search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரியில் அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற 51 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
    X

    வடசேரியில் அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற 51 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • மாநாடு வெற்றி பெற 101 தேங்காய் உடைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    நாகர்கோவில் :

    மதுரையில் நாளை (20-ந்தேதி) அ.தி.மு.க. எழுச்சி மாநாடு நடக்கிறது. இதை யொட்டி எம்.ஜி.ஆரை போற்றும் வித மாக நாகர்கோ வில் கவுன்சிலர் அக்ஷயா கண்ணன் ஏற்பாட்டில் கேக் வெட்டப்பட்டது. இதற்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி 51-வது ஆண்டை கொ ண்டாடும் விதமாக 51 கிலோ கேக் வெட்டி மாநாடு வெற்றி பெற 101 தேங்காய் உடைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்ப ட்டன.

    மாநாட்டிற்கு பொது மக்களை அழைக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், முருகே ஸ்வரன், ஜெவின் விசு, ஆர ல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா, ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், முன்னாள் நகர செயலாளர்கள் சந்துரு, சந்திரன், ஒன்றிய செயலா ளர் மகாராஜா பிள்ளை, வீராசாமி, பொன் சுந்தர்நாத், பொன்சேகர் ராஜ்குமார், ராதாகிருஷ்ணன், அசோக்குமார், தோவாளை வடக்கு ஒன்றிய பிரதிநிதி ஆரல்கிருஷ்ணன், பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×