என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • மாநாடு வெற்றி பெற 101 தேங்காய் உடைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    நாகர்கோவில் :

    மதுரையில் நாளை (20-ந்தேதி) அ.தி.மு.க. எழுச்சி மாநாடு நடக்கிறது. இதை யொட்டி எம்.ஜி.ஆரை போற்றும் வித மாக நாகர்கோ வில் கவுன்சிலர் அக்ஷயா கண்ணன் ஏற்பாட்டில் கேக் வெட்டப்பட்டது. இதற்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி 51-வது ஆண்டை கொ ண்டாடும் விதமாக 51 கிலோ கேக் வெட்டி மாநாடு வெற்றி பெற 101 தேங்காய் உடைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்ப ட்டன.

    மாநாட்டிற்கு பொது மக்களை அழைக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், முருகே ஸ்வரன், ஜெவின் விசு, ஆர ல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா, ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், முன்னாள் நகர செயலாளர்கள் சந்துரு, சந்திரன், ஒன்றிய செயலா ளர் மகாராஜா பிள்ளை, வீராசாமி, பொன் சுந்தர்நாத், பொன்சேகர் ராஜ்குமார், ராதாகிருஷ்ணன், அசோக்குமார், தோவாளை வடக்கு ஒன்றிய பிரதிநிதி ஆரல்கிருஷ்ணன், பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை.
    • பெட்ரோல் பங்க் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிஅருகே உள்ள சின்னமுட்டம் துறைமுக வளாகத்தில் பெட்ரோல்பங்கு அமைக்கு ம்பணிதொடங்கியது. இதற்கு சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர்கள் கடந்த 9-ந்தேதி முதல் சின்னமுட்டம் புனிததோமையார் ஆலயம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுஉள்ளனர்.

    போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை. இதைத் தொடர்ந்து இன்று 11- வது நாளாக பெட்ரோல் பங்க் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தெருக்களில் இன்றும் 3-வது நாளாக கருப்புக் கொடி கட்டப்பட்டு உள்ளது.இதனால்அங்கு பெரும்பரபரப்பும் பதட்ட மும்நிலவுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு இன்றும் ஏராள மான போலீசார் குவிக்கப்பட்டுஉள்ளனர்.

    போராட்டத்தில ஈடு பட்டுள்ள மீனவர்க ளுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • கொட்டாரம் ராமர் கோவில் முன்பு அண்ணாமலைக்கு பாரதிய ஜனதாவினர் அகல் விளக்கு ஏற்றி வைத்து பூரணகும்பமரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
    • குமரி மாவட்டத்தில் என் நடை பயணத்தின்போது 25-க்கும் மேற்பட்ட பைபிள், 6-ல் இருந்து 8 குரான் ஆகியவற்றை கொடுத்துள்ளார்கள்.

    கன்னியாகுமரி:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 28-ந்தேதி அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். சட்டமன்ற தொகுதி வாரியாக பாத யாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை குமரி மாவட்டத்தில் கடந்த 15-ந்தேதி விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட களியக்காவிளையில் இருந்து தனது பாத யாத்திரையை தொடங்கினார். 3 நாட்கள் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாத யாத்திரை மேற்கொண்ட அவர், இறுதியாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

    அவருக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை காந்தி மண்டப சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்த லிங்கபுரம், மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு, பெருமாள்புரம் வழியாக இரவு 7.30 மணிக்கு கொட்டாரம் சந்திப்பை வந்தடைந்தது. கொட்டாரம் ராமர் கோவில் முன்பு அண்ணாமலைக்கு பாரதிய ஜனதாவினர் அகல் விளக்கு ஏற்றி வைத்து பூரணகும்பமரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அண்ணாமலை கொட்டாரம் சந்திப்பில் நிறுத்தி வைத்து இருந்த ரதத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் முழு உருவ சிலை முன்பு நின்று வணங்கி தனது பாத யாத்திரையை நிறைவு செய்தார். மொத்தம் 6 கிலோ மீட்டர் தூரம் அவர் தொண்டர்கள் புடை சூழ நடந்தே வந்தார். அண்ணாமலை தனது குமரி மாவட்ட பாதயாத்திரை நிகழ்ச்சியை கொட்டாரம் சந்திப்பில் நிறைவு செய்து வைத்து திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

    குமரி மாவட்டம் பழமையும் பெருமையும் மிக்க மாவட்டமாகும். இந்த மாவட்டம் காமராஜரை எம்.பி.யாக உருவாக்கிய மாவட்டம். சிதம்பரநாதன் நாடார், ஜீவானந்தம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மகாதேவன் பிள்ளை தேரூர் சிவன் பிள்ளை போன்றவர்களை இந்த நாட்டுக்கு அர்ப்பணித்த மாவட்டம். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்கோடியில் அமைந்து உள்ள மருந்து வாழ்மலையில் அய்யா வைகுண்டர், நாராயண குரு போன்ற மகான்கள் தவமிருந்து முக்தி பெற்ற இடமாகும்.

    அதேபோல சுவாமி விவேகானந்தர் இதே கன்னியாகுமரி கடலில் உள்ள பாறையில் தன்னம்பிக்கையுடன் வேண்டி சென்று தவம் இருந்து ஞானம் பெற்றவர். அப்படிப்பட்டவர்களை இந்த தி.மு.க. அரசு பாடப் புத்தகங்களில் இடம் பெற செய்யாமல் மறந்துவிட்டது. மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை அரசியலுக்காக மத ரீதியாகவும் ஜாதி ரீதியாகவும் பிரித்து வைத்து உள்ளனர். நெல்லை எங்களது எல்லை குமரி எங்களுக்கு தொல்லை என்று சொன்ன தி.மு.க.வினருக்கு, குமரி மாவட்டம் வரும் காலங்களில் என்றைக்கும் தி.மு.க.வுக்கு ஒரு தொல்லையாகவே அமையும். பிரதமர் மோடியை திட்டுவதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

    மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கடலில் கால் வைத்தால் இழுக்கு என்று நினைக்கிறார். இதனால் தான் ஆய்வுக்கு சென்ற அவரை மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கி வந்து கரையில் விட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பணக்காரர் மீன்வளத்துறை அமைச்சர் தான். அவரிடம் 4 ஆயிரத்து 999 கோடி ரூபாய் உள்ளது.

    குமரி மாவட்டத்தில் என் நடை பயணத்தின்போது 25-க்கும் மேற்பட்ட பைபிள், 6-ல் இருந்து 8 குரான் ஆகியவற்றை கொடுத்துள்ளார்கள். பத்மநாபபுரம் தொகுதியில் நடைபயணம் சென்றபோது ஆலயத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த கிறிஸ்தவர்கள் வந்து வாழ்த்து தெரிவித்தனர். குமரி சங்கமம் நிகழ்ச்சிக்கு வந்தபோது ஜெபமாலை கொடுத்தார்கள். அதை நான் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வருகிறேன். இது தான் இந்துத்துவா.

    பிரதமர் மோடிக்கு 13 நாடுகள் உச்சபட்ச கவுரமான விருதுகளை கொடுத்துள்ளது. அதில் 7 நாடுகள் இஸ்லாமிய நாடுகள் ஆகும். எனவே என் நடை பயணத்தின் போது ஆலயம் அருகே கொடி கட்டாதீர்கள் என்றும், பேனர் வைக்காதீர்கள் என்றும் பேசாதீர்கள். காற்று அடிக்கும்போது எச்சில் இலை கோபுரத்தின் உச்சிக்கு சென்றிருக்கலாம். எனவே எச்சில் இலைக்கு போலீசார் சல்யூட் அடிக்க தேவையில்லை. காட்சிகள் மாறும், காலங்கள் மாறும். காற்று மாற்றி வீசும் போது எச்சில் இலை தெருவில் கிடக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 23ம் தேதி அன்று வேலை நாளாக அறிவிப்பு.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 29.08.2023 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

    29.08.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் திங்கள் நான்காவது சனிக்கிழமை (23.09.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881-ன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 29.08.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேப்பமூட்டில் பாதயாத்திரை நிறைவு
    • பாரதிய கட்சியினுடைய இரும்பு தூண்களாக நீங்கள் விளங்குகிறீர்கள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் தொகுதிக் குட்பட்ட பகுதியில் அண்ணாமலை இன்று பாதயாத்திரை மேற்கொண்டார். வேப்பமூட்டில் பாதயாத்திரை நிறைவு செய்து அண்ணாமலை பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- பாரதிய கட்சியினுடைய இரும்பு தூண்களாக நீங்கள் விளங்குகிறீர்கள்பாரதிய கட்சியினுடைய இரும்பு தூண்களாக நீங்கள் விளங்குகிறீர்கள். தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் அளவிற்கு கடந்த மாதம் 2-ந்தேதி குமரி மாவட்டத்தில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. ஒரு மாதத்தில் என் மண் என் மக்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் உங்களை தற்போது சந்தித்துள்ளேன். மூன்று நாட்களாக குமரி மாவட்டத்தில் மக்களை சந்தித்து வருகிறேன்.

    பாரதத்திற்கு துணை நிற்கும் மண் நமது மண். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை செய்துதம்பி பாவலர், ஜீவானந்தம் அய்யா வைகுண்டர் பிறந்த மண்ணாகும். காமராஜர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது அவரை தோற்கடிக்க தி.மு.க. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. மதத்தை பிடித்து தி.மு.க. அரசியல் செய்தது.

    இந்து நாடார் கிறிஸ்தவ நாடார் என இரண்டாக பிரித்து தி.மு.க. அரசியல் செய்தது. தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகத்தை தாண்டி காமராஜரை வெற்றி பெற வைத்த மண்ணாகும். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் எம்.ஆர்.காந்திக்கு வாக்களித்து அவரையும் சட்டமன்றத்திற்கு அனுப்பி உள்ளீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது குமரி மாவட்டத்தின் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும்.காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்ட நெய்யாறு அணையில் தண்ணீர் வரவில்லை. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு கலைவாணர் பெயரை மாற்றி விட்டு கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என துடித்தார்கள். இதை தடுக்க பாரதிய ஜனதாவினர் கடுமையாக போராடினார்கள். இதன்விளைவாக மீண்டும் கலைவாணர் பெயர் மாநகராட்சிக்கு சூட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் பேசும்போது தமிழக பாரதிய ஜனதா கட்சி வேறு வேறு கட்சியிலிருந்து தலைவர்களை கடன் வாங்குகிறார்கள் என்று பேசியுள்ளார். வேறு வேறு கட்சியிலிருந்து தலைவர்களை வாங்கும் அளவிற்கு பாரதிய ஜனதா இல்லை. இந்திரா காந்தி தமிழகத்திற்கு வரும்போது தி.மு.க. அரசு அவரை கேவலப்படுத்தியது.

    3 ஆண்டுகள் கழித்து இந்திரா காந்தி தமிழகத்திற்கு வரும்போது நேருவின் மகளே வா என்று வரவேற்றது. குமரி மாவட்ட தலைவர்களின் வரலாறு பாட புத்தகத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தி.மு.க.விற்கு அடிமையாக உள்ளது. தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்களாக பார்க்கிறோம். ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே 208 கோடி ரூபாய் செலவில் பாலம்அமைக்க அடிக்கல் நாட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. 1964-ல்தனுஷ்கோடியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தனுஷ்கோடி யாரும் கண்டு கொள்ளவில்லை.

    6 முறை தி.மு.க. ஆட்சி செய்த பிறகு கூட தனுஷ்கோடிக்கு என்ன செய்தார்கள். ஆனால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ரூ.208 கோடியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தார். ரூ.78 கோடியில் சாலை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார். 1964-க்கு பிறகு தனுஷ்கோடிக்கும எதையும் தி.மு.க. செய்யவில்லை. ஆனால் பாரதிய ஜனதா அரசு தான் செய்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் துண்டு சீட்டில் எழுதிக் கொடுப்பதை படித்து வருகிறார். 2004 முதல் 2014வரை 85 மீனவர்கள் இலங்கை படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்களின் பாதுகாவலனாக பாரதிய ஜனதா அரசு விளங்குகிறது. ஆனால் ராமநாதபுரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களுக்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை என்று பேசியுள்ளார்.

