூலமாக கிடைக்கும் ரேஷன் பொருட்கள், அரசின் நல திட்டங்கள் போன்றவற்றை பெற முடியாமல் அவதியுற்று மன வேதனையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளாக ரேஷன் அட்டை வாங்குவதற்காக தருமபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் போன்ற இடங்களுக்கு பல முறை அலைந்தும் ரேஷன் அட்டை பெற முடியவில்லை. அதிகாரிகள் அலட்சியம் காட்டி அவர்களை அலைகழித்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    இவர்கள் ஆவாரம்காட்டூர் பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வருவதற்கான வீட்டு வரி ரசீதும் ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. அதே போல மாரிக்கும் அவரது மனைவிக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    ஆதார் அட்டை, வீட்டு வரி ரசீது போன்றவை இருந்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த வயதான தம்பதியினருக்கு இன்னமும் ரேஷன் அட்டை கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இந்த நவீன காலத்தில் இது போன்ற புறக்கணிப்புகள் தொடர்வது நல்லதல்ல.

    இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆசிட் ஊற்றி தண்ணீர் தொட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
    • தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்களான சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஓசூர்:

    ஓசூர் அருகேயுள்ள கர்நாடக மாநில எல்லையான ஆனேகள் பகுதியில் உள்ள சிகாரிபாலிய பகுதியில் சீனிவாஸ் என்பவருக்கு சொந்தமான தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் உட்பட பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று அந்த தொழிற்சாலையில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் சந்தன் ரஜ் பன்சிங் (வயது31) மற்றும் பிந்டு ரஜ் பன்சிங் (22) ஆகிய இருவரும் தண்ணீர் தொட்டியில் இறங்கி ஆசிட் ஊற்றி தண்ணீர் தொட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் கூச்சலிட்டனர்.

    அதனை கேட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் மற்றும் தொழிலாளிகள் தண்ணீர் தொட்டிக்கு சென்று பார்த்த போது இவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளனர்.

    அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஹெப்பாகுடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    விரைந்த வந்த போலீசார் 2 உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்களான சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கருணாநிதியுடன் நீண்டகாலம் பயணித்த அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கருணாநிதி சிலையை திறப்பதில் பெருமை கொள்கிறேன்.
    • தலைவர் கலைஞர் தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றியை கண்டவர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நகர தி.மு.க. சார்பில், நகர செயலாளர் நவாப்-நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.

    விழாவிற்கு தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர்.காந்தி, அர.சக்கரபாணி, சிவசங்கர், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளர் நவாப் வரவேற்று பேசினார். விழாவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஈரோட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு, தொடர்ந்து பல இடங்களில் கலைஞர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியில் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவரால் வர முடியவில்லை.

    இருப்பினும் அவர், கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை நினைத்து கொண்டே இருப்பார். கருணாநிதியுடன் நீண்டகாலம் பயணித்த அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கருணாநிதி சிலையை திறப்பதில் பெருமை கொள்கிறேன்.

    இந்த சிலையை என்னை திறந்து வைப்பதற்கு வாய்ப்பு தந்த கழக நிர்வாகிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே கிருஷ்ணகிரி நகருக்கு இளைஞர் அணி கூட்டம், தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்தேன்.

    இன்று மீண்டும் உங்கள் அனைவரையும் கலைஞரின் சிலையை திறந்து வைக்கும் இந்த நிகழ்ச்சியில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தலைவர் கலைஞர் தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றியை கண்டவர். இந்த நன்னாளில் கலைஞரின் புகழை போற்றுவோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். நமது தலைவர் காட்டுபவர் தான் பிரதமர் ஆக உள்ளார். கலைஞரின் புகழ் ஓங்குக. இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    சிங்கமாக வீர நடைபோட்டவர் கருணாநிதி. அவருடன், 83 ஆண்டுகள் பயணித்தவன் நான். கோபாலபுரத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக விசுவாசியாக இருந்த நான் தூக்கி வளர்த்த உதயநிதியின் வளர்ச்சியை, வேகத்தை பாராட்டுகிறேன். அவருடைய பண்பாடு, அடக்கம் வாழ்த்துக்குரியது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×