என் மலர்
உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனம் மோதி மேஸ்திரி சாவு
- கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மோதி மேஸ்திரி இறந்தார்.
- அரசம்பட்டி ரோட்டில் விபத்து
பாரூர் அருகே உள்ள அரசம்பட்டி பக்கமுள்ள மஞ்சமேட்டை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 66). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 16-ந் தேதி போச்சம்பள்ளி - அரசம்பட்டி சாலையில், அரசம்பட்டி அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபர், வேல்முருகன் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் இறந்தார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