    நடிகர் வடிவேல் காமெடி விட இந்தியா கூட்டணியில் திமுக இருப்பது மிகப்பெரிய காமெடியாகும். மீனவர்களுக்கென்று தனி அமைச்சரவை உருவாக்கியது பாரதியஜனதா அரசு தான்.அதில் இணை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த முருகன் அவர்களை அமர வைத்து அழகு பார்த்து உள்ளார். மீனவர்களின் நண்பனாக பிரதமர் மோடி உள்ளார். படகுகளுக்கு இரண்டு லட்சத்திலிருந்து ரூ80 லட்சம் வரை மானியம் வழங்கி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு கிசான் கார்டு வழங்குவது போன்று மீனவர்களுக்கு மீன் விவசாயி என்று அனைத்து சலுகைகளையும் வழங்கி வருகிறார் .

    கடன் வாங்குவதில் நம்பர் ஒன் ஆக தி.மு.க. அரசு விளங்குகிறது. கடன் வாங்குவதில் தமிழக மூன்றாவது இடத்தில் இருந்தது. தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடன் வாங்கியதில் தமிழகம் நம்பர் ஒன்னாக உள்ளது .இதை தான் திமுக சாதனையாக உள்ளது.

    ஆனால் பிரதமர் மோடி நாட்டினுடைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார். தற்பொழுது பொருளாதார வளர்ச்சியல் இந்திய 5-வது இடத்தில் உள்ளது. அடுத்த முறை ஆட்சிக்கு வந்து மூன்றாவது இடத்திற்கு கொண்டு வருவோம். தமிழகம் குடிப்பதில் முதல் மாநிலமாக விளங்கி உள்ளது. 22 சதவீதம் டாஸ்மார்க் வருவாய் உயர்ந்துள்ளது. 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் 18 சதவீதம் பேர் மதுவிற்கு அடிமையாக இருப்பதாக ஆய்வு சொல்கிறது.

    இரண்டு லட்சம் மீனவர்களுக்கு வீடு கட்டி கொடுப்போம் என்று சொன்ன தி.மு.க. ஒரு செங்கலை கூட வைக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று கூறினீர்கள்.அதற்கு கூட ஒரு செங்கல் வைக்க வில்லை.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட எந்த திட்டத்தையும் குமரி மாவட்ட மக்களுக்கு செய்யவில்லை. 2024 -ல் தி.மு.க. மீண்டும் உங்களை ஏமாற்ற வருவார்கள். 2024-ல் நடக்கும் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல.142 கோடி இந்தியர்களை நம்பி மோடி தேர்தலில் நிற்கிறார். மூன்றாவது முறையாக பிரதமராக வரும்போது வல்லரசு நாடாக இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்று கூறியுள்ளார். சாமானிய கடை கோடி மக்களுக்காக ஆட்சி செய்வேன் என்று பிரதமர் கூறியுள்ளார். நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றுவார். 400 எம்பிக்களுடன் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்வார். பாராளுமன்ற தேர்தலில் முதல் வெற்றி கன்னியாகுமரி தொகுதியில் இருந்து இருக்க வேண்டும்.பிரதமர் மோடி கன்னியாகுமரி, ராமநாதபுரம் அல்லது தமிழகத்தில் உள்ள தொகுதிக்கு வந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் மு.க. ஸ்டாலின் உளறிக்கொண்டு வருகிறார். எதிரிகள் பொய்யை பேசும் போது நாம் உண்மையை சத்தமாக பேச வேண்டும். மூன்றாவது முறையாக பிரதமர் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பற்றி அனைவரும் நாம் எடுத்துகூற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்

    • உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
    • 364 முகாம்களில் விண்ணப்ப படிவுகள் பெறப்பட்டது

    நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. முதல் கட்ட முகாம் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் தாலுகாக்களில் உள்ள 400 இடங்களில் நடந்தது.

    3,04,414 விண்ணப்பபடிவுகள் வழங்கப்பட்டது. அதில் 2,03,268 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளது. 1 லட்சத்து 146 விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பொதுமக்கள் வழங்கவில்லை. இந்த நிலையில் 2-ம் கட்ட முகாம் கடந்த 5-ந்தேதி முதல்
    13-ந்தேதி வரை திருவட்டார், கிள்ளியூர், கல்குளம் தாலுகாக்களில் நடந்தது. 364 முகாம்களில் விண்ணப்ப படிவுகள் பெறப்பட்டது.

