என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலி
- ஓசூர் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலியானார்.
- லாரியை நிறுத்தி டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது விபத்து.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கரகூர் அருகே உள்ள சீரியம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.
கடந்த 22-ந் தேதி அவர் தர்காவில் உள்ள இரும்பு குடோன் ஒன்றில் லாரியை நிறுத்தி டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரம் அவர் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகன் இறந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