    2 லட்சத்து 72 ஆயிரத்து 782 கார்டுதாரர்களுக்கு விண்ணப்பபடிவங்கள் வழங்கப்பட்டதில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 752 பேர் விண்ணப்பப்பதிவுகளை பூர்த்தி செய்து வழங்கினார்கள். 79 ஆயிரத்து 30 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கவில்லை.

    குமரி மாவட்டத்தில் 5,07,682 ரேஷன் கார்டுதாரர்களில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 20 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

    1 லட்சத்து 80 ஆயிரத்து 176 பேர் விண்ணப்பிக்கவில்லை. இதையடுத்து விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று நடந்தது. ஏற்கனவே விண்ணப்பபடிவங்கள் பெறப்பட்ட 784 இடங்களிலும் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. ஏற்கனவே கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்காத பொதுமக்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். சிறப்பு முகாம்களில் இன்று கூட்டம் குறைவாகவே இருந்தது. நாளையும், நாளை மறுநாளும் முகாம் நடக்கிறது.

    எனவே விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து வழங்காத தகுதியான நபர்கள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள முகாம்களுக்கு சென்று விண்ணப்ப படிவுகளை பூர்த்தி செய்து வழங்குமாறு அதிகாரிகள் கேட் டுக்கொண்டு னர். பூர்த்தி செய்து விண்ணப்பபடிவங்களை வழங்க செல்லும் விண்ணப்பதாரர்கள் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி புத்தகம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மின் இணைப்பு கார்டு ஆகியவற்றை எடுத்துவர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    • இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும்
    • 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவில் :  சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்று விழா நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 5.30 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கப்பட்டு பதியை சுற்றி வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பூஜித குரு சுவாமி தலைமை தாங்கினார். திருக்கொடியை பூஜிதகுரு ராஜசேகரன் ஏற்றி வைத்தார். பூஜிதகுரு தங்க பாண்டியன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்து, பள்ளியறை பணி விடைகளை செய்திருந்தனர்.

    பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகி றது. வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கி ழமை) மாலை 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடை பெறுகிறது. 9-ம் திருவிழா அன்று அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் திருவிழா அன்று இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வருகிற 28-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறு கிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை, பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறு கிறது. திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் தலைமை பதி முன்பு அன்னதானம் நடை பெறுகிறது.

    • தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் நடவடிக்கையாக
    • சாலையில் விட்டு விட்டு தப்பியோட நினைத்தார்

    நாகர்கோவில் : தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது.

    இதனால் போலீசார் சோதனை சாவடிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று களியக்காவிளை போலீசார் படந்தாலு மூடு சோதனை சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகப்படும் படி கூண்டு கட்டிய மினி லாரி ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அந்த வாகனத்தை சோதனை செய்வதற்காக நிறுத்திய போது ஓட்டுநர் வாகனத்தை சாலையில் விட்டு விட்டு தப்பியோட நினைத்தார் சுதாரித்து கொண்ட போலீ சார் டிரைவரை மடக்கி பிடித்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பாற சாலை பகுதியை சார்ந்த அனில் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் மினி லாரியை சோதனை செய்து பார்த்த போது அதில் சுமார் 5 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கபட்டது.

    இந்த ரேசன் அரிசி பணக்குடியில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து வாக னத்தையும் ஓட்டுநரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்ற போலீசார் ஓட்டுநரி டம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்த கடத்தல் மினி லாரியையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர் வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாகனத்தை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

    • இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் காரில் வந்து கொண்டு இருந்தார்
    • என்ஜின் பகுதியில் புகை வருவது கண்டு காரை ஓரமாக நிறுத்தினார்

    நாகர்கோவில் : திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் பென்னி சாலமன் (வயது 45). இவர் நேற்று தனது காரில் நாகர்கோவில் சென்றார். பின்பு இரவு 9 மணி அளவில் இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரின் முன்பக்கம் என்ஜின் பகுதியில் புகை வருவது கண்டு காரை ஓரமாக நிறுத்தினார். அப்போது கவுன்சிலர் செந்தில் ராமலிங்கம் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் விட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் இதுகுறித்து திங்கள்நகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜான் வின்ஸ் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது. கார் தீப்பிடிக்க தொடங்கியதும் சாலமன் இறங்கி விட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    • முக்காடு பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
    • ஒரு துணிக்கடையில் ஊழி யராக வேலை பார்த்து வந்தார்.

    நாகர்கோவில் :  திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவர் கடந்த சில வருடங்களாக குமரி மாவட்டம் குளச்சல் அருகே முக்காடு பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மதுபாலா (24). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மதுபாலா கடந்த 2 மாத மாக குளச்சலில் ஒரு துணிக்கடையில் ஊழி யராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு துணிக்கடை யில் வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பிய மதுபாலா வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் மாடசாமி நெல்லை மாவட்டத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் சென்று தேடினார். ஆனால் மதுபாலா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து மாடசாமி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மதுபாலாவை தேடி வந்தனர். இந்நிலை யில் மதுபாலா நேற்று முன்தினம் இரவு குளச்சல் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது அவர் பெள்ளாச்சியில் தோழியை பார்க்க சென்று வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். உடனே மதுபாலாவின் வீட்டினருக்கும், மாடசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் போலீஸ் நிலை யம் வர ழைக்கப் பட்டனர். கணவரை பார்த்ததும் மதுபாலா மாடசாமியுடன் செல்ல மாட்டேன் என மறுப்பு தெரிவித்தார். கணவர் வேண்டாம் என்றால் முறைப்படி விவாகரத்து பெற வேண்டும் என மதுபாலாவுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். பின்னர் மதுபாலாவை அவரது அம்மாவுடன் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இரவு அம்மாவுடன் படுத்து தூங்கிய மதுபாலா நேற்று முன்தினம் இரவு மீண்டும் மாயமானார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்
    • தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டங்களான தனி நபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கையினை கலைஞர்களுக்கு கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தினை சிறு பான்மையினர் மக்கள் அறிந்து கடன் பெற்று வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் வகையில் கடன் விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் வருகிற 22-ந்தேதி அன்றும், திருவட்டார் தாலுகா அலு வலகத்தில் 28-ந்தேதி அன்றும், கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் 24-ந்தேதி அன்றும், கல்குளம் தாலுகா அலுவலகத்தில் 28-ந்தேதி அன்றும், தோவாளை தாலுகா அலுவலகத்தில் 31-ந்தேதி அன்றும் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெறும், சிறப்பு முகாம்களில் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

    தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை நகல், தொழில் திட்ட அறிக்கை கூட்டுறவு வங்கி புத்தக நகல் மற்றும் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங் கள் சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒருவர் கைது; 2 டிரைவர்களுக்கு வலைவீச்சு
    • ஜே.சி.பி. மூலம் டெம்போவில் கனிமவள கற்கள்

    நாகர்கோவில் : குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சி கரையாகுளம் பகுதியில் ரீத்தாபுரம் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வன் (வயது 31) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.நேற்று மதியம் இந்த கிராம நிர்வாக அலுவலக எல்லைக்குட்பட்ட குளவிளை முண்டன்பிலா விளையில் அனுமதியின்றி கனிமவள கற்கள் டெம்போவில் ஏற்றி செல்லப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு ஜே.சி.பி. மூலம் டெம்போவில் கனிமவள கற்கள் ஏற்றிக்கொண்டிருந்தனர். அதை கண்டதும் அவர் டெம்போவில் கற்கள் ஏற்றுவதை தடுத்தார். அப்போது அங்கு நின்ற ஆனக்குழியை சேர்ந்த விஜயகுமார் (50) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனை பிடித்து தள்ளிவிட்டார். அதே நேரத்தில் டெம்போ டிரைவர் வேகமாக ஓட்டி தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விஜயகுமார் மற்றும் ஜே.சி.பி. டிரைவர், டெம்போ டிரைவர் ஆகியோர் மீது அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் விஜயகுமாரை கைது செய்து, ஜே.சி.பி.யையும் பறிமுதல் செய்தனர். தப்பி சென்ற ஜே.சி.பி. மற்றும் டெம்போ டிரைவர்களை தேடி வருகின்றனர்.

    ×